தினசரி செய்திகள்

Saturday, October 19, 2013

இந்திய இளம்பெண் பிரீத்தி ராஜாகோபாலனுக்கு காமன்வெல்த் சுற்றுச்சூழல் விருது Priti rajagopalan wins Commonwealth youth environment award

இந்திய இளம்பெண் பிரீத்தி ராஜாகோபாலனுக்கு காமன்வெல்த் சுற்றுச்சூழல் விருது Priti rajagopalan wins Commonwealth youth environment award
D

லண்டன், அக். 19-

மாசு அடைந்து வரும் உலகின் சுற்றுச் சூழ்நிலையில் மாற்றம் கொண்டுவர சுற்றுச்சூழல் ஆர்வலரான இந்தியர் பிரீதி ராஜகோபாலன் (23) தீவிரமாக செயல்பட்டு வருகிறார். பிரீத்தி தனது 18-வது வயதில் சக மாணவர்களுடன் சேர்ந்து கழிவு மேலாண்மை திட்டத்தை தொடங்கினார். அதன் மூலம் நாடு முழுவதும் உள்ள 200 பள்ளிகள் மற்றும் 40 பல்கலைக்கழகங்களை சேர்ந்த மாணவர்களுக்கு கழிவுகள் மற்றும் உரமாக்கும் பொருட்களை தனியாக பிரிப்பதற்கான பயிற்சியை பிரீத்தி ராஜகோபாலன் அளித்துள்ளார்.

பின்னர் அந்த உரங்கள் மலிவு விலையில் விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்டு வருகின்றன். 40 நகரங்களில் அவர் நடத்தி வரும் இத்திட்டத்திற்கு அரசு நிதியுதவியும் அளித்து வருகிறது. மேலும் கிராமப்புறங்களில் உள்ள பெண்கள், குழந்தைகளுக்கு சூரிய சக்தியை பயன்படுத்தி பொருட்களை உருவாக்கவும், நீரை சுத்தகரிக்கவும் பயிற்சியளித்து வருகிறார்.

உள்ளூர் சமூக தொண்டு அமைப்புகள் மற்றும் அரசு அமைப்புகளுடன் சேர்ந்து சுற்றுச்சூழல் பணிகளை மிகச் சிறப்பாக செய்து வரும் பிரீத்தி ராஜகோபாலனுக்கு லண்டன் காமன்வெல்த் நிர்வாகத் தலைமையகத்தில் நடந்த விழாவில் காமன்வெல்த் நாடுகளின் சுற்றுச்சூழல் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. அத்துடன் 5000 பவுண்ட் பணமுடிப்பும் அவருக்கு வழங்கப்பட்டது.

இதை பெற்றுக்கொண்ட பிரீத்தி ராஜகோபாலன் கூறியதாவது:-

இந்த விருதானது காற்று மண்டலத்தை தூய்மை படுத்தும் எனது நடவடிக்கையை முன்னோக்கி எடுத்துச்செல்ல ஊக்கமளிக்கிறது. என்னுடன் மேலும் அதிகமானோரை இந்தப் பணியில் இணைக்க இது உறுதுணையாக இருக்கும்.

இந்த பரிசுத்தொகையை கொண்டு சூரிய சக்தியை பயன்படுத்தி மிகப்பெரிய அளவிலான நகர கரிம வேளாண்மை பண்ணை திட்டத்தை தொடங்கி அதன் மூலம் அப்பகுதிகளுக்கு உணவு உற்பத்தியை பெருக்க திட்டமிட்டுள்ளேன்.

இவ்வாறு பிரீத்தி கூறினார். 

...

shared via

Friday, October 18, 2013

திருப்பதி ஏழுமலையான் கோவில் ஒரே நாளில் ரூ.2½ கோடி வசூல்: பக்தர்கள் வருகை அதிகரிப்பு Tripati temple same day two and half crore hundi income

திருப்பதி ஏழுமலையான் கோவில் ஒரே நாளில் ரூ.2½ கோடி வசூல்: பக்தர்கள் வருகை அதிகரிப்பு Tripati temple same day two and half crore hundi income

திருப்பதி, அக். 19–

ஆந்திராவில் கடந்த 1½ மாதமாக நீடித்து வந்த தெலுங்கானா எதிர்ப்பு போராட்டம் ஓய்ந்ததால் பஸ் போக்குவரத்து சீராகி உள்ளது.

இதனால் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் அதிக அளவு வரத் தொடங்கி உள்ளனர். புரட்டாசி மாதம் முடிவடைந்த நிலையிலும் நேற்று திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது.

தர்ம தரிசன வரிசையில் அனைத்து கம்பார்ட்மெண்டுகளும் நிரம்பிய நிலையில் கோவிலுக்கு வெளியே 1 கிலோ மீட்டர் தூரம் பக்தர்கள் வரிசையில் காத்து நின்றனர். தர்ம தரிசனத்துக்கு 30 மணி நேரம் ஆகிறது. பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் 15 மணி நேரம் தரிசனத்துக்கு காத்து நின்றனர். பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்ததால் ரூ.300 விரைவு தரிசன கவுண்டர் மதியம் 3 மணிக்கு மூடப்பட்டது.

நேற்று அதிகாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை சுமார் 40 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் வருகை அதிகரிப்பால் கோவில் உண்டியல் வருமானம் அதிகரித்து வருகிறது. கடந்த 2 மாதமாக உண்டியல் வருமானம் ரூ.1½ கோடியை தாண்டாமல் இருந்தது. ஆனால் நேற்று ஒரே நாளில் ரூ.2.57 கோடி வசூலானது. நடந்து முடிந்த பிரமோற்சவத்தின் போது கூட இந்த அளவு உண்டியல் வருமானம் கிடைக்கவில்லை என்று கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருமலையில் நேற்று இரவு பவுர்ணமி தின கருடசேவை நடந்தது. கருட வாகனத்தில் உலா வந்த மலையப்ப சாமியை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இன்றும், நாளையும் விடுமுறை தினம் என்பதால் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

...

shared via

அமெரிக்க கப்பல் ஊழியர்களை 31 ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவு america marines 31 th date jail

அமெரிக்க கப்பல் ஊழியர்களை 31 ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவு america marines 31 th date jail

தூத்துக்குடி, அக். 18-

இந்திய கடல் பகுதிக்குள் நுழைந்த ''சீ மேன் கார்டு ஓகியோ'' என்ற அமெரிக்க ரோந்து கப்பலை தூத்துக்குடி அருகே இந்திய கடலோர காவல் படையினர் கடந்த 12–ந்தேதி மடக்கி பிடித்தனர். அந்த கப்பலில் ஏராளமான துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் இருந்தன. பின்னர் அந்த கப்பல் தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இதுபற்றி தீவிர விசாரணை நடத்தி வந்த கியூ பிரிவு போலீசார், கப்பலில் இருந்த மாலுமிகள் மற்றும் ஊழியர்கள் என 34 பேரை இன்று கைது செய்தனர். கப்பலில் இருந்து துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன.

பின்னர் அவர்கள் அனைவரும் இன்று மாலை தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 31-ம் தேதி வரை பாளையங்கோட்டை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்களை பாளையங்கோட்டைக்கு கொண்டு சென்றனர்.

...

shared via

இந்தியா பாகிஸ்தான் பிரதமர்கள் சந்திப்புக்கு பிறகு போர்நிறுத்த மீறல் அதிகரிப்பு: உமர் அப்துல்லா Ceasefire violations worse after PM Sharif meeting Omar Abdullah

இந்தியா பாகிஸ்தான் பிரதமர்கள் சந்திப்புக்கு பிறகு போர்நிறுத்த மீறல் அதிகரிப்பு: உமர் அப்துல்லா Ceasefire violations worse after PM Sharif meeting Omar Abdullah

ஸ்ரீநகர், அக். 18-

போர் ஒப்பந்த உடன்படிக்கையை மீறும் பாகிஸ்தான் ராணுவம், எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. சமீப காலமாக பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த அத்துமீறல்கள் அதிகரித்து வருகின்றன.

இதுபற்றி கருத்து தெரிவித்த ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, "பிரதமர் மன்மோகன் சிங்கும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபும் கடந்த மாதம் சந்தித்து பேசிய பிறகுதான் பாகிஸ்தான் படைகளின் போர்நிறுத்த மீறல் அதிகரித்துள்ளது" என்றார்.

இத்தகைய தாக்குதல்களுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள், அவர்களின் நோக்கம்தான் என்ன? என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நமது பிரதமர், பாகிஸ்தான் பிரதமரை நியூயார்க்கில் சந்தித்தபோது இதுபற்றி பேசப்பட்டது. அப்போது, இரு நாடுகளின் ராணுவ தலைவர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காண முடிவு செய்யப்பட்டது. பிரச்சினைக்கு தீர்வு கிடைப்பதற்குப் பதிலாக நிலைமை மோசமாகிவிட்டது.

பாகிஸ்தானுடன் இந்திய அதிகாரிகள் வலுவான பேச்சுவார்த்தையை முன்வைக்க வேண்டும். நிலைமை மோசடைந்தால், பேச்சுவார்த்தையை தொடருவது மிகவும் கடினமாகிவிடும். எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதிக்கு அருகில் வசிக்கும் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதே என் விருப்பம் என்றும் உமர் அப்துல்லா தெரிவித்தார்.

...

shared via

தேவர் ஜெயந்தி விழாவின்போது பெட்ரோல் பாட்டில் வீச்சு: தீக்காயம் அடைந்த 10 பேருக்கு அரசு வேலை ஜெயலலிதா jayalalitha announcement thevar jayanthi festival petrol bottle throw injured 10 people government job

தேவர் ஜெயந்தி விழாவின்போது பெட்ரோல் பாட்டில் வீச்சு: தீக்காயம் அடைந்த 10 பேருக்கு அரசு வேலை ஜெயலலிதா jayalalitha announcement thevar jayanthi festival petrol bottle throw injured 10 people government job

சென்னை, அக். 18–

முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

30.10.2012 அன்று மதுரை மாவட்டம், எஸ். புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சமாதியில் மரியாதை செலுத்திவிட்டு, மதுரை வட்டம், சிந்தாமணி கிராமம் புறவழிச் சாலை அருகே திரும்பிக் கொண்டிருந்த போது, திடீரென எரியூட்டப்பட்ட பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை சில சமூக விரோதிகள் எறிந்ததையடுத்து அவ்வாகனத்தில் பயணம் செய்த அனைவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது.

இந்தச் சம்பவத்தில் இறந்த 7 பேர் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரண உதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பும் வழங்கப்பட்டது.

இந்தச் சம்பவத்தில் பலத்த தீக்காயம் அடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், தீக்காயம் அடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் முதல்–அமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து நான் வழங்கினேன்.

தற்போது, 20 விழுக்காட்டிற்கு மேல் தீக்காயம் அடைந்தவர்கள் தங்களுக்கும் அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என எனக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவர்களது கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்த நான் அவர்களுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் உரிய பணி விதிகளை தளர்த்தி, பாதிக்கப்பட்டவர்களின் கல்வித் தகுதிக்கேற்ப, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 6 நபர்களுக்கு இளநிலை உதவியாளர் பணி வழங்கிடவும், எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஒருவருக்கு அலுவலக உதவியாளர் பணி வழங்கிடவும், எழுதப் படிக்கத் தெரிந்த 3 நபர்களுக்கு இரவுக் காவலர் பணி வழங்கிடவும் நான் உத்தரவிட்டுள்ளேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

...

shared via

Thursday, October 17, 2013

அனிருத் இசையில் விஜய் பாடல்! Vijay sing on aniruth music

அனிருத் இசையில் விஜய் பாடல்!

by admin
TamilSpy

தனது முதல் படத்திலேயே மொத்த இந்திய திரையுலகத்தின் பார்வையையும் தன் பக்கம் திருப்பிய அனிருத் சமீபத்தில் வணக்கம் சென்னை திரைப்படத்தில் சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்து 3, எதிர்நீச்சல், வணக்கம் சென்னை என மூன்று தொடர் வெற்றிகளை பெற்றிருக்கிறார்.

வெற்றிகளின் மூலம் முருகதாஸ்-விஜய் இணையவிருக்கும் அடுத்த திரைப்படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு அனிருத்திற்கு கிடைத்திருக்கிறது. விஜய் துப்பாக்கி திரைப்படத்தில் பாடிய 'கூகிள் கூகிள்' பாடல் மாதிரியே தனது இசையிலும் விஜய்யை பாடவைக்க வெண்டும் என அனிருத் முடிவெடுத்திருக்கிறாராம். இதற்காக பல டியூன்களை கம்போஸ் செய்துகொண்டிருக்கிறாராம் அனிருத்.

சாதாரணமாகவே விஜய் படத்தில் இடம்பெறும் பாடல்களுக்கு ஒரு மாஸ் இருக்கும். இதில் அனிருத்தின் துடிப்பான இசையும் சேர்ந்து ரசிகர்களை கிரங்கடிக்கப்போவது உறுதி என திரையுலகத்தில் பேசப்பட்டுவருகிறது.

Show commentsOpen link

Wednesday, October 16, 2013

சென்னையில் டெங்கு, சிக்குன் குனியா காய்ச்சல் பரவுகிறது: ஆஸ்பத்திரியில் சிறப்பு வார்டுகள் dengue fever and chikungunya fever spreads in chennai special wards in the hospital

சென்னையில் டெங்கு, சிக்குன் குனியா காய்ச்சல் பரவுகிறது: ஆஸ்பத்திரியில் சிறப்பு வார்டுகள்      dengue fever and chikungunya fever spreads in chennai special wards in the hospital

சென்னையில் டெங்கு காய்ச்சல், சிக்குன் குனியா காய்ச்சல் தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சலுக்கான அறிகுறிகளுடன் அரசு மருத்துவமனைக்கும், தனியார் மருத்துவமனைக்கும் அதிகப்பேர் செல்ல தொடங்கியுள்ளனர்.
இதற்கிடையே காய்ச்சல் அறிகுறியுடன் வரும் நோயாளிகளை பரிசோதித்து சிகிச்சை அளிக்கும் விதமாக அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.


டெங்கு காய்ச்சல் ஒருவித ஏடிஎஸ் எனப்படும் கொசுக்கள் கடிப்பதன் மூலம் ஏற்படுகிறது.
இந்த கொசுக்கள் கடித்தால் அதன் உடலில் உள்ள வைரஸ் மனிதர்களின் உடலில் சென்று டெங்கு காய்ச்சலை ஏற்படுத்துகிறது. இது முதல் தடவை குணமாகிவிடும். டெங்கு காய்ச்சல் 2–வது முறை ஒரு நபருக்கு வந்தால் அவர் அலட்சியமாக இருக்கக்கூடாது.


உடனே சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
டெங்கு காய்ச்சலை கட்டுபடுத்த சென்னை அரசு மருத்துவமனைகளில் தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அந்த காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.



அதில் பெண்களுக்கு என்று 15 படுக்கைகள் கொண்ட தனி வார்டும், ஆண்களுக்கு என்று 5 படுக்கைகள் கொண்ட தனி வார்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதே போல் சிகிச்சைக்கு தேவையான அனைத்து மருந்துகளும் தயார் நிலையில் இருக்கிறது.



உயிர் சேதம் இல்லை
அதற்கான நடவடிக்கைகளை விரைந்து செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் டாக்டர் வே.கனகசபை தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், கடந்த ஓராண்டுகளாக டெங்கு காய்ச்சலால் எந்த வித உயிர் சேதமும் ஏற்படவில்லை.


ஏனென்றால் அதற்கான மருந்துகளை நாங்கள் உரிய நேரத்தில் அந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுத்து வருகிறோம்.
மேலும் பொது மக்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டால் உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு செல்லாமல் அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றுக்கொள்ள வலியுறுத்தி வருகிறோம்.



அதே போல், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் டெங்கு, சிக்குன் குனியா போன்ற காய்ச்சலால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு குழந்தைகளுக்கு என்று தனி வார்டும், பெரியவர்களுக்கு என தனி வார்டும் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு தேவையான மருந்துகள் தேவைக்கு ஏற்றாற்போல் வைத்திருப்பதாகவும் மருத்துவமனை டீன் டாக்டர் கீதா லட்சுமி தெரிவித்தார்.



மேலும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் தனி வார்டு அமைக்கப்பட்டிருப்பதாக மருத்துவமனை டீன் டாக்டர் ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
டெங்கு காய்ச்சல் குறித்து மருத்துவமனை அதிகாரிகள் கூறியதாவது:–



இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அதன் பாதிப்பை உணர்ந்து கொள்ளாமல் தங்களது வீட்டின் அருகே இருக்கும் மருந்து கடைகளில் மாத்திரைகளை சாப்பிட்டு அந்த நேரங்களில் காய்ச்சலை தடுத்து விடுகின்றனர்.



ஆனால் அதன் பாதிப்பு பின்னர் தான் அவர்களுக்கு தெரிய வரும். இதனால் அவர்கள் உயிருக்கு ஆபத்து ஏறபட வாய்ப்புண்டு. எனவே உரிய மருத்துவ சிகிச்சை எடுத்து தங்களது உடலை பேணி பாதுகாத்து கொள்ள வேண்டும்.



இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

பஞ்ச் வசனங்கள் பேச அஜீத் மறுப்பு actor ajith punch dialogue

'ஆரம்பம்' படத்தில் பஞ்ச் வசனங்கள் பேச அஜீத் மறுப்பு

by abtamil

அஜீத், ஆர்யா, நயன்தாரா, டாப்சி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஆரம்பம்'. இப்படத்தை விஷ்ணுவர்தன் இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படம் ஆரம்பம் முதலே இப்படம் குறித்த பல தகவல்கள் வெளிவந்த உண்ணம் உள்ளன. பல்வேறு தரப்பினரும் இப்படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில், இப்படம் அஜீத் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக வெளிவரவிருக்கிறது.

ஆரம்பம் படம் குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், இப்படத்தின் கதாசிரியர்களான சுபா இப்படம் குறித்து தங்களுடைய அனுபவங்களை கூறியுள்ளனர்.

இயக்குனர் விஷ்ணுவர்த்தன் அஜீத்தை வைத்து ஒரு படத்தை எடுக்க போகிறோம் என கூறியபோது, அப்படம் அஜீத் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி  செய்ய வேண்டும் என்ற எண்ணமே கதையாக உருவெடுத்தது.

மூன்று மாதங்களுக்கு பிறகு கதை கருவை அவரிடம் பகிர்ந்துகொள்ள முதன்முதலாக அஜீத்தை சந்தித்தபோது அவரது எளிமை எங்களை கவர்ந்தது. ஒரு நட்சத்திரத்துக்குரிய எந்த பந்தாவும் இல்லாமல் இருந்தது வியப்பு ஊட்டியது. அந்த வியப்பு அடங்கும் முன்னரே அவர் விடுத்த வேண்டுகோள் எங்களை மேலும் வியப்பூட்டியது. அது படத்தில் தன்னை புகழும் காட்சிகளோ, வசனங்களோ, பஞ்ச் வசனங்களோ இருக்கக்கூடாது என்பதுதான். கதைக்குதான் நாயகனே தவிர நாயகனுக்கு கதை இல்லை என்பதை தெளிவாக வலியுறுத்தினார்.

அவர் தன்னுடன் நடிக்கும் மற்ற நடிகர்களுக்கும் முக்கியத்துவம் இருக்கும் வகையில் காட்சி அமைப்பை அமைக்குமாறு இயக்குனரிடம் கூறியதை கேட்டபிறகுதான் அஜீத்துக்கு அவர் மீதுள்ள தன்னம்பிக்கையின் அர்த்தம் புரிந்தது. அந்த தன்னிம்பிக்கை அவருடன் பணியாற்றும் மற்றவர்களுக்கும் ஒட்டி கொண்டது என்றால் மிகை ஆகாது.

படத்துக்காக அவர் எடையை குறைத்தால் நன்றாக இருக்கும் என்ற உடனே பல ஆபரேஷன் செய்துள்ள அவரது உடல் நிலையையும் மீறி ஒரு தினத்துக்கு 5 முதல் 6 மணி நேரம் வரை அயராமல் உடற்பயிற்சி செய்த அவரது கடமை உணர்ச்சிதான் அவரை இந்த உயரத்துக்கு கூட்டி சென்று இருக்கும் என தெளிவாக புரிந்தது.

நாங்கள் பல நடிகர்களின் படங்களில் பணிபுரிந்து இருக்கிறோம், பணியாற்றிக் கொண்டு இருக்கிறோம். ஆனால் இதுவரை எந்த படத்துக்கும் 'ஆரம்பம்' படத்தை பற்றிய ஆர்வம் போல் கண்டதில்லை. எல்லா தரப்பு ரசிகர்களும் இந்த படத்தை எதிர்பார்த்து கொண்டு இருப்பதை பார்க்கும்போதுதான் அவருடைய ரசிகர்கள் வட்டாரம் எந்த அளவுக்கு பரந்து உள்ளது என்பது புலபடுகிறது.

ஏராளமான பொருட்செலவு, விஷ்ணுவின் ஸ்டைலிஷ் இயக்கம் , யுவன் ஷங்கர் ராஜாவின் மெய் மறக்கும் இசை ஆகியவை அந்த எதிர்பார்ப்பை சந்திக்கும் என நம்பிக்கை எங்களுக்கு நிச்சயம் உண்டு. ஆர்யாவும் அஜீத்துக்கும் உள்ள பரஸ்பர மரியாதை, சிநேகம் ஆகியவை தமிழில் இனிமேல் பல நட்சத்திரங்கள் இணைந்தது நடிக்கும் காலம் வரும் என நம்பிக்கை தருகிறது. அதற்கு இந்த படம் தான் ஆரம்பம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Show commentsOpen link

ஒடிசாவில் புயல் பாதிப்பு: வெள்ளத்தில் சிக்கி 1 லட்சம் பேர் தவிப்பு odisha storm damage flood trap 1 lakh people anxiety

ஒடிசாவில் புயல் பாதிப்பு: வெள்ளத்தில் சிக்கி 1 லட்சம் பேர் தவிப்பு odisha storm damage flood trap 1 lakh people anxiety

Tamil NewsToday, 19:35

புவனேசுவரம், அக். 16–

வங்கக்கடலில் உருவான பாய்லின் புயல் கடந்த சனிக்கிழமை இரவு ஒடிசாவை தாக்கியதில் 28 பேர் உயிரிழந்தனர். அம்மாநிலத்தின் 12 மாவட்டங்களில் உள்ள 16,487 கிராமங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டன.

புயல் நடத்திய கோரத் தாண்டவத்தில் 3½ லட்சம் வீடுகள், 6½ லட்சம் ஹெக்டேர் பயிர்கள் நாசமாயின. மொத்தத்தில் பாய்லின் புயலால் ஒடிசா மாநிலத்துக்கு ரூ.2400 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.

அங்கு இன்று (புதன்கிழமை) 4–வது நாளாக மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. புயலுக்கு பயந்து வெளியேற்றப்பட்ட சுமார் 9 லட்சம் பேரில் 90 சதவீதம் பேர் தங்கள் இருப்பிடங்களுக்கு திரும்பி விட்டனர்.

புயல் கரையைக் கடந்த போது பெய்த பலத்த மழை வெள்ளத்தில் சுமார் 1½ கோடி பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் சுமார் 1 லட்சம் பேர் நாலாபுறமும் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் சிக்கி தவித்தப்படி உள்ளனர். அவர்களுக்கு உணவு மற்றும் மருந்து பொருட்கள் கொடுக்கப்பட்டு வருகிறது.

நேற்றிரவு வெள்ளம் வடிய தொடங்கியுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் நிலைமை சீராகி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பகுதிகளை ஒடிசா முதல்–மந்திரி நவின் பட்நாயக் நேற்று விமானத்தில் பறந்து பார்வையிட்டார். உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் வழங்க அவர் உத்தரவிட்டுள்ளார்.

பாய்லின் புயலை ஒடிசா மாநில நிர்வாகம் எதிர் கொண்ட விதத்துக்கும், மீட்புப் பணிகளை திறம்பட செய்து வருவதற்கும் பல்வேறு தரப்பில் இருந்தும் நவீன் பட்நாயக்குக்கு பாராட்டுக்கள் குவிந்தபடி உள்ளது.

ஐ.நா சபை சிறப்பு பிரதிநிதி வெளியிட்டுள்ள செய்தியில், ''பேரிடர் ஆபத்தை ஒடிசா அரசு கையாண்ட விதம் உலக வரலாற்றில் மிகப் பெரிய சாதனையாகும்'' என்று கூறப்பட்டுள்ளது.

...
Show commentsOpen link

ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற லல்லு பதவி பறிப்பில் சிக்கல் நீடிப்பு corruption case lalu flush position problem Extension

ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற லல்லு பதவி பறிப்பில் சிக்கல் நீடிப்பு corruption case lalu flush position problem Extension

Tamil NewsToday,

புதுடெல்லி, அக். 16–

பீகாரில் லல்லு பிரசாத் யாதவ் முதல்–மந்திரியாக இருந்தபோது ரூ. 956 கோடிக்கு கால்நடை தீவன ஊழல் நடந்தது. 17 ஆண்டுகளாக நடந்த இந்த ஊழல் வழக்கில் லல்லு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டது.

குற்ற வழக்குகளில் சிக்கி இரண்டாண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை பெறும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஜூலை மாதம் உத்தரவிட்டது. எனவே ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற லல்லு பிரசாத் யாதவின் எம்.பி. பதவி பறிக்கப்படுகிறது.

ஆனால் பதவி பறிப்பு நடவடிக்கையை அதிகாரப் பூர்வமாக எடுப்பது யார் என்பதில் சர்ச்சை ஏற்பட்டது. இதுபற்றி நிபுணர்களிடம் பேசி கருத்து தெரிவிக்குமாறு சட்ட அமைச்சகத்திடம் சபாநாயகர் மீராகுமார் கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து ஆய்வு செய்த சட்ட அமைச்சகம், எம்.பி.யோ, எம்.எல்.ஏ.வோ 2 ஆண்டுக்கு மேல் தண்டனை பெற்றால், அவர்களது பதவி தானாகவே பறிபோய் விடும் என்று கூறியது. ஆனால் அதை அதிகாரப்பூர்வமாக வெளியில் சொல்லாமல் மவுனம் சாதித்தப்படி உள்ளது.

இதனால் லல்லுவின் எம்.பி. பதவியை பறித்து, அதற்கான அறிவிப்பை வெளியிடுவது யார் என்பதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. இதற்கு பொறுப்பு ஏற்காமல் ஒவ்வொரு அமைச்சகமும் தட்டி கழித்து வருகின்றன.

...
Show commentsOpen link

காஞ்சீபுரத்தில் தீக்குளித்த மாணவி தொடர்ந்து கவலைக்கிடம் kanchipuram student suicide try hospital treatment

காஞ்சீபுரத்தில் தீக்குளித்த மாணவி தொடர்ந்து கவலைக்கிடம் kanchipuram student suicide try hospital treatment

Tamil NewsToday,

காஞ்சீபுரம், அக். 16–

காஞ்சீபுரத்தையடுத்த அப்துல்லாபுரத்தை சேர்ந்தவர் கன்னியப்பன். இவரது மகள் சினேகா (11). பெரிய காஞ்சீபுரம் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சினேகா 6–வது வகுப்பு படித்து வந்தார். ஆயுத பூஜை–விஜயதசமி விடுமுறைக்குப்பின் நேற்று பள்ளிக்கு சென்றாள்.

காலை பள்ளி இடைவேளையின் போது மாணவி சினேகா கழிவறைக்கு சென்றார். சிறிது நேரத்தில் 'ஐயோ என்னை காப்பாற்றுங்கள்' என்று மாணவியின் அலறல் சத்தம் கேட்டது. உடனே அங்கிருந்த ஆசிரியர்கள் ஓடிச் சென்றனர். அப்போது மாணவி உடலில் தீப்பற்றி எரிந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே தீயை அணைத்து ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

காஞ்சீபுரம் ஆஸ்பத்திரியில் மாணவி சினேகாவுக்கு முதல் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்தரிக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவி சினேகாவுக்கு 40 சதவீத தீக்காயம் உள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள மாணவி சினேகா அவசர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள்.

மாணவி சினேகா பள்ளிக்கு செல்லும் போதே பிளாஸ்டிக் பாட்டிலில் அரை லிட்டர் மண்எண்ணை, தீப்பெட்டி கொண்டு சென்றதாகவும், மாணவியே கழிவறையில் வைத்து உடலில் மண்எண்ணை ஊற்றி தீவைத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது மாணவி பேச முடியாத நிலையில் உள்ளதால் தீக்குளித்ததற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

முகம், கழுத்து, உடம்பு பகுதியில் பலத்த தீக்காயம் உள்ளது. தீக்காயம் காரணமாக சுவாசிப்பதில் சிரமம் உள்ளது. மாணவி பேசத் தொடங்கிய பிறகே வாக்குமூலம் பெற முடியும் என்று கூறப்படுகிறது. அதன் பிறகே தீக்குளிப்புக்கான காரணம் தெரிய வரும்.

மாணவிக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர் ஒருவர் கூறியதாவது:–

40 சதவீத அளவுக்கு தீக்காயம் உள்ளது. தீக்காயம் ஆழமாக இருப்பதால் சுவாசிப்பதில் சிரமம் உள்ளது. மாணவியின் முகம், மார்பு, இரண்டு கைகள் ஆகியவற்றில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. கண் இமை கருகி விட்டது. என்றாலும் கண்பார்வை நன்றாக உள்ளது. ஆபத்தான நிலையில்தான் இருக்கிறாள். காப்பாற்ற முயற்சி எடுத்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

...
Show commentsOpen link

Tuesday, October 15, 2013

மாயமான சிங்கப்பூர் அழகு ராணியின் பிரேதம் கண்டுபிடிப்பு Singapore beauty queen body found in Pakistan

பாகிஸ்தானில் மாயமான சிங்கப்பூர் அழகு ராணியின் பிரேதம் கண்டுபிடிப்பு Singapore beauty queen body found in Pakistan
Tamil NewsToday,

இஸ்லாமாபாத், அக்.16-

பாகிஸ்தானை சேர்ந்த மாடல் அழகி ஃபெஹ்மினா சவுத்ரி(27). சிங்கப்பூர் அழகு ராணியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் கடந்த வியாழக்கிழமை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சொத்து ஒன்றை வாங்குவதற்காக பாகிஸ்தானுக்கு சென்றார்.

அங்கு வசிக்கும் தனது தாயாருடன் செல்போன் மூலம் பேசி தான் இஸ்லாமாபாத் வந்திருக்கும் தகவலை தெரிவித்த அவரது செல்போன் சிறிது நேரத்திற்கு பிறகு சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டது.

சில மணி நேரங்கள் கழித்து அவரது செல்போனில் இருந்து தாயாருக்கு வந்த எஸ்.எம்.எஸ்.சில் ஃபெஹ்மினா சவுத்ரி கடத்தப்பட்டதாக தகவல் வந்தது.

இதனையடுத்து, தனது மகளை யாரோ கடத்தி விட்டதாக அவர் போலீசில் புகார் அளித்தார். கடந்த 5 நாட்களாக அவரை கண்டுபிடிக்க விசாரணை நடத்திவந்த போலீசார் இறுதியாக அவருக்கு சொத்து வாங்கிதர ஏற்பாடு செய்த புரோக்கரை கண்டுபிடித்து கைது செய்து விசாரித்தனர்.

ஃபெஹ்மினா சவுத்ரியை கொலை செய்து இஸ்லாமாபாத் நகருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள ஓடையில் பிணத்தை தூக்கி வீசிவிட்டதாக புரோக்கர் வாக்குமூலம் அளித்தார்.

அந்த இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ஓடை கரையோரம் ஒதுங்கியிருந்த பிணத்தை கைப்பற்றினர்.
...
Show commentsOpen link

நஸ்ரியா மார்க்கெட் nasriya market

நஸ்ரியா மார்க்கெட் ஆட்டம் கண்டுவிடுமோ?
by admin
TamilSpy
மார்க்கெட் ஆட்டம் கண்டுவிடுமோ! ஆதரவு திரட்டும் நஸ்ரியா!!

நய்யாண்டி படத்தில், நஸ்ரியாவின் தொப்புளை பல கோணங்களில் படமாக்கியிருக்கிறார் சற்குணம். ஆனால், அந்த பாடல் காட்சி சம்பந்தப்பட்ட நஸ்ரியாவின் பார்வைக்கு சென்றபோதுதான் அதிர்ச்சியடைந்தவர் விஸ்வரூபம் எடுத்தார்.

அவர் ஆடிய கோரதாண்டவ ஆட்டத்தில் நய்யாண்டி யூனிட்டே ஆடிப்போனது. எங்கு படத்தை குறிப்பிட்ட நாளில் வெளியிட முடியாமல் போய் விடுமோ என்று பயந்தவர்கள், பின்னர் நஸ்ரியாவின் வழிக்கே இறங்கி வந்து, நஸ்ரியாவின் தொப்புள் போன்று படமாக்கியிருநத அந்த டூப் தொப்புள் இடம்பெற்ற பாடல் காட்சியை பாதிக்கு மேல் கத்தரி வைத்து துவம்சம் செய்திருக்கிறார்கள்.

இதனால் நஸ்ரியா பக்கம் நியாயம் இருந்திருக்கிறது என்று பலர் கருதினாலும், இன்னும் சிலர் போயும் போயும் தொப்புளை படமாக்கியதற்காகவா இவ்வளவு அக்கப்போர்.

இவரெல்லாம் எதற்காக நடிக்க வர வேண்டும் என்று உரக்க பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

இதனால் இத்தோடு கோடம்பாக்கத்தில் தனது ஆட்டம், ஆட்டம் கண்டு விடுமோ என்று அதிர்ச்சியில் இருக்கிறார் நஸ்ரியா.

மேலும், தனது அபிமானத்திற்குரிய சில ஹீரோ மற்றும் டைரக்டர்களை சந்தித்து தன்பக்க நியாயத்தை எடுத்துரைத்து வரும் நஸ்ரியா, இதை போனால் போகட்டும் என்று நான் விட்டிருந்தால் அதன்பிறகு படத்துக்குப்படம் இந்த டூப் விவகாரம் தலைதூக்கி விடும்.

அதற்காகத்தான் ஆரம்பத்திலேயே செக் வைத்தேன் என்று சொல்லி, தன்னை தொடர்ந்து ஆதரிக்குமாறும் கேட்டுக்கொண்டு வருகிறார் நஸ்ரியா.

Show commentsOpen link

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் Fishermen must take action to release Prime Minister to Jayalalitha letter

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் Fishermen must take action to release Prime Minister to Jayalalitha letter

Tamil NewsToday,

சென்னை, அக். 15-

தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

இந்திய மீனவர்கள் தங்கள் பாரம்பரிய கடல் பகுதியில் மீன்பிடிக்கும்போது, இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்பட்டு கைது செய்யப்படுகின்றனர். சமீபத்தில் மேலும் 2 சம்பவங்கள் நடந்துள்ளன. 14-10-2013 அன்று 5 படகுகளில் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் 4 விசைப்படகுகளில் சென்று மீன்பிடித்த புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 15 பேரையும் இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

இலங்கையின் இந்த நடவடிக்கைகளுக்கு இந்தியா இதுவரை கண்டனம் தெரிவிக்காதது வருத்தம் அளிக்கிறது. சமீபத்தில் உள்துறை மந்திரி இலங்கை சென்று பேச்சுவார்த்தை நடத்தியபோது, தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை.

குஜராத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீது பாகிஸ்தான் கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியது. இதுதொடர்பாக பாகிஸ்தான் தூதரை உடனடியாக அழைத்து மத்திய அரசு கண்டனம் தெரிவித்தது. ஆனால், தமிழக மீனவர்கள் விஷயத்தில் அதற்கு மாறாக நிராகரிக்கும் அணுகுமுறையை கொண்டுள்ளது.

இலங்கை மீனவர்களும் தமிழக மீனவர்களும் பிரச்சினையை பேசி தீர்க்க வேண்டும் என்று கூறுவது மத்திய அரசு மெத்தனமாக இருப்பதையே காட்டுகிறது.

எனவே, இப்பிரச்சினையில் பிரதமர் நேரடியாக தலையிட்டு, கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
...
Show commentsOpen link

Monday, October 14, 2013

டெல்லியில் 30 ந்தேதி காங். பா.ஜனதாவுக்கு எதிராக 3 வது அணி கூட்டம்: ஜெயலலிதாவுக்கு இடதுசாரிகள் அழைப்பு Congress BJP against 3rd team Jayalalitha invite

டெல்லியில் 30 ந்தேதி காங். பா.ஜனதாவுக்கு எதிராக 3 வது அணி கூட்டம்: ஜெயலலிதாவுக்கு இடதுசாரிகள் அழைப்பு Congress BJP against 3rd team Jayalalitha invite

டெல்லி, அக்.15-

விரைவில் 5 மாநில தேர்தல் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலும் வர இருக்கிறது.

பாரதீய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செல்லத் தொடங்கி விட்டார். பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அதிரடி திட்டங்களை தீட்டி வருகிறார். காங்கிரஸ் கட்சிக்கு ராகுல்தான் பிரதமர் வேட்பாளர் என்று அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் கூறி வருகிறார்கள். காங்கிரசும் இப்போதே பாராளுமன்ற தேர்தலுக்கான வியூகங்களை வகுக்கத் தொடங்கி விட்டது.

காங்கிரஸ் மீது மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். எனவே மோடி தலைமையில் பா.ஜனதா மத்தியில் ஆட்சி அமைக்கும் என்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் கூறி வருகின்றன. மக்களுக்காக செயல்படுத்திய திட்டங்களை எடுத்துக்கூறி வெற்றி பெறுவோம் என்று காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி நம்பிக்கையில் உள்ளது. இரண்டு கட்சிகளுமே தங்கள் கூட்டணியை பலப்படுத்துவதற்காக புதிய கட்சிகளை இழுக்கும் முயற்சியில் உள்ளன. இந்த நிலையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் 3-வது அணியை அமைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளன.

காங்கிரஸ் கூட்டணி ஆட்சி தோல்வி அடைந்து விட்டது. பாரதீய ஜனதா மதசார்பற்ற கட்சி. எனவே காங்கிரஸ் பாரதீய ஜனதா இல்லாத 3-வது அணிதான் ஆட்சி அமைக்க வேண்டும் என்று இடதுசாரி கட்சி தலைவர்கள் கூறி வருகிறார்கள். இந்த நிலையில் 3-வது அணி அமைப்பதற்கான ஆலோசனை கூட்டம் வருகிற 30-ந்தேதி டெல்லியில் நடைபெறுகிறது. மார்க்சிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள், முலாயம்சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி, சரத்யாதவ் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளன.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து அந்த கட்சி பிரமுகர்கள் ஒருவர் கூறும்போது, காங்கிரஸ், பாரதீய கட்சிகளுக்கு எதிரான அணி அமைக்க வேண்டியது அவசியம். எனவே தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளோம்.

அவர் கலந்து கொள்ள இயலாத நிலை இருந்தால், நிச்சயம் அ.தி.மு.க. சார்பில் ஒரு பிரதிநிதியை அனுப்பி வைப்பார் என்று நம்புகிறோம். ஜெயலலிதாவுக்கு எங்கள் கட்சியின் தேசிய தலைவர்களும், தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதி இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வற்புறுத்துவார்கள் என்றார்.

இதுதவிர பல்வேறு மாநில முக்கிய கட்சிகளுக்கும் அழைப்பு விடப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் இடதுசாரி கட்சிகளின் வியூகம் பற்றி ஆலோசிக்கப்படுகிறது. 3-வது அணி அமைப்பின் அச்சாரமாகவும் இந்த கூட்டம் இருக்கும் என்று இடதுசாரி கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

...

shared via

சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை திறப்பு Sabari malai temple tomorrow open

சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை திறப்பு Sabari malai temple tomorrow open

சபரிமலை, அக்.15-

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை, நாளை (16-ந் தேதி) மாலை திறக்கப்படுகிறது. சபரிமலை அய்யப்பன் கோவில் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை.

இந்த திருவிழா நாட்களில் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து லட்சக் கணக்கான பக்தர்கள் சபரி மலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். இந்த திருவிழா நாட்கள் தவிர, ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் 5 நாட்களிலும், ஓணம், விஷு பண்டிகை நாட்களிலும், பங்குனி உத்திரம் திருவிழா நாட்களிலும் சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு, பல்வேறு பூஜைகள்- வழிபாடுகள் நடைபெறும்.

எனவே இந்த நாட்களிலும் திரளான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். ஐப்பசி மாத பூஜைஅதன்படி, ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை, நாளை (புதன்கிழமை) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது.

தந்திரி கண்டரரு மகேஷ்வரரு முன்னிலையில், மேல்சாந்தி தாமோதரன் போற்றி நடையை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றுகிறார். அதைத் தொடர்ந்து தீபாராதனை நடைபெறும். நடை திறப்பதையொட்டி, அன்றைய தினம் சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது.

கோவில் கருவறை மற்றும் சுற்றுப்புற பகுதிகள் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறும்.புதிய மேல்சாந்தி தேர்வுமறுநாள் (17-ந் தேதி) சபரிமலை அய்யப்பன் கோவில் மற்றும் மாளிகைப்புறம் அம்மன் கோவில்களுக்கு புதிய மேல்சாந்திகள் தேர்வு நடைபெறுகிறது. அன்று முதல், தினமும் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷபூஜை, உச்சபூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்பட பல பூஜை -வழிபாடுகள் நடைபெறுகிறது.

17-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை தந்திரி கண்டரரு மகேஷ்வரரு தலைமையில் படிபூஜை, உதயாஸ்தமன பூஜை, கலசபூஜை, களபாபிஷேகம் போன்ற சிறப்பு பூஜைகள் நடைபெறும். 21-ந் தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு, இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.
...
Show commentsOpen link

அன்னா ஹசாரே ஆஸ்பத்திரியில் அனுமதி: விரைவில் ஆபரேஷன் செய்ய டாக்டர்கள் முடிவு Anna Hazare hospitalized to be operated soon

அன்னா ஹசாரே ஆஸ்பத்திரியில் அனுமதி: விரைவில் ஆபரேஷன் செய்ய டாக்டர்கள் முடிவு Anna Hazare hospitalized to be operated soon

புதுடெல்லி, அக்.15-

பெருகிவரும் ஊழல்களுக்கு எதிராக வலுவான லோக்பால் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும் என்று போராடி வரும் அன்னா ஹசாரே புனேவில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிராஸ்டேட் சுரப்பி எனப்படும் சிறுநீர் குழாய் தொடங்கும் இடத்தில் உள்ள சுரப்பியில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்கும் வகையில் அவருக்கு விரைவில் ஆபரேஷன் செய்யப்பட உள்ளது.

ஏதாவது ஒரு பிரச்சனையை முன்வைத்து 76 வயதாகும் அன்னா ஹசாரே அடிக்கடி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

கடந்த ஜனவரி மாதம் மார்பக தொற்று நோயால் அவதிப்பட்ட அவருக்கு புனேவில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

தற்போது சிறுநீர் குழாய்க்கு முன்நிற்கும் (புராஸ்டேட்) சுரப்பியில் அடைப்பு ஏற்பட்டு அவதிப்பட்டு வந்த அவர் நேற்று மீண்டும் புனே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது ரத்தக்கொதிப்பு நிலை சீரடைந்ததும் விரைவாக ஆபரேஷன் செய்ய டாக்டர்கள் முடிவு செய்துள்ளதாகவும், அவரது உடல் நிலை பற்றி கவலைப்படும் படியாக ஏதுமில்லை எனவும் ஹசாரேவின் உதவியாளர் தெரிவித்தார்.

...

shared via

முன்னழகை கூட்ட ஆபரேஷன் செய்தாரா ஸ்ரீதேவி? Actress sridevi hot news

முன்னழகை கூட்ட ஆபரேஷன் செய்தாரா ஸ்ரீதேவி?

நடிகை ஸ்ரீதேவி அறுவை சிகிச்சை மூலம் தனது முன்னழகை பெரிதாக்கியுள்ளார் என்று பெயர் தெரிவிக்க விரும்பாத நடிகை ஒருவர் தெரிவித்துள்ளார். கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்று அங்கேயே செட்டிலானவர் சிவகாசி மயிலு ஸ்ரீதேவி.

நீண்ட காலமாக பெரிய திரையில் காணப்படாத அவர் இங்கிலிஷ் விங்கிலிஷ் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.

இதையடுத்து பல்வேறு பொது நிகழ்ச்சிகளுக்கு வரும் ஸ்ரீதேவி பெரும்பாலும் மாடர்ன் டிரஸ் தான் அணிந்து வருகிறார். அவ்வாறு அவர் மாட்ர்ன் டிரஸ் போடுகையில் அவரது முன்னழகு முன்பை விட பெரிதாகத் தெரிகிறது.

இந்நிலையில் இது குறித்து பெயர் தெரிவிக்க விரும்பாத நடிகை ஒருவர் கூறுகையில்,பொது நிகழ்ச்சிகளுக்கு ஸ்ரீதேவி மிகவும் அழகாக வருகிறார். அவரது முன்னழகு முன்பை விட மிகவும் பெரியதாக உள்ளது. அவர் வெயிட் போட்ட மாதிரி தெரியவில்லை. அதனால் அவர் அறுவை சிகிச்சை மூலம் முன்னழகை பெரிதுபடுத்தி இருக்கலாம் என்றார்.

|

shared via

தசரா விழா கோலாகலம்: குலசேகரன்பட்டினத்தில் இன்று இரவு சூரசம்ஹாரம் kulasekarapattinam dasara festival surasamharam

தசரா விழா கோலாகலம்: குலசேகரன்பட்டினத்தில் இன்று இரவு சூரசம்ஹாரம் kulasekarapattinam dasara festival surasamharam

உடன்குடி,அக்.14–

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா கடந்த 5–ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பக்தர்கள் காப்புக் கட்டி பல்வேறு வேடங்கள் அணிந்து காணிக்கை வசூலித்தனர். சுமார் 500–க்கும் மேற்பட்ட தசரா குழுவினர் கரகாட்டம், குறவன்– குறத்தி ஆட்டம், பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நடத்தி அம்மனுக்கு காணிக்கை வசூலித்தனர். இதனால் நெல்லை– தூத்துக்குடி மாவட்டத்தில் தசரா கலைநிகழ்ச்சிகள் கோலாகலமாக நடந்தன.

தசரா திருவிழாவின் 9 நாட்களும் அம்மனுக்கு காலை முதல் இரவு வரை பல்வேறு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பகலில் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இரவில் பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதியுலா வருதல் நடைபெற்றது. மேலும் கோவில் கலையரங்கில் சமய சொற்பொழிவு, இன்னிசை கச்சேரி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரனை அம்மன் வதம் செய்யும் நிகழ்ச்சி இன்று நள்ளிரவு நடைபெறுகிறது. இதைக்காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். வேடமணிந்த பக்தர்கள் குழு, குழுவாக லாரி மற்றும் வேன் போன்ற வாகனங்களில் வந்து குவிகின்றனர். குலசேகரன்பட்டினத்தில் எங்கு பார்த்தாலும் வேடமணிந்த பக்தர்கள் காணப்படுகின்றனர். ஆங்காங்கே தசரா குழுவினர் கலைநிகழ்ச்சிகளும் நடக்கின்றன. இதனால் குலசை விழாக்கோலம் பூண்டுள்ளது.

பக்தர்களின் வசதிக்காக நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. குடிநீர், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

...

shared via

பக்ரீத் பண்டிகை: விஜயகாந்த் 16–ந்தேதி குர்பானி வழங்குகிறார் Bakrid festival vijayakanth give Gurbani

பக்ரீத் பண்டிகை: விஜயகாந்த் 16–ந்தேதி குர்பானி வழங்குகிறார் Bakrid festival vijayakanth give Gurbani

சென்னை, அக்.14–

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

இஸ்லாம் மார்க்கத்தில் பக்ரீத் பண்டிகை தியாகத் திருநாளாக கொண்டாடப்படுகிறது. இருப்பவர்கள், இல்லாதவர்களுக்கு குர்பானி வழங்கி எல்லோரும் ஒன்றாக அன்றைய தினம் பக்ரீத் பண்டிகையை கொண்டாடுவது இயல்பு. பொதுவாக இஸ்லாம் மார்க்கம் ஈகையையும், தியாகத்தையும் போற்றுவதாகும். அந்த வகையில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவது பொருத்தமான ஒன்றாகும்.

தேமுதிக சார்பில் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பக்ரீத் பண்டிகையில் கலந்து கொண்டு இஸ்லாமிய பெருமக்களுக்கு கறி வழங்கி சிறப்பிப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் ஆங்காங்கே உள்ள தேமுதிக நிர்வாகிகள் பக்ரீத் பண்டிகை அன்று இஸ்லாமியர்களுக்கு கறி வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன்.

தே.மு.தி.க. தலைமை கழகத்தின் சார்பில் 16–ந்தேதி புதன்கிழமை அன்று மாலை 4மணி அளவில் பக்ரீத் பண்டிகை கொண்டாடும் நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டு குர்பானி வழங்க இருக்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இஸ்லாமிய பெருமக்களும், கழகத் தோழர்களும் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

...

shared via

Actor Suriya Walks out of Director Gowtham's Project - ச்சீ..ச்சீ..கெளதம் மேனன் படம் புளி

Actor Suriya Walks out of Director Gowtham's Project - ச்சீ..ச்சீ..கெளதம் மேனன் படம் புளி


சூர்யா – கெளதம் மேனன் இருவரும் இணைந்து 'காக்க காக்க', 'வாரணம் ஆயிரம்' ஆகிய படங்களில் பணியாற்றியிருக்கிறார்கள்.
இந்நிலையில் மீண்டும் 'துருவ நட்சத்திரம்' என்னும் படத்தில் இணைந்து பணியாற்ற இருப்பதாக அறிவித்தார்கள். சூர்யா, பார்த்திபன், சிம்ரன் மற்றும் பலர் நடிக்க கெளதம் மேனன் இயக்கும் 'துருவ நட்சத்திரம்' என்று படப்பூஜை போடப்பட்டு, படத்தின் போஸ்டர்களும் வெளியிடப்பட்டன.அதற்குப் பிறகு எப்போது படப்பிடிப்பு, யாரெல்லாம் சூர்யாவுடன் இணைந்து நடிக்கவிருக்கிறார்கள் என்று எதுவுமே தெரியாமலிருந்த. நிலையில் தற்போது சூர்யா, தான் கெளதம் மேனன் படத்திலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்து இருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "கடந்த 2012ம் ஆண்டு ஜுன் மாதம் கெளதம் மேனன் அவர்கள் இயக்கம் மற்றும் தயாரிப்பில், நான் கதாநாயகனாக நடிப்பதாக முடிவானது. இது அனைவரும் அறிந்த செய்தி. பல்வேறு காரணங்களால் இப்போது நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்ற இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னுடைய திரையுலக அனுபவத்தின் அடிப்படையில், நான் நடிக்கும் படத்தின் கதை, மனதிற்கு முழுத்திருப்தி தந்த பிறகே படப்பிடிப்பு செல்வது என்பதை கொள்கை முடிவாக நடைமுறைப்படுத்தி வருகிறேன். ரசிகர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பையும், எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்வதே ஒரு நடிகனாக என்னுடைய முதல் கடமையாக கருதுகிறேன்.

இயக்குநர் கெளதம் அவர்களிடம் என்னுடைய இந்தக் கொள்கை முடிவை முதல் நாளே தெளிவாகச் சொல்லி, அதற்கு அவர் சம்மதித்த பிறகே நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றுவது என முடிவு செய்தோம். இதையே ஒப்பந்தமாகவும் செய்துகொண்டோம். ஆனால், ஒப்பந்தம் செய்து, ஒருவருட காலம் கழிந்த பிறகும், கெளதம் அவர்கள் இன்னும் என்னிடம் முழு கதையை திருப்தி அளிக்கும் வகையில் தரவில்லை.

சிங்கம் 2 படம் முடித்த பிறகு ஆறுமாதங்களாக முழுக்கதையையும் எதிர்பார்த்து காத்திருந்தேன். முதலில் பூஜை போட்டுவிடலாம் என்றார். நட்பின் அடிப்படையில் அதற்கும் ஒத்துழைத்தேன். 'ஒரு டெஸ்ட் ஷுட்' செய்து 'கெட்டப்' மாற்றங்களை முடிவு செய்யலாம் என்றார். தயக்கம் இருந்தாலும், கெளதம் அவர்கள் மீது இருக்கும் நன்மதிப்பின் அடிப்படையில் அதற்கும் ஒத்துழைத்தேன். பல மாதங்களாக ஷுட்டிங் போகாமல், வீட்டில் காத்திருந்தேன். கெளதம் அவர்களிடம் இருந்து, நடிகனாக எனக்கு திருப்தி அளிக்கும் முழுக்கதை கிடைக்கும் என்று இன்றுவரை காத்திருந்தேன். அது நடக்கவில்லை.

முன்பே கெளதம் அவர்கள் 'சென்னையில் ஒரு மழைகாலம்' படத்திற்கு பூஜை போட்டு, ஒரு வாரம் ஷுட்டிங் செய்து, எட்டு மாதங்கள் காத்திருந்தும், கடைசியில் அந்த படம் நடக்கவில்லை. இப்போது இந்தப் படத்திற்கும் அதே அனுபவம் தொடர்ந்து ஏற்படுகிறது.

ஆறுமாத கால காத்திருத்தலுக்குப் பிறகு, இனி காத்திருக்க இயலாத சூழல் எனக்கும் ஏற்பட்டுள்ளது. நானும் கெளதம் அவர்களும் கருத்தளவிலும் எதிரெதில் திசையில் பயணிக்கிறோம் என்று தோன்றுகிறது. இந்நிலையில் நாங்கள் இருவரும் தொடர்ந்து பணியாற்ற இயலாது என்று உறுதியாக நினைக்கிறேன்.

ஒரு திரைப்படம் உருவாவதில் பலரின் பங்கு முக்கியமாகவும், அவசியமாகவும் இருக்கிறது. நடிகனாக நம்பிக்கையில்லாமல் செய்த படங்கள், எனக்கு சரியான பாடங்களைத் தந்திருக்கின்றன். நட்பின் அடிப்படையில் கெளதம் அவர்களுடன் இணைந்து பணியாற்ற என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் எடுத்துவிட்டேன். இனி நாங்கள் இருவரும் இப்படத்தில் இணைந்து பணியாற்ற இயலாது. அதனால் கெளதம் அவர்களின் படத்தில் இருந்து விலகி கொள்கிறேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

shared via

Sunday, October 13, 2013

மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் கோளாறால் இளம்பெண் பரிதாப சாவு young girl dead

மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் கோளாறால் இளம்பெண் பரிதாப சாவு
by veni
Tamil news, Tamil culture, செய்திகள் ...Today,

ராஜபாளையம்: நடத்தையில் சந்தேகம் காரணமாக கணவனால் கத்தியால் குத்தப்பட்ட இளம் பெண்ணை அரசு மருத்துவமனையில் சேர்த்தபோது, அங்கு ஆக்சிஜன் சிலிண்டரை அரை மணி நேரமாக திறக்க முடியவில்லை. இதற்கிடையே அந்த பெண் பரிதாபமாக இறந்தார். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் சம்மந்தபுரம் குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் மைதீன் (32). இவரது மனைவி ராத்திகா (28). திருமணமாகி ஏழு ஆண்டுகளாகின்றன. இந்தத் தம்பதிக்கு ரூமானா (6), அகிஷா (3) ஆகிய இரு மகள்கள் உள்ளனர். மைதீன் தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்து வருகிறார். மனைவி ராத்திகாவின் நடத்தையில் சந்தேகப்பட்ட மைதீன் அடிக்கடி தகராறு செய்து வந்தார். இதுதொடர்பாக, ராத்திகா ஊர் பெரியவர்களிடம் புகார் செய்தார். அவர்கள் அழைத்து பேசியும் மைதீன் சமாதானம் அடையவில்லை. கடந்த வாரம் ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசில் ராத்திகா புகார் செய்தார். இந்த நிலையில், நேற்று அதிகாலையில் கணவன், மனைவி இடையே வழக்கம்போல் தகராறு ஏற்பட்டது.ஆத்திரமடைந்த மைதீன், கத்தியால் மனைவியை சரமாரியாக குத்தினார். ராத்திகாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். உடனே மைதீன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். '108' ஆம்புலன்ஸ் மூலம் ராத்திகாவை ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளிக்க முயற்சித்தனர். ஆக்சிஜன் சிலிண்டரை திறக்க மருத்துவ ஊழியர்கள் வெகுநேரம் முயன்றும் முடியவில்லை. இதனால் அரைமணி நேரம் உயிருக்கு போராடிய ராத்திகா உயிரிழந்தார். ராஜபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மைதீனை கைது செய்தனர்.

The post மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் கோளாறால் இளம்பெண் பரிதாப சாவு appeared first on ekuruvi is a tamil news Portal offering online tamil news.

Show commentsOpen link

நய்யாண்டி விமர்சனம் Naiyaandi Review

நய்யாண்டி விமர்சனம் Naiyaandi Review

by abtamil

நல்லாத்தானே போய்க்கிட்டிருந்துச்சு? அப்புறம் ஏன் இப்படி என தனுஷும், சற்குணமும் மாறிமாறி கேட்டுக்கொள்ளவேண்டிய சூழ்நிலையை இந்த நய்யாண்டி படம் உருவாக்கியிருக்கிறது என்றே சொல்லலாம்.

மரியாணில் மண்ணைக்கவ்வியிருந்தாலும் ஹிந்தியில் ராஞ்சானாவின் வெற்றியால் தனுஷ் தன் அடுத்த அடியை இன்னும் கவனமாய் எடுத்து வைப்பார்; தமிழ், ஹிந்தி என இரண்டு மொழிகளையும் பாலன்ஸ் செஞ்சு முன்னேறுவார் எனப் பார்த்தால்…

களவாணி படத்தை கலகலப்பாய் கொடுத்து ஆட்டத்தை துவங்கிய சற்குணம் அதற்குப்பின் ஜப்பானிய தாக்கம் இருந்தாலும் தரமாய் எடுத்து தேசிய விருதுகளை வாங்கி வாகை சூடிய பின் அடுத்து இன்னொரு தேசிய விருது நாயகனான தனுஷுடன் இணைய, அட சரியான டீமா அமைஞ்சிருக்கே…. ஒரு கலக்கு கலக்கிடுவாங்க போல என எதிர்பார்த்தால்..

மறுபடி முதல் வரியைப் படிக்கவும்.

ஒரு புறாவைப் பிடிக்க பெரிய கிணற்றைத் தாண்டி அறிமுகம் ஆகிறார் சின்ன வண்டு  (தனுஷ்). அந்த கிணறு தாண்டும் படத்தை படமாக்கியிருக்கும் விதமே பல்லிளிக்கிறது. சரி ஆரம்பத்துல லைட்டா ஸ்லிப்பாகியிருக்கு… அடுத்து எந்திருச்சுடுவாங்க எனப் பார்த்தால் வில்லன் அறிமுகம். 'அந்தப் பொண்ணோ டாக்டர், நீங்க பத்தாங்க்ளாஸ் ஒத்துவருமா?' என ஒரே ஒரு கேள்விகேட்ட தன் ட்ரைவரை ஓடும் காரிலிருந்து தலையை வெளியே திணித்து போஸ்ட் கம்பத்தில் அடித்து இரத்தம் வழிய கொலை செய்து தான் வில்லன் என ப்ரூப் பண்ண.. என்னடா இது பத்து வருசத்துக்கு முன்னாடி வந்த படம் மாதிரி இருக்கே என நமக்கு வயிறு கலங்கி லேசாய் சந்தேகம் வர, சந்தேகம்லாம் வேண்டாம் பிரதர்.. கண்டிப்பா 15 வருசத்துக்கு முன்னாடி வந்திருக்க வேண்டிய படம் தான் இது என அடுத்த ஒரு மணி நேரத்துக்கு தனுஷ் நஸ்ரியாவை பார்த்து காதல் வயப்படும் காட்சிகளை அந்தக் காலத்து ராமராஜன், விஜயகாந்த் படங்களின் காதல் எபிசோட்களை விட சுமாராய் எடுத்து ப்ரூப் பண்ணுகிறார் இயக்குநர்.

அதன் பிறகு செகண்ட் ஆஃபில் டைட்டிலில் குறிப்பிட்ட மலையாளப் படமான 'மேலபரம்பில் யான் வீடு' படக் கதை துவங்குகிறது. அதாவது கல்யாணம் ஆகத 40, 38 வயதில் இரு அண்ணன்கள் (ஸ்ரீமன், சத்யன்) இருக்க தான் கல்யாணம் செய்துகொண்டால் அப்பா அம்மா கோவித்துக்கொள்வார்களே, அண்ணன்களுக்கு பெண் கிடைக்காதே என்ற பயத்தில் தான் காதலித்து கல்யாணம் பண்ணிக்கொண்ட வனரோஜாவை(நஸ்ரியா) தன் வீட்டிலேயை அனாதை என வேலைக்கு சேர்த்துவிட, ஆனால் அந்தப் பெண்ணைப் பார்த்து அண்ணன்கள் இருவரும் மாறி மாறி ஜொள்ளு விட, கிடைத்த கேப்பில் வனரோஜா கர்ப்பமாக, இதற்கிடையே பர்ஸ்ட் ஆஃப் வில்லன் இங்கேயும் வர.. அப்புறம் எல்லாம் சுபமா இல்லையா என யாருமே ஊகிக்க முடியாத முடிவை நீங்கள் கட்டாயம் வெள்ளித்திரையில் தான் காண வேண்டும்.
இடையிடையே தமிழ் சினிமா கொஞ்ச காலமாய் மறந்திருந்த வில்லேஜ் கதைக்கு பாரின்ல பாடல் காட்சிகள் கண்றாவி வேற. சில சில காட்சிகளில் ஸ்ரீமன், சூரி சிரிப்பூட்டினாலும் பெரும்பாலும் கடியோ கடி.

ஊசிப்போன சாம்பாருல, வெங்காயம் ருசியா இருந்துச்சா இல்ல முருங்கைக்கா இளசா இருத்துச்சான்னு ஆராய்ச்சி பண்றது அனாவசியம் என்ற காரணத்தால் நடிப்பு, இசை, ஒளிப்பதிவு, இன்னபிற சமாச்சாரங்களையெல்லாம் பற்றி பேசி கடுப்பேற்றாமால் இத்துடன் இந்த விமர்சனத்தை முடித்துக்கொள்கிறோம்.

மேலும் அந்த தொப்புள் தெரிகிறதா இல்லையா என்ற அதி முக்கியமான கேள்விக்கு விடைதேடி தியேட்டருக்கெல்லாம் போய் காசை  கரியாக்கிடாதீங்க பிரதர்.

தமிழ் சினிமா கடந்த சில வருடங்களில் எந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது என்பது இந்தப் படத்தைப் பார்த்த பின் தான் ஞாபகம் வருகிறது. அந்த வளர்ச்சியில் தானும் ஒரு கை குடுத்த சற்குணமே இப்போது சறுக்கி பின்னோக்கி போய் விட்டார் என்பது தான் வருத்தமான விசயம்.

இந்தப் படம் வந்த மாதிரியே காட்டிக்காம மறந்துட்டு அடுத்து ஒரு உருப்படியான படத்தை எடுக்கிற சிந்தனையில் சற்குணம் தன் திரைப்பயணத்தை தொடர வேண்டும், இனியாவது கதையே கேட்டு நடிக்கும் பழக்கத்தை தனுஷ் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம்.

Show commentsOpen link

My Blog List

Popular Posts

Popular Posts