தினசரி செய்திகள்

Saturday, November 2, 2013

பாகிஸ்தான்: கற்பழிக்கப்பட்டு புதைக்கப்பட்ட 13 வயது சிறுமி உயிருடன் வந்தார் 13 year old molestation victim surface after buried alive

பாகிஸ்தான்: கற்பழிக்கப்பட்டு புதைக்கப்பட்ட 13 வயது சிறுமி உயிருடன் வந்தார் 13 year old molestation victim surface after buried alive

இஸ்லாமாபாத், நவ. 2-

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள தோபா தேக் சிங் என்ற இடத்தில் கடந்த வாரம் தனியாக சென்ற 13 வயது சிறுமியை வழிமறித்த 2 பேர் அவரை கதறக் கதற கற்பழித்தனர்.

அந்த சிறுமியை உயிருடன் விட்டால் விஷயம் வெளியே தெரிந்து ஆபத்தாகி விடும் என நினைத்து இருவரும் சேர்ந்து ஒரு குழியை தோண்டி மயங்கிய நிலையில் இருந்த அவளை உயிருடன் புதைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தனர்.

மயக்கம் தெளிந்த சிறுமி, தான் மண்ணுக்குள் புதைக்கப்பட்டதை அறிந்து, முட்டி மோதி மண்ணை தள்ளி புதைகுழியில் இருந்து மீண்டு வந்தாள்.

அவ்வழியாக வந்த சிலர் அவளது வீட்டிற்கு அழைத்து சென்று விட்டனர்.

இந்த கொடிய சம்பவம் தொடர்பாக சிறுமியின் தந்தை அளித்த புகாரை ஏற்றுக் கொள்ள போலீசார் மறுத்து விட்டனர்.

இதனையடுத்து, லாகூர் ஐகோர்ட் உயர் நீதிபதியின் தனிப்பிரிவில் அவர் புகார் அளித்தார். அதன் பின்னர், நீதிபதியின் உத்தரவையடுத்து அந்த சிறுமியை கற்பழித்து உயிருடன் புதைத்த 2 குற்றவாளிகளையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

...

shared via

Thursday, October 31, 2013

அஞ்சலி – செருப்பால் அடிப்போம்! இயக்குனர் கொதிப்பு! actress anjali and kalanjiyam latest news

அஞ்சலி – செருப்பால் அடிப்போம்! இயக்குனர் கொதிப்பு!

திடீரென்று காணாமல் போய்விட்டதால் தமிழ்த்திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை அஞ்சலி, தற்போது தெலுங்கில் நடித்து வந்த திரைப்படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நிம்மதியாக வலம் வருகிறார் . ஆனால் தமிழில் அஞ்சலியை வைத்து 'ஊர் சுற்றி புராணம்' படம் எடுத்த இயக்குனர் களஞ்சியமோ பிரச்சனைகளில் சிக்கித்தவித்துக் கொண்டிருக்கிறார்.

நேற்று(30.10.13) நடந்த 'வலியுடன் ஒரு காதல்' திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய களஞ்சியம் " சிறு பட தயாரிப்பாளர்களுக்கு திரையுலகில் சரியான ஆதரவு இல்லை. தயாரிப்பாளர்களுக்கென சங்கம் இருந்தும் நான் சட்டத்தின் உதவியை நாடியிருக்கிறேன். சிறு பட தயாரிப்பாளர்கள் பெரும் போராட்டங்களுக்கிடையில் முதலீடு செய்து படம் எடுக்கிறோம். ஆனால் அந்த கஷ்டம் தெரியாமல் அஞ்சலி போன்ற நடிகைகள் ஓடி ஒளிந்துகொண்டது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. என் படம் பாதியில் நிற்கிறது. அஞ்சலி ஹைதராபாத்தில் இருப்பதாக சொல்கிறார்கள். அஞ்சலி இப்போது எங்கே இருக்கிறார் என்றே எனக்கு தெரியவில்லை" என மிகவும் வருதி பேசினார்.

இயக்குனர் மு.களஞ்சியத்தை தொடர்ந்து பேசிய தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளில் ஒருவரான ஜாக்குவார் தங்கம் "ஒரு கலைஞன் இந்த அளவுக்கு வேதனையாக பேசுவது ஆரோக்கியமான விஷயம் அல்ல. கலைஞர்களின் கஷ்டம் புரியாமல் ஓடி ஒளியும் நடிகைகளை செருப்பால் அடிக்கவேண்டும். அஞ்சலி எங்கு ஓடிப்போய் ஒளிந்திருந்தாலும் பிடித்து வந்து களஞ்சியம் படத்தில் நடிக்கவைக்கவேண்டும். அப்போது தான் இனி வரும் நடிகைகள் ஒழுங்காக இருப்பார்கள். அஞ்சலி இங்கு வந்து களஞ்சியம் படத்தில் நடிக்க வேண்டும் அல்லது படத்திற்கு இதுவரை ஆன செலவை கொடுக்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும்" என்று கூறினார்.

shared via

என்னை மிருகத்தனமாக தாக்கிய கற்பழிப்பு குற்றவாளியை அடித்து உதைக்க அனுமதி தாருங்கள்: நீதிபதி முன் பெண் கதறல் Allow me to kick off the torture criminal Judge prior girl Tears

என்னை மிருகத்தனமாக தாக்கிய கற்பழிப்பு குற்றவாளியை அடித்து உதைக்க அனுமதி தாருங்கள்: நீதிபதி முன் பெண் கதறல் Allow me to kick off the torture criminal Judge prior girl Tears

மும்பை, அக். 31–

மும்பை சக்தி மில்ஸ் காம்பவுண்டில் சில மாதங்களுக்கு முன்பு பெண் போட்டோ கிராபர் தனது நண்பருடன் படம் பிடிக்க சென்றார். அப்போது அங்கு இருந்த 5 பேர் கும்பல் நண்பரை கட்டிப் போட்டு பெண் போட்டோகிராபரை கொடூரமாக கற்பழித்தது.

டெல்லியில் மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்டது போல் மும்பையில் பெண் போட்டோகிராபர் கற்பழிப்பு சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குற்றவாளிகள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீதான வழக்கு மும்பை விரைவு கோர்ட்டில் நடந்து வருகிறது.

நேற்று இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டு இருந்த போது திடீர் என்று 18 வயது இளம் பெண் வந்து நீதிபதியிடம் தானும் இந்த 5 பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்டேன் என்று பரபரப்பு புகார் கூறினார்.

தான் டெலிபோன் ஆப்ரேட்டராக வேலை பார்ப்பதாகவும், கடந்த ஜூலை 31–ந் தேதி சக்தி மில்ஸ் காம்பவுண்டு பகுதிக்கு தனது நண்பருடன் சென்ற போது 5 பேர் கும்பல் நண்பரை கட்டிப்போட்டு தன்னை கற்பழித்ததாக கூறினார்.

அவரது வாக்குமூலத்தை பதிவு செய்ய நீதிபதி உத்தரவிட்டார். அந்தப் பெண் அழுது கொண்டே தனக்கு நேர்ந்த கொடுமைகளை விவரித்தார்.

திடீர் என்று என்னை கற்பழித்த போது நான் அவர்களுடன் போராடினேன். கயவர்கள் என்னை மிருகத்தனமாக தாக்கினார்கள். அவர்களை இப்போது அடித்து உதைக்க அனுமதி தாருங்கள். (இவ்வாறு கூறிய அந்த பெண் நீதிபதியைப் பார்த்து கதறி அழுதார்)

பின்னர் கற்பழிப்பு குற்றவாளிகளை அடையாளம் காட்ட முடியுமா? என்று நீதிபதி கேட்டார். அதற்கு அந்த பெண் எனக்கு அவர்கள் அருகில் செல்லவே பயமான இருக்கிறது என்றார்.

உடனே நீதிபதி அந்தப் பெண்ணை குற்றவாளிகளிடம் பாதுகாப்பாக அழைத்துச் செல்லுமாறு கூறினார். இதையடுத்து 5 பேரில் 4 பேர்தான் தன்னை கற்பழித்தவர்கள் என்று அடையாளம் காட்டினார். சம்பவ இடத்தில் மீட்கப்பட்ட ஆடைகள் மற்றும் இதர பொருட்களையும் அந்தப் பெண் அடையாளம் காட்டினார்.

இது பற்றி வக்கீல் உஜ்வல் நிகாம் கூறுகையில், ''18 வயது பெண் திடீர் என்று கோர்ட்டில் வந்து நீதிபதியிடம் கதறி தனக்கு நேர்ந்த கொடுமையை சொன்னார். அவரது வாக்குமூலம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. குற்றவாளியை அடிக்க அனுமதி கேட்டார். அதற்கு கோர்ட்டு அனுமதிக்க வில்லை'' என்£றர்.

...

shared via

Wednesday, October 30, 2013

அரியானாவில் நண்பரின் பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்று திரும்பிய இளம்பெண் கற்பழிப்பு: 3 பேர் கைது Call centre employee gang raped in Gurgaon 3 arrested

அரியானாவில் நண்பரின் பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்று திரும்பிய இளம்பெண் கற்பழிப்பு: 3 பேர் கைது Call centre employee gang raped in Gurgaon 3 arrested

குர்கான், அக். 30-

டெல்லியில் ஐ.டி. கம்பெனிகளில் வேலை பார்க்கும் நிறைய பேர் அருகிலுள்ள அரியானா மாநிலம் குர்கானில் தங்கியுள்ளனர். நேற்று இரவு அங்கு நடந்த பிறந்த நாள் இரவு நிகழ்ச்சியில் பல கால் சென்டர் ஊழியர்கள் கலந்துகொண்டனர். இரவு நிகழ்ச்சி முடிந்ததும் விடியற்காலை 19 வயதான இளம் பெண் ஒருவர் கால்நடையாக வீடு நோக்கி சென்றார்.

அப்போது அவருக்கு தெரிந்த தினேஷ் என்ற நண்பர், அந்த இளம் பெண்ணிடம் மோட்டர் சைக்கிளில் வீட்டில் விட்டு விடுவதாக கூறியுள்ளார். இதை ஏற்றுக்கொண்ட அந்த இளம்பெண், மோட்டர் சைக்கிளில் அவருடன் சென்றுள்ளார்.

வீடு சென்றபோது தினேஷின் இரு நண்பர்கள் அங்கு வந்துள்ளனர். பிறகு அவர்கள் அனைவரும் அங்கு குளிர்பானம் அருந்தியுள்ளனர். அப்போது அவர்கள் 3 பேரும் குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து அந்த இளம்பெண்ணிடம் கொடுத்துள்ளனர். இதில் மயங்கிய அந்த இளம்பெண்ணை மூவரும் கெடுத்துள்ளனர்.

இச்சம்பவத்திற்கு பிறகு மூவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பிறகு நடந்த விபரம் குறித்து போலீசாரிடம் அந்த இளம்பெண் புகார் தெரிவித்துள்ளார். மருத்துவ அறிக்கையிலும் அந்த இளம்பெண் கற்பழிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து குற்றத்தில் ஈடுபட்ட தினேஷ், நவீன் மற்றும் சத்யதேவ் ஆகிய மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர். இதில் சத்யதேவுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

...

shared via

Tuesday, October 29, 2013

டைரக்டர் களஞ்சியம் அவதூறு வழக்கில் ஆஜராகவில்லை: நடிகை அஞ்சலிக்கு பிடிவாரண்ட் director kalanchiyam defamation case arrest warrant to actress anjali

டைரக்டர் களஞ்சியம் அவதூறு வழக்கில் ஆஜராகவில்லை: நடிகை அஞ்சலிக்கு பிடிவாரண்ட் director kalanchiyam defamation case arrest warrant to actress anjali

நடிகை அஞ்சலி கடந்த ஏப்ரல் மாதம் திடீரென்று சென்னையில் உள்ள வீட்டில் இருந்து வெளியேறினார். சித்தி பாரதிதேவியும், சினிமா டைரக்டர் களஞ்சியமும் தன்னை கொடுமை படுத்தியதாக அப்போது பரபரப்பு பேட்டி அளித்தார்.

ஐதராபாத் போலீசில் ஆஜராகி வாக்குமூலமும் அளித்தார். தற்போது ஆந்திராவிலேயே தங்கி தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். அஞ்சலியை கொடுமை படுத்தவில்லை என்றும், தன்னை இழிவு படுத்தி பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளார் என்றும் டைரக்டர் களஞ்சியம் சைதாப்பேட்டை கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு பல தடவை விசாரணைக்கு வந்தும் அஞ்சலி ஆஜராகவில்லை. கடந்த 12–ந் தேதி அஞ்சலிக்கு நேரில் ஆஜராகும்படி மீண்டும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். இன்று (29–ந்தேதி) ஆஜராக வேண்டும் என்று நோட்டீசில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதையடுத்து இன்று அஞ்சலி சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜராவார் என்று பரபரப்பு தகவல் வெளியானது.

பத்திரிகை போட்டோ கிராபர்களும், டி.வி.கேமராமேன்களும் அங்கு திரண்டு நின்றனர். சைதாப்பேட்டை 17-வது குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி ராஜலட்சுமி முன்னிலையில் அஞ்சலி வழக்கு விசாரணைக்கு வந்தது. டைரக்டர் களஞ்சியம் கோர்ட்டில் ஆஜரானார். ஆனால் அஞ்சலி வரவில்லை. அஞ்சலி தரப்பில் வக்கீல் மேகநாதன் ஆஜராகி உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அஞ்சலியால் வர இயலவில்லை என்றார்.

இதையடுத்து அஞ்சலிக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 22–ந்தேதிக்கு ஒத்தி வைத்தார். களஞ்சியம் தரப்பில் வக்கீல்கள் ஜெயப்பிரகாஷ், சுரேஷ்பாபு ஆகியோர் ஆஜரானார்கள். அஞ்சலியை கைது செய்து ஆஜர்படுத்த கோர்ட்டு உத்தரவிட்டுள்ளதால் பட உலகினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அஞ்சலி விரைவில் சரண் அடைந்து பிடிவாரண்டை ரத்து செய்ய கோருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

...

shared via

கற்பழிப்பு குற்றவாளிகளின் அந்தரங்க உறுப்பை வெட்டவேண்டும்: மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் அஜித் பவார் Ajit Pawar stokes row with his remarks on rapists

கற்பழிப்பு குற்றவாளிகளின் அந்தரங்க உறுப்பை வெட்டவேண்டும்: மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் அஜித் பவார் Ajit Pawar stokes row with his remarks on rapists

மும்பை, அக். 29-

மகராஷ்டிராவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில் ஜல்னா மாவட்ட தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி நடத்திய நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர் அஜித் பவார், கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபடுபவர்களின் அந்தரங்க உறுப்பை வெட்ட வேண்டும் என்று கூறியிருந்தார். அவர்கள் மீது கருணை காட்டக்கூடாது, உடனே அவர்கள் தூக்கிலிடப்படவேண்டும் என்றும் அவர் பேசியிருந்தார்.

அஜித் பவாரின் இந்த கருத்துக்கு எதிர்க் கட்சியான சிவசேனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.  இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் நீலம் கோரே கூறியதாவது:-

காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசின் இயலாமையை மறைக்கும் நோக்கில், அஜித் பவார் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். பெண்களின் வாக்குகளை பெறவே அவர் இதுபோன்று கீழ்த்தரமாக அறிக்கைகளை வெளியிடுகிறார்.

முன்னர் மாநிலத்தில் நிலவிய தண்ணீர் பற்றாக்குறை தொடர்பாக அவர் கூறிய கருத்துகளும் விவசாயிகளின் மத்தியில் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. அஜித் பவாரின் இந்த அறிக்கைகள் வெறும் கண் துடைப்பு வேலை.

இதுபோன்ற அறிக்கைகள் வெளியிடுவதை கைவிட்டு ஏழைகளின் உண்மையான பிரச்சினைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக செயல்படுத்தப்படாமல் உள்ள சட்டங்கள் குறித்து பதிலளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

...

shared via

Monday, October 28, 2013

உ.பி.யில் பூமியில் புதைந்து கிடக்கும் 4 ஆயிரம் கோடி தங்கம் பிளாட்டினம் கண்டுபிடிப்பு 4 thousand crore gold platinum invention at ground in UP

உ.பி.யில் பூமியில் புதைந்து கிடக்கும் 4 ஆயிரம் கோடி தங்கம் பிளாட்டினம் கண்டுபிடிப்பு 4 thousand crore gold platinum invention at ground in UP

லக்னோ, அக். 28–

உத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் மாநிலங்களுக்கு இடையே பந்தெல்கன்ட் பகுதி உள்ளது. இப்பகுதியை 16–ம் நூற்றாண்டில் ராஜபுத்திர மன்னர்கள் ஆட்சி செய்தனர். தற்போது இப்பகுதியில் ஜான்சி, பாண்டா, சித்ரகூட், தாடியா, திகம்ப்ரரி ரத், லலித்பூர், அலகாபாத், கஷஷாமபி, சாகர், தமோ, ஒரை, பின்னா, ஹமித்ரா, நர்சிங்பூர், மொகடா, பன்டா உள்ளிட்ட நகரங்கள் உள்ளன.

தங்க புதையல் பந்தெல் கன்ட் பகுதியில் தொல் பொருள் நிபுணர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டனர். உத்தரபிரதேச மாநிலம் உன்னாவோ மாவட்டத்தில் தாவுன்டியா ஹேடர் கிராமத்தில் பூமியை தோண்டி அகழ்வாராய்ச்சி செய்தனர். அதில், அங்கு தங்க படிவங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது, அதை தொடர்ந்து உத்தர பிரதேசத்தில் பந்தெல்கன்ட் பகுதியில் உள்ள ஜான்சி, ஜலாவுன், மசோபா, ஹமிபூர், பாண்டா, சித்ரகூட் மற்றும் லலித்பூர் ஆகிய 7 மாவட்டங்களில் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அங்கு தங்கம் தவிர பிளாட்டினம், சிலிகான் ஆஸ்பெஸ்டாஸ் பொட்டாஷ் உள்ளிட்ட தாது கனிமங்களும் புதைத்துகிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவை தவிர கிழக்கு உத்தரபிரதேசத்தில் உள்ள சோன்பத்ரா பகுதியிலும் பூமியில் தங்கம் இருப்பது தெரியவந்துள்ளது.

இந்த தகவலை மண்ணியல் மற்றும் சுரங்கங்களின் துறை இயக்குனர் பிங்கா உபாத்யாய் தெரிவித்துள்ளார். இப்பகுதியில் நிபுணர்களின் ஆய்வுப் பணிகள் ஏறக்குறைய முடிவடைந்து விட்டன.

அதை வைத்து பார்க்கும் போது பந்தெல்கன்ட், சோன்பாத்ரா பகுதிகளில் தங்கப்படிவங்கள் கொட்டிக்கிடப்பது உறுதியாகி விட்டது. அனேகமாக இங்குள்ள தங்கம், பிளாட்டினம் உள்ளிட்ட தாது படிவங்களின் மதிப்பு ரூ.4 ஆயிரம் கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொல்பொருள் நிபுணர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் அறிக்கையின் லலித்பூரல் உள்ள கிடார்டோரி மற்றும் குந்த் காவான் பகுதிகளில் தங்க படிவங்கள் உள்ளன. இவை 3.5 கி.மீட்டர் நீளத்துக்கு பரந்து வியாபித்து கிடக்கிறது.

தற்போதைய மதிப்பு படி இங்கு 140 கிலோ தங்கம் உள்ளது. அதன் மதிப்பு ரூ.43 கோடியாகும். லலித்பூரில் உள்ள பீர்வாரில் 87.5 கிலோ தங்கம் உள்ளது. இவற்றின் மதிப்பு ரூ.26.25 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

சோன், பாத்ராவில் உள்ள ஹார்டி மற்றும் பாகிசோடி பகுதிகளில் கிடைத்த மண் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அங்கும் 1200 மீட்டர் நீளம், 18 மீட்டர் அகலத்தில் தங்க படிவங்கள் புதைந்து கிடப்பது கண்டறியப்பட்டுள்ளது. இப்பகுதியில் மட்டும் 25 கிலோ தங்கம் கிடைக்கும் என நம்பப்படுகிறது. இதன் மதிப்பு ரூ.7.5 கோடியாகும். அதே நேரத்தில் ஜான்சி மாவட்டத்தில் நடத்திய ஆய்வில் இங்கு மிகவும் பணம் கொழிக்கும் கனிம வளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இங்கு 4.5 கோடி டன் சிலிகா தாது உள்ளது. இதன் மதிப்பு ரூ.890 கோடி, இதை இப்பகுதியில் உள்ள இரும்பு, ஸ்டீல், செராமிக்ஸ் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்த முடியும். அதை தவிர ஜான்சியின் பதாகான் – மவுரானிபூர் பகுதியில் 1.3 கி.மீட்டர் நீளத்துக்கு ஆஸ்பெஸ்டாஸ் தாது உள்ளது. அதன் மதிப்பு ரூ.1200 கோடி, லலித்பூரியிலும் சிலிகா தாது படிவங்கள் உள்ளன. இங்கு 1.2 கோடி டன் சிலிகா படிவங்கள் உள்ளன. இதன் மதிப்பு ரூ. 237 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இகானா – டாங்கிலி பகுதியில் பிளாட்டினம் இனத்தை சேர்ந்த கனிமங்கள் உள்ளன. இவை 3.5 கி.மீட்டர் தூரத்துக்கு விரிந்து கிடக்கிறது.

இது தமிழ்நாடு, கோவா, நாகாலாந்து மாநிலங்களில் இருப்பதை விட அதிகமாகும். சித்ரகூட் மாவட்டத்தில் செம்ரி மற்றும் ரேவா பகுதியில் உள்ள பாறைகளில் பொட்டாஷ் கனிமம் உள்ளது. மகோபாவில் 1 கோடி டன் சிலிகா உள்ளது. அதன் மதிப்பு ரூ.198 கோடி.

இந்தியாவை பொறுத்தவரை உத்தரபிரதேச மாநிலத்தில் தான் கனிமவளங்கள் மிக குறைவாக கிடைத்து வந்தன. அதுவும் இங்கு டோலமைட், சுண்ணாம்புக்கல், மேக்னசைட், பாஸ்போரைட் போன்ற சாதாரண கனிமங்கள் தான் கிடைத்தன.

தற்போது, இங்கு முதன் முறையாக தங்கம், பிளாட்டினம், சிலிகா, இஸ்பெஸ்டாஸ் போன்ற உயர்ரக கனிம வளங்கள் புதைந்து கிடப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவிலேயே வளமான மாநிலமாக உத்தரபிரதேசம் திகழும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

...

shared via

மகாராஷ்டிராவில் மாணவர்களை கால் அமுக்கி விட வைத்த ஆசிரியை சஸ்பெண்ட் Teacher suspended gets foot massage from students in Maharashtra

மகாராஷ்டிராவில் மாணவர்களை கால் அமுக்கி விட வைத்த ஆசிரியை சஸ்பெண்ட் Teacher suspended gets foot massage from students in Maharashtra

மும்பை, அக்.28-

மகாராஷ்டிர மாநிலத்தில் மாணவர்களை கால்பிடித்து விடச் செய்த ஆசிரியை பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் அகோலா பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 7-ம் வகுப்பு ஆசிரியை ஒருவர், மாணவர்களை கால் பிடித்து விடும்படி கூறியுள்ளார். அதன்படி ஒரு மாணவர், மேஜைக்கு அடியில் உட்கார்ந்து ஆசிரியையின் காலை பிடித்து மசாஜ் செய்யத் தொடங்கினான்.

இந்த காட்சியை ஒரு மாணவன் தனது செல்போனில் வீடியோ எடுத்து, பரவ விட்டதால் ஆசிரியையின் செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்த வீடியோ பதிவை ஆய்வு செய்த கல்வித்துறை, சம்பந்தப்பட்ட ஆசிரியையை தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளது. மேலும் இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

...

shared via

இவர்கள் வருங்காலத் தூண்கள் !!! Varungala thoonkal

இவர்கள் வருங்காலத் தூண்கள் !!!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கல்லூரி மாணவர்கள் குடி போதையில் தெருவில் கிடக்கும் வேதனை காட்சி! போட்டோ நன்றி:-இளையராஜா டென்டிஸ்ட்

இதோ இது!!! இன்று திடீரென நடக்கவில்லை,இன்று நிறைய நடக்கிறது, மாணவர்களுக்கு போதையும் [டாஸ்மாக்] காமமும் [மொபைல் போன்-மெமெரி கார்டு]கைக்கெட்டும் தூரத்தில் உள்ளது. குடியும் ஒரு மோசமான நோய் தான்.குடிகாரனிடம் தைரியமும் கட்டற்ற காமமும் அதீதம் இருக்கும்,அது கொண்டு சமூகத்தில் வெட்கப்படாமல் எது வேண்டுமானாலும் செய்வார்கள்.

பணம் வருகிறது என்று மாணவர்கள் எனத் தெரிந்தும் டாஸ்மாக்கில் மதுபானம் விற்கின்றனர்,மாணவர்கள் அங்கேயே குடிக்கின்றனர், இப்படி தெருவில் விழுந்து புரள்கின்றனர்.தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை விடாது.[ஒரு சில விதிவிலக்குகள் இருக்கலாம்] மாணவர்களுக்கு சிகரெட்,பான்பராக்,மானிக்சந்த்,ஹான்ஸ்,சாந்தி பாக்கு, ஃபவிகுவிக்,டைப்பிங் ஒயிட்னர் விற்கும் கடைக்காரர்கள் கூட மனசாட்சி இல்லாதவரே,இந்த பிழைப்பு பிழைப்பதற்கு பரத்தையரை கூட்டிக்கொடுத்து பிழைக்கலாம்.அவர்கள் வருங்கால தூண்களின் அஸ்திவாரத்தையே சிதைப்பவர்கள்.

நேற்று ஒரு 10ஆம் வகுப்பு மாணவன்,ஓரினச்சேர்க்கைக்கு ஒத்துழைக்கவில்லை என ஒரு 7ஆம் வகுப்பு மாணவனை செப்டிக் டான்கில் தள்ளி மூழ்கடித்து கொன்றுள்ளான்,தன் அப்பா,நெருங்கிய உறவுகள் சிகரட் குடித்தாலோ,மது குடித்தாலோ அவன் அதை தவறென கருதுவது இல்லை,வீட்டில் ஒழுக்கம் இருந்தால் வெளியிலும் ஒழுக்கமாக இருப்பான்,இன்றைய பெற்றோர் ஒருவர் மாற்றி ஒருவர் நேரம் செலவிட்டு கண்காணிக்க வேண்டியது அவசியம்.

போதை போதாமல் போகையில் நிறைய குடிக்க தோன்றும்,நிறைய குடிக்க நிறைய செலவு ஆகையில் மாணவர்கள் அப்பா வாங்கித் தந்த பைக்கில் இருவராகவோ,மூவராகவோ சென்று தாலிச்சங்கிலி அறுக்கின்றனர்.குடி போதையில் அம்மாவின் தாலிச்சங்கிலியையே தெருவில் வைத்து அறுத்தான் ஒரு மாணவன் எனப் படிக்கும் காலம் தொலைவில் இல்லை.ஒரு நாள் போலீஸ் நம் வீட்டுக்கு தேடி வரும் முன்னர் சுதாரித்துக் கொள்வோம்.பிள்ளைகளிடம் மனம் விட்டு பேசுவோம்.அவர்களுக்கு முன்னுதாரணமாக இருப்போம்.கல்விக்கு முக்கியத்துவம் தரவேண்டிய அரசாங்கமே டாஸ்மாக் நடத்தினால்,இது தான் நடக்கும்...நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்...

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கல்லூரி மாணவர்கள் குடி போதையில் தெருவில் கிடக்கும் வேதனை காட்சி!

shared via

ஸ்பெக்ட்ரம் வழக்கு: தயாளு அம்மாளிடம் விசாரணை தொடங்கியது Spectrum case interrogation has started Dayalu Ammal

ஸ்பெக்ட்ரம் வழக்கு: தயாளு அம்மாளிடம் விசாரணை தொடங்கியது Spectrum case interrogation has started Dayalu Ammal

சென்னை, அக். 28–

2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி கொடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் கலைஞர் டி.வி.யின் பங்குதாரரான தயாளு அம்மாள் நேரில் ஆஜராக வேண்டும் என்று டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு கடந்த மே மாதம் உத்தரவிட்டது.

ஆனால் தயாளு அம்மாள் உடல் நிலை சீராக இல்லாததால் கோர்ட்டில் ஆஜராக விலக்கு அளிக்கும்படி சுப்ரீம் கோர்ட்டில் தயாளு அம்மாள் மகள் செல்வி மனு தாக்கல் செய்தார்.

அதனை விசாரித்த நீதிமன்றம் தயாளு அம்மாளின் உடல் நிலையை பரிசோதிக்க டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவ குழுவை நியமித்து அனுப்பியது.

அவர்கள் தயாளு அம்மாளை பரிசோதித்து டெல்லிக்கு பயணம் செய்யும் நிலையில் அவரது உடல் நிலை தகுதியாக இல்லை என்று கோர்ட்டில் அறிக்கை அளித்தது.

இதை தொடர்ந்து தயாளு அம்மாளின் சாட்சியத்தை கோபாலபுரம் வீட்டுக்கு சென்று பதிவு செய்யும்படி சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்ற முதன்மை நீதிபதி கோபாலனிடம் டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு நீதிபதி ஓ.பி.சைனி கேட்டுக் கொண்டார்.

அதன்படி தயாளு அம்மாளிடம் விசாரணை நடத்த கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதி வீட்டுக்கு நீதிபதி கோபாலன் இன்று காலை 9.50 மணிக்கு சென்றார். அங்கு தயாளு அம்மாளிடம் விசாரணை நடத்தினார். அவர் கூறிய தகவல்களை சாட்சியமாக பதிவு செய்தனர்.

கோர்ட்டு உத்தரவுபடி இன்றைய விசாரணையின் போது, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கனிமொழி எம்.பி, முன்னாள் மத்திய மந்திரி ராசா சார்பில் அவரது வக்கீல், கலைஞர் டி.வி. முன்னாள் இயக்குனர் சரத்குமார் ரெட்டி ஆகியோரும் ஆஜரானார்கள். சரத்குமார் தரப்பில் ஆஜராக அவரது வக்கீல் சுசில்குமார் வீல் சேரில் வந்தார்.

தாயாளு அம்மாளிடம் விசாரணை நடந்ததை தொடர்ந்து கருணாநிதி வீட்டு முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

...

shared via

Sunday, October 27, 2013

இறந்த மனைவியின் இறுதி ஆசையை நிறைவேற்ற மறுமணம் செய்து கொண்ட 90 வயது சவுதி இளைஞர் 90 year old man remarries to keepup deceased wifes wish

இறந்த மனைவியின் இறுதி ஆசையை நிறைவேற்ற மறுமணம் செய்து கொண்ட 90 வயது சவுதி இளைஞர் 90 year old man remarries to keepup deceased wifes wish

ரியாத், அக். 28-

சவுதி அரேபியாவில் உள்ள தயிப் நகரை சேர்ந்தவர் ஃபட்டீஸ் அல் தகாவி (90). இவருடன் இல்லற வாழ்க்கையில் இணைந்து 7 மகன்கள், 5 மகள்கள் என ஒரு டஜன் குழந்தைகளை பெற்றெடுத்த இவரது மனைவி சில மாதங்களுக்கு முன்னர் மரணமடைந்தார்.

மரணப்படுக்கையில் கிடந்த அவர், என் மூச்சுக்கு பிறகு நிங்கள் யாரையாவது திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ வேண்டும் என்று வாக்குறுதி வாங்கி கொண்டார்.

தாய்க்கு அளித்த வாக்குறுதியை தந்தை காப்பற்ற வேண்டுமே.. என்ற எண்ணத்தில் ஃபட்டீஸ் அல் தகாபியின் பிள்ளைகள் பெண் தேடும் படலத்தில் இறங்கினர்.

இளம் வயது பெண்களை நிராகரித்த மகள்கள் 53 வயதான குழந்தை பாக்கியமில்லாத விதவையை தேர்வு செய்தனர். அந்த பெண்ணுடன் 90 வயது இளைஞர் ஃபட்டீஸ் அல் தகாபிக்கு கடந்த வாரம் திருமணம் நடந்தது.

...

shared via

பாட்னா – டெல்லியில் பொதுக்கூட்டம்: நரேந்திரமோடி–ராகுல் இன்று பிரசாரம் Patna delhi meeting modi rahul propaganda

பாட்னா – டெல்லியில் பொதுக்கூட்டம்: நரேந்திரமோடி–ராகுல் இன்று பிரசாரம் Patna delhi meeting modi rahul propaganda

புதுடெல்லி, 27–

இந்த ஆண்டு இறுதியில் 5 மாநில சட்டசபை தேர்தலும், அடுத்த ஆண்டு மே மாதத்துக்குள் பாராளுமன்ற தேர்தலும் நடைபெற இருக்கிறது. தேர்தலை சந்திக்க காங்கிரஸ், பாரதீய ஜனதா உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன.

பாரதீய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திரமோடி அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் சார்பில் பிரதமர் வேட்பாளர் அறிவிக்காவிட்டாலும், ராகுல்காந்தி முன்னிலைப் படுத்தப்பட்டு வருகிறார்.

நரேந்திரமோடி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் தொடங்கி தேர்தல் பிரசார கூட்டங்களில் பேசி வருகிறார். அவருக்கு போட்டியாக ராகுல்காந்தியும் பிரசார களத்தில் குதித்துள்ளார்.

பொதுக்கூட்டங்களில் இருவரும் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிப் பேசி வருகிறார்கள். நரேந்திர மோடி, காங்கிரஸ் அரசின் ஊழல்களையும், விலைவாசி உயர்வு, குடும்ப அரசியல், எல்லையில் பாகிஸ்தானின் அத்துமீறல், வெங்காயம் விலை உயர்வு போன்றவற்றை மக்களிடம் எடுத்துக்கூறி வருகிறார்.

இதற்கு ராகுல்காந்தியும் பதிலடி கொடுத்து வருகிறார். ராஜஸ்தான் மாநிலம் இந்தூரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், முசாபர் நகரில் பாரதீய ஜனதா தான் கலவரத்தை தூண்டியது என்றும், கலவரத்தில் பாதிக்கப்பட்ட இளைஞர்களுடன் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பு தொடர்பு கொண்டு நாசவேலைகளை அரங்கேற்றியதாக கூறினார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ராகுல் காந்தி பேச்சு குறித்து தேர்தல் கமிஷன் அதிகாரிகளிடம் பாரதீய ஜனதா நாளை புகார் செய்ய உள்ளது. இந்தூர் கோர்ட்டில் ராகுல்காந்தி மீது வழக்கும் தொடரப்பட்டு உள்ளது.

இதற்கிடையே இன்று நரேந்திரமோடி பீகார் மாநிலம் பாட்னாவில் நடக்கும் பொதுக்கூட்டத்திலும், ராகுல்காந்தி டெல்லியில் நடைபெறும் கூட்டத்திலும் பேசுகிறார்கள்.

பீகார் மாநிலத்தில் பாரதீய ஜனதா – ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி முறிந்த நிலையில் அங்கு முதல் முறையாக இன்று பிரசார கூட்டத்தில் நரேந்திரமோடி பங்கேற்கிறார்.

பாரதீய ஜனதாவின் எதிரியான முதல்–மந்திரி நிதிஷ்குமாருக்கு தனது பலத்தை காட்டுவதற்காக கூட்டத்துக்கு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொண்டர்கள் கலந்து கொள்ள 14 சிறப்பு ரெயில்களும், 3 ஆயிரம் பஸ்களும் இயக்கப்பட்டன. அவர்கள் இன்று காலையே பாட்னா வந்து குவிந்துள்ளனர்.

இது பாரதீய ஜனதாவின் கவுரவ பிரச்சினை என்றும், பாட்னாவில் கூட்டம் நடை பெறும் காந்தி மைதானத்தில் 5 லட்சம் தொண்டர்கள் கூடுவார்கள் என்றும் மாநில நிர்வாகிகள் தெரிவித்தனர். பாட்னாவில் எங்கு பார்த்தாலும் தொண்டர்கள் கூட்டம் காணப்பட்டது.

கூட்டத்தில் நரேந்திர மோடி பேசுகையில், பீகார் மாநில வளர்ச்சிக்காக அதற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்துவார், ஏற்கனவே இதே கோரிக்கையை முதல்–மந்திரி நிதிஷ்குமாரும் வலியுறுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாட்னாவில் நரேந்திர மோடி பேசும் அதே வேளையில் டெல்லியில் காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் ராகுல்காந்தி பேசுகிறார்.

டெல்லி மங்கோள்புரி பகுதியில் ராகுல்காந்தி பேசுவதற்காக பிரமாண்ட பொதுக்கூட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நரேந்திரமோடிக்கு தொண்டர்கள் கூட்டம் வருவது போல் ராகுல்கூட்டத்திலும் தொண்டர்கள் கூட்டத்தை காட்ட காங்கிரஸ் தலைவர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.

டெல்லி சட்ட சபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்பு டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் ராகுல் காந்தி இன்று முதல் முறையாக பேசுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் வெங்காயம் விலை உயர்வு பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. எதிர்க்கட்சிகள் இதை கையில் எடுத்துக் கொண்டு பிரசாரம் செய்வதால் ராகுல் காந்தியும் பதிலடி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

...

shared via

டெல்லியில் நள்ளிரவில் ராகுல்காந்தி, காரில் தனியாக நாய்களுடன் உலா வந்தார் Rahul Gandhi in Delhi midnight the dogs alone in the car came with a tour

டெல்லியில் நள்ளிரவில் ராகுல்காந்தி, காரில் தனியாக நாய்களுடன் உலா வந்தார் Rahul Gandhi in Delhi midnight the dogs alone in the car came with a tour

புதுடெல்லி, அக். 27–

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்திக்கு தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதால் அவருக்கு உச்சகட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவர் எங்கு சென்றாலும் பாதுகாப்புபடை வீரர்களும் உடன் சென்று அவரை சூழ்ந்து நின்று பாதுகாப்பு அளிக்கிறார்கள்.

ஆனால் நேற்று இரவு ராகுல் காந்தி டெல்லியில் தனது வீடு அமைந்துள்ள ரேஸ் கோர்ஸ் சாலையில் பாதுகாப்பு அதிகாரிகளோ டிரைவரோ இல்லாமல் தனியாக காரில் சென்ற தகவல் வெளியாகி உள்ளது.

டெல்லியைச் சேர்ந்த ஒரு பெண் தனது நண்பர்களுடன் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் நாய்களுடன் உலா வந்தார். ரேஸ் கோர்ஸ் சாலை சிக்னலில் வந்தபோது அங்கு ஒரு கார் நின்றிருந்தது. காரை ஓட்டி வந்தவர் திடீர் என்று கார் கண்ணாடியை இறக்கி விட்டு பெண்ணிடம் அவரது நாய்க்குட்டி பற்றி பேசினார்.

என்ன உணவு கொடுக்கிறீர்கள்? எப்படி அதன் உடல் நலத்தை பேணுகிறீர்கள்? என்று பெண்ணிடம் விசாரித்தார். அவரைப் பார்த்ததும் அந்தப் பெண்ணுக்கு ஆச்சரியம். காரணம் காரில் இருந்தவர் ராகுல் காந்தி. டிரைவர் இருக்கையில் அமர்ந்து அவரே காரை ஓட்டிவந்தார். பாதுகாப்பு அதிகாரிகள் யாரும் இல்லை. காரில் அவருடன் விலை உயர்ந்த பிரவுனி ரக நாய்கள் இருந்தன. ராகுல்காந்தியும் தனது பிரவுனி பற்றி அந்தப் பெண்ணிடம் விவரித்தார்.

பாதுகாப்பு வளையத்தை மீறி ராகுல்காந்தி நள்ளிரவில் காரில் தனியாக வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராகுல் காந்தியைப் பார்த்த பெண் தனது பெயர் விவரங்களை வெளியிட மறுத்து விட்டார்.

இதுபற்றி இணைய தள பேஸ் புக்கில் பலரும் வரவேற்று கருத்து தெரிவித்துள்ளனர். அந்தப் பெண் பார்த்தது ராகுல்காந்தியைப் போன்ற ஒருவராக இருக்கலாம் என்று ஒருவர் கிண்டல் அடித்துள்ளார்.

...

shared via

மின்கடத்தில் நிறுவன இணையதளத்தில் குறிப்படவில்லை: கூடங்குளம் மின்சாரம் எங்கே போனது? உதயகுமார் கேள்வி electric company did not electric smuggling website states Kudankulam power where udayakumar question

மின்கடத்தில் நிறுவன இணையதளத்தில் குறிப்படவில்லை: கூடங்குளம் மின்சாரம் எங்கே போனது? உதயகுமார் கேள்வி electric company did not electric smuggling website states Kudankulam power where udayakumar question

ராதாபுரம், அக்.27-

கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு எதிரான மக்கள் இயக்க போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:- 

2011 டிசம்பர் மற்றும் 2012 மார்ச் என இருமுறை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் விளக்கம் சொல்லவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட பிரதமர் மன்மோகன் சிங், தற்போது ரஷ்யாவுக்கு போயிருந்தபோது, கூடங்குளம் வெற்றி செய்தியை புதினுக்கு அளித்து, 3-4 உலைகளுக்கான ஒப்பந்தத்தையும் முடிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்துக்கு உள்ளானார்.

கூடங்குளத்தில் மின் உற்பத்தி எனும் நாடகம் அரங்கேற தொடங்கியது. மன்மோகன் சிங் ரஷ்யாவுக்கு சென்ற கடந்த 20-ந்தேதி நள்ளிரவு 12.16மணிக்கு மின் உற்பத்தி செய்ய முயற்சி செய்து தோற்றுப்போன விபரம், தென் பிராந்திய மின் விநியோக மைய இணையதளத்தில் பதிவாகியிருக்கிறது.

கூடங்குளத்தில் வாழ்வா, சாவா என போராடிக்கொண்டிருக்கும் இந்திய அணுசக்தி துறை, இந்திய அணுமின் கழகம், பிரதமர் அலுவலகம், மத்தியஅரசு, காங்கிரஸ் கட்சி என அனைவரும் ஒன்றாக சேர்ந்து, பிரதமர் ரஷ்யாவை விட்டு வெளியேறும் நேரத்தில் அக்டோபர் 22-ந்தேதி அதிகாலை 2.45 மணிக்கு கூடங்குளம் மின்சாரத்தை மின்தொகுப்போடு இணைத்துவிட்டோம் என்று அறிவித்தனர். இரண்டாம் நிலை கோளாறுகளால் அந்த முயற்சியும் அன்றுகாலை 4.34மணிக்கு தோல்வியில் முடிந்தது.

நாட்டுமக்களின், ஊடகங்களின், சர்வதேச சக்திகளின் எதிர்பார்ப்பு ஏறிக் கொண்டிருந்த நிலையில், கூடங்குளம் நிர்வாகத்தினர் நேற்று முன்தினம் (25-ந்தேதி) இரவு 9.43மணிக்கு மின் உற்பத்தி மீண்டும் தொடங்கி விட்டதாக அறிவித்தார்கள். ஆனால் தமிழ்நாடு மின்கடத்தல் நிறுவனத்தின் இணையதளத்தில் நேற்று(26-ந்தேதி) காலை 7.50மணிக்கு கூடங்குளம் மின்சாரம் குறிப்பிடப்படவே இல்லை.

மத்திய உற்பத்தி நிலையங்கள் வரிசையில் கல்பாக்கம்,  காக்ரப்பார் அணுமின் நிலையங்களிலிருந்து வரும் தமிழகத்தின் பங்கான 331, 227 மெகாவாட் மின்சாரம் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன. அப்படியானால் கூடங்குளம் மின்சாரம் எங்கே போயிற்று? இப்படி ஓர் அரசு தன் மக்களை ஏமாற்றுமா? என்று பலரும் கேட்கிறார்கள்.

இந்த அரசின் பிரதமர் ஓரிரு வாரங்களில் மின்சாரம் வரும் என்று 2வருடங்களுக்கு முன்பே சொல்லவில்லையா? இவரின் அமைச்சர்தானே 89 முறை இன்னும் 15 நாளில் மின்சாரம் வரும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இந்த அரசுதானே 275 முக்கியமான நிலக்கரி கோப்புக்களை காணவில்லை என்று சொல்கிறது. இந்த அரசுதானே 2ஜி ஊழல், ஆதர்ஷ் ஊழல், காமன்வெல்த் ஊழல், நிலக்கரி ஊழல் போன்ற பிரச்சினைகள் பற்றி மக்களிடம் பொய்யும், புரட்டும் பேசிக்கொண்டிருக்கிறது. இன்னும் குறிப்பாக சொல்லப் போனால், இந்திய அணுசக்தித் துறை எந்த நேரத்திலும் யாரிடமும் எந்த உண்மையையும் சொன்னதாக வரலாறே கிடையாது.

கூடங்குளத்தில் விசாரணைகள் நடத்தப்பட்டால் ஆயிரக்கணக்கான பூதங்கள் கிளம்பும். ஆக மொத்தத்தில் கூடங்குளத்தில் தற்போது நடந்து கொண்டிருப்பது பரிசோதனைகள்தானே தவிர, முழு அளவிலான வணிக உற்பத்தி அல்ல. அது நடக்குமா, எப்போது நடக்கும் என்பவையெல்லாம் மில்லியன் டாலர் கேள்விகள். எனவே தான் கடந்த 25-ந்தேதி தமிழகத்தின் மின்சார நிலைமை பற்றி சட்டப்பேரவையில் பேசிய முதல்வர், கூடங்குளம் மின்சாரத்தை பற்றி ஒருவார்த்தை கூட குறிப்பிடவில்லை. அது தற்செயலாக நிகழ்ந்த பிழையோ, விடுபடவோ இல்லை. முதல்வருக்கு நன்றாகத் தெரியும். கூடங்குளத்தில் நடப்பது ஒரு நாடகமென்று. இந்த நிலையிலாவது தமிழக முதல்வர் தமிழக மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.     

...

shared via

My Blog List

Popular Posts

Popular Posts