தினசரி செய்திகள்

Saturday, October 12, 2013

எழுதிக் கொடுத்ததை படிக்கும் ‘அப்பாவி குழந்தை’ ராகுல்: சமாஜ்வாடி கட்சி தலைவர் ஆசம் கான் கிண்டல் Rahul an innocent child who reads whatever given to him Azam

எழுதிக் கொடுத்ததை படிக்கும் 'அப்பாவி குழந்தை' ராகுல்: சமாஜ்வாடி கட்சி தலைவர் ஆசம் கான் கிண்டல் Rahul an innocent child who reads whatever given to him Azam

Tamil NewsYesterday,

பதான், அக். 12-

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் நடந்த மதக்கலவரத்தின் போது ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டனர். அந்த குடும்பத்தைச் சேர்ந்தோர்களை நேற்றிரவு சந்தித்து விட்டு திரும்பிய உ.பி. அரசின் கேபினட் மந்திரிகளில் ஒருவரான ஆசம் கான் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி குறித்து அவர் கூறியதாவது:-

ராகுல் ஒரு அப்பாவி குழந்தை என ராம் தேவ் கூட கூறியிருக்கிறார். ஆனால் நான் சொல்கிறேன். அவருக்கு என்ன எழுதிக்கொடுக்கிறார்களோ அதை படிக்கும் ஒரு அப்பாவி குழந்தை அவர். தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல், மரம் அறுக்கும் பட்டறையை ஒட்டுப்பலகை தொழிற்சாலை என்று கூறுகிறார். சமாஜ்வாடி அரசுதான் கலவரத்தை தூண்டிவிட்டு வருகிறது என்று அவர்கள் கூறுகிறார்கள். இங்கு மதக்கலவரங்களுக்கு காங்கிரஸ் கட்சிதான் அடிக்கல் நாட்டியுள்ளது.

50 வருடங்களுக்கு மேலாக ஆண்ட காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் தான் நாட்டில் பல மதக்கலவரங்கள் நடந்துள்ளன. மதக்கலவரத்தின் போது அகிலேஷ் யாதவ் அரசு சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
...
Show commentsOpen link

Thursday, October 10, 2013

பிரபு சார் போல் நடிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டேன்: கார்த்தி பேச்சு actor karthi cinema latest news

பிரபு சார் போல் நடிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டேன்: கார்த்தி பேச்சு

by veni
ekuruvi.com is Tamil news, Tamil culture, செய்திகள்
 
கார்த்தி-காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஆல் இன் ஆல் அழகுராஜா'. இப்படத்தை தொடர் வெற்றிப் படங்களைக் கொடுத்த ராஜேஷ் இயக்குகிறார். தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், தீபாவளிக்கு வெளிவரவிருக்கிறது.
இந்நிலையில், இப்படத்தின் பாடல் வெளியீடு இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் நடிகர் சூர்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் கார்த்தி, ராதிகா ஆப்தே, சரண்யா பொன்வண்ணன், இயக்குனர் ராஜேஷ், தயாரிப்பாளர் டி.ஞானவேல்ராஜா, இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

விழாவில் கார்த்தி பேசும்போது,

இயக்குனர் ராஜேஷின் 'சிவா மனசுல சக்தி' படம் பார்த்தபோதே ராஜேஷ் அப்படத்தை முழுக்க முழுக்க நகைச்சுவையோடு எடுத்திருப்பதை கண்டு வியந்தேன். ராஜேஷின் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவேண்டும் என்று நினைத்திருந்தேன். தற்போது அது நிறைவேறியுள்ளது.

இந்த படத்தில் 80-களில் நடப்பதுபோன்று காட்சி ஒன்றை அமைத்துள்ளோம். அதில் பிரபு சார் போலவே கெட்டப் அணிந்து, அவரைப்போலவே நடித்துள்ளேன். இதற்காக மிகவும் பயிற்சி எடுக்க வேண்டியிருந்தது. ஒரு கட்டத்தில் இதை நம்மால் சரிவர செய்யமுடியாது என்று விலக நினைத்தேன். ஆனால், இயக்குனர் வேண்டுகோளுக்கிணங்க இதை வெற்றிகரமாக செய்துமுடித்தேன். இப்படம் சிறந்த காமெடி படமாக இருக்கும். காஜல் அகர்வால் இப்படத்தில் பரதநாட்டியம் ஆடியுள்ளார். அது மிகவும் உங்களை கவரும்.

இவ்வாறு அவர் பேசினார்.

சூர்யா பேசும்போது, இயக்குனர் ராஜேஷின் இயக்கத்தில் நான் ஒரு படம் பண்ணவேண்டியது. ஆனால், ஒரு எஸ்எம்எஸ்-ஆல் அது நிறைவேறாமல் போய்விட்டது. இவருடைய இயக்கத்தில் வெளிவந்த ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தை கண்டு வியந்து போனேன். படம் முழுக்க நகைச்சுவையோடு கொண்டு செல்லும் சிறப்பு ராஜேஷிடம் உள்ளது. இவரின் படம் எல்லாத்தரப்பு மக்களையும் திருப்திபடுத்தும்.

2 நாட்களுக்கு முன்புவரை உடல் நிலை சரியில்லாத நிலையில் இருந்த கார்த்தி, இந்த நிகழ்ச்சிக்காக மிகவும் பொலிவுடன் வந்துள்ளார். இதற்கு இந்த படத்திலுள்ள பாசிட்டிவ் எனர்ஜியே காரணம் என்று நினைக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

The post பிரபு சார் போல் நடிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டேன்: கார்த்தி பேச்சு appeared first on ekuruvi is a tamil news Portal offering online tamil news.

Show commentsOpen link

தொப்புள் காட்சிக்கு 17 முறை டேக்; உண்மையை உடைத்த தனுஷ் 17 take with nasriya and danush

தொப்புள் காட்சிக்கு 17 முறை டேக்; உண்மையை உடைத்த தனுஷ்

by abtamil
Tamil newsYesterday,

நடிகை நஸ்ரியா நய்யாண்டி படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இதை இயக்குனர் சற்குணம் இயக்கியுள்ளார். படம் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் வேறு ஒருவரை வைத்து என் தொப்புள் காட்சி போல் படம்பிடித்து விட்டார் இயக்குனர் என நஸ்ரியா புயல் வேகத்தில் கமிஷனர் அலுவலகம் சென்றார். கடைசியில் இயக்குனர் காட்சிகளை நீக்கிவிட்டார் அதனால் புகாரை திரும்ப பெறுகிறேன் என கமிஷ்னர் அலுவலகத்தில் பத்திரிக்கையாளரிடம் தெரிவித்தார்.

ஆனால் முடிந்து போன பிரச்சனைக்கு தனுஸ் மீண்டும் பிள்ளையார் சுழி போட்டுள்ளார். நாஸ்ரியா தான் முழுக்க முழுக்க என்னுடன் படுக்கையறைக் காட்சியில் நடித்துள்ளார். நடிக்கும் போது கூச்ச படாமல் காட்சிக்கு ஏற்றவாறு நெருக்கமாக தான் நடித்தார். கட்சியை படமாக்கும் போது இயக்குனர் சற்குணம் மற்றும் ஒளிப்பதிவாளர் மட்டும் தான் அறையில் இருந்தனர். நஸ்ரியாவின் முகத்தில் இருந்து என் கை ஆரம்பித்து அவரின் தொப்புளுக்கு கீழே வரை செல்லுமாறு காட்சி வைத்தனர். அந்த காட்சியில் நஸ்ரியா நடிக்கும் போது மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை. நான் கையை தொப்புளுக்கு கொண்டுவரும் காட்சியை மட்டும் பதினேழு முறை டேக் எடுத்தனர். அத்தனை முறையும் நஸ்ரியா நல்ல முறையில் ஒத்துழைப்பு கொடுத்தார்.

ஆனால் அவர் கேரளா சென்றதும் என்னை தொடர்பு கொண்டு, என்னுடைய குடும்பதில் படிக்கையறைக் கட்சிக்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளனர், எனவே அதை நீக்கவேண்டும் என கேட்டார். ஆனால் அதற்குள் கமிஷனர் அலுவலகம் சென்று பிரச்சனையை பெரிது படுத்திவிட்டார். நஸ்ரியா கொஞ்சம் பொறுமையாய் இருந்திருந்தால் நானே இயக்குநரிடம் பேசி பிரச்சனையை சரிபடுத்தி இருப்பேன் என தெரிவித்துள்ளார்.

நஸ்ரியா இதை கேள்விபட்டதும் என்ன செய்ய காத்திருக்கிறார் என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Show commentsOpen link

ஜில்லா படத்தின் கதை இதோ…! Jilla movie review

ஜில்லா படத்தின் கதை இதோ…!!
by abtamil

Tamil newsToday,

ஜில்லா படத்தில் விஜய் பொலிஸ் அதிகாரியாகவும், மோகன்லால் தாதாவாகவும் நடிக்கிறார்கள்.
ஆர்.பி.சௌத்ரி தயாரிக்கும் படம் தான் ஜில்லா. துப்பாக்கியை அடுத்து விஜய், காஜல் அகர்வால் இந்த படத்தில் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளனர்.

படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும், இத்தனை நாட்களாக படங்களில் இருந்து தள்ளி இருந்த பூர்ணிமா பாக்யராஜும் நடிக்கின்றனர்.

படத்தில் மோகன்லால் தாதாவாக நடிக்கிறார். அவரது மகனாக வரும் விஜய் பொலிஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

ஒரு தாதாவின் மகன் எப்படி பொலிஸ் அதிகாரி ஆகிறார் என்பது தான் ஜில்லாவின் கதையாம்.

படத்தின் முதல்பாதி காதல், கொமடி என்று கல கலவென இருக்க இரண்டாம் பாதி ஆக்ஷன் நிறைந்ததாகவும், பல திருப்பங்களைக் கொண்டதாகவும் இருக்குமாம்.

Show commentsOpen link

Wednesday, October 9, 2013

“சொன்னதெல்லாம் பொய், பொய்யைத் தவிர வேறில்லை…” actress nasriya press meet

"சொன்னதெல்லாம் பொய், பொய்யைத் தவிர வேறில்லை…" : நஸ்ரியா அர்ஜென்ட் பிரஸ்மீட்டின் ஃபுல் ரிப்போர்ட்???
by abtamil

Tamil newsToday,

பொய்யும் புரட்டுகளும் மட்டுமே நிறைந்த இப்படி ஒரு பிரஸ்மீட்டை இதுவரை சினிமா பத்திரிகையாளர்கள் சந்தித்திருக்க மாட்டார்கள்.

அந்தளவுக்கு வார்த்தைக்கு வார்த்தை புளுகுமூட்டைகளை அவிழ்த்து விட்ட பிரஸ்மீட்டாகத்தான் அமைந்தது 'நய்யாண்டி' விவகாரத்தில் நஸ்ரியாவின் அர்ஜெண்ட் பிரஸ்மீட்.

இந்த பொய் முதலில் அவர் பிரஸ்மீட்டுக்கு வர லேட்டானதிலிருந்தே ஆரம்பித்தது. அதாவது ஏழரை மணிக்கு வருவார் என்று சொல்லப்பட்ட நஸ்ரியா எட்டேமுக்காலுக்குத்தான் வந்து சேர்ந்தார்.

அப்போதே ஏன் இவ்ளோ லேட் என்று பத்திரிகையாளர்கள் கேட்டபோது "ப்ளைட் லேட் என்று அவர் தரப்பில் பதிலாக சொல்லப்பட்டது."
அப்படியானால் காலையில் நான் படம் பார்த்து விட்டேன் என்று நஸ்ரியா சொன்னதாக வந்த தகவல்கள் எல்லாமே பொய். அதாவது அவர் கேரளாவில் தான் வேறொரு படப்பிடிப்பில் இருந்திருக்கிறார். அப்படி இருக்கும் போது அவர் எப்படி காலையில் 'நய்யாண்டி' படத்தை சென்னையில் பார்த்திருப்பார்?

படத்தை அவரது அப்பா, அவரது வக்கீல், தயாரிப்பாளர் எஸ்.கதிரேசன் உட்பட சிலர் மட்டுமே சென்னையில் உள்ள போர்ப்ரேம்ஸ் ப்ரிவியூவ் தியேட்டரில் பார்த்திருக்கிறார்கள். அவர் பார்க்கவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.

ஆனால் பிரஸ்மீட்டில் நான் காலையிலேயே படத்தை பார்த்து விட்டேன். நான் ட்ரெய்லரில் ஆட்சேபித்த அந்தக்காட்சி படத்தில் இல்லை. இப்போது முழுப்படத்திலும் நான்தான் நடித்திருக்கிறேன் என்று வந்த வேகத்திலேயே கூசாமால் பொய் சொன்னார் நஸ்ரியா.

சரி தியேட்டரில் படம் பார்த்ததாக சொல்றீங்க? எந்த தியேட்டரில் பார்த்தீங்க? அதுக்கு ஆதாரம் இருக்கா? என்று ஒரு நிருபர் நஸ்ரியாவிடம் கேட்க 'எந்த தியேட்டரில் பார்த்தேன்னு தெரியல' என்று திருதிருவென முழித்தவர் பிறகு பக்கத்தில் இருந்த தயாரிப்பாளரின் முகத்தை பார்க்க அவர் இந்த தியேட்டர் தான் என்று சொல்ல உடனே நஸ்ரியா ஆமாம், இந்த தியேட்டர்ல தான் பார்த்தேன் என்று அடுத்த பொய்யை அவிழ்த்து விட்டார்.

"தயாரிப்பாளரும், டைரக்டரும் உங்களை மிரட்டியதா நீங்க கம்ப்ளெயிண்ட் கொடுத்திருக்கீங்க?" அது உண்மையா என்று அடுத்த கேள்வி வந்தபோது " இல்ல நான் அப்படி எந்த கம்ப்ளெயிண்ட்டும் குடுக்கல" என்றார். அப்போது கேள்வி கேட்ட நிருபர் இல்லியே நீங்க உங்களோட கம்ப்ளெயிண்ட் பேப்பரிலேயே அதை சொல்லியிருக்கீங்களே? என்று கையோடு கொண்டு வந்த அதன் ஜெராக்ஸ் காப்பியை தூக்கி காண்பித்தார்.

இதற்கு என்ன பதில்? சொல்வது என்று தெரியாமல் தடுமாறினார் நஸ்ரியா.

பிறகு நீங்கள் சார்ந்திருக்கும் இஸ்லாமிய மதத்தை சொல்லி டைரக்டர் திட்டியதாக புகாரில் கூறியிருக்கிறீர்களே? என்று அடுத்த கேள்வி வந்தபோது "இல்லை நான் அப்படிச் சொல்லல. அதாவது என் மதத்தை சார்ந்தவர்களுக்கும், என் குடும்பத்தாருக்கும், ஃப்ரெண்ட்ஸ்களுக்கும் அந்தக்காட்சி பிடிக்கலேன்னு தான் சொன்னேன் என்று யோசிக்காமல் அந்தர்பல்டி அடித்தார்.

முன்னதாக மொத்த விவகாரத்துக்கும் விளக்கம் கொடுத்த அவர் "நான் ட்ரெய்லரில் பார்த்த பிரச்சனைக்குரிய காட்சி படத்தில் இல்லை. அதனால் நான் தயாரிப்பாளர் மீதும், டைரக்டர் மீதும் கொடுத்த கம்ப்ளெயிண்ட்டை நாளைக்கு வாபஸ் வாங்குவேன்" என்று கூறினார்.

இப்படி நஸ்ரியா அடுக்கடுக்கான பொய்களை அவிழ்த்து விட கூடவே வந்திருந்த தயாரிப்பாளர் எஸ்.கதிரேசனும் தன் பங்குக்கு பொய்களை சொல்ல ஆரம்பித்தார். அதாவது அந்த சர்ச்சைக்குரிய சீனில் உங்களை நடிக்கக் கூப்பிட்டபோது இந்த ஒரு சீனுக்காக கேரளாவில் இருந்து நான் வரமுடியாது, நீங்க வேற யாரையாவது டூப் போட்டு எடுத்துக்கங்க? என்று நீங்கள் தான் சொன்னதாக டைரக்டர் சற்குணம் நேற்று கூறியிருக்கிறாரே? என்று ஒரு நிருபர் கேட்டபோது " இல்லை டைரக்டர் என்கிட்ட பெர்மிஷன் கேட்கவேயில்லை, நானும் அப்படிச் சொல்லவில்லை, வேணும்னா இவர்கிட்ட கேட்டுப்பாருங்க என்று பக்கத்தில் இருந்த தயாரிப்பாளரை கை காட்டினார்.

அதற்கு தயாரிப்பாளரோ இல்லை சார் அதைப்பத்தி எனக்கு ஒண்ணும் தெரியாது என்று தன் பங்குக்கு ஒரு பொய்யை சொல்லி வைத்தார். ( அதாவது ஒரு படத்தோட ஷூட்டிங் தயாரிப்பாளருக்கே தெரியாம நடந்தது இந்தப்படத்துல தான் போல…)

அதேபோல இந்த சின்ன விஷயத்தைப் போய் நீங்க பெரிசாக்குறீங்களே நாளைக்கு உங்களை எப்படி மத்த டைரக்டர்கள் நடிக்க கூப்பிடுவாங்க என்று கேட்க "அதுக்கு நான் என்ன சார் பண்ணமுடியும். என்னோட சீனை எடுக்கும் போது என்கிட்ட பெர்மிஷன் கேட்கணும் இல்லியா?" என்றார் பிரச்சனையின் சீரியஸ் தெரியாமல்.
சரி அதையெல்லாம் விடுங்க இப்போ டைரக்டர் சற்குணம் கூட சமாதானமாயிட்டீங்களா? இல்லியா? என்று கேட்டால் எனக்கு அவருக்கும் சண்டையே வரல சார். சண்டை வந்தாதானே சமாதானம் ஆகுறத்துக்கு. இதுல என்ன பிரச்சனைன்னா எங்க மூணு பேருக்குள்ளேயும் கம்யூனிகேஷனே இல்ல அதுதான் பிரச்சனை.

உடனே டென்ஷனான பத்திரிகையாளர்கள் நீங்க ஒண்ணும் பேசுறீங்க? தயாரிப்பாளர் ஒண்ணு பேசுறார், டைரக்டர் ஒண்ணைச் சொல்றார். நீங்க ஏன் இந்த பிரஸ்மீட்டுக்கு டைரக்டரை கூட்டிட்டு வரல என்று கேட்டபோது " இல்லை சார் அவரோட பையனுக்கு உடம்பு சரியில்லை, அதனால ஊருக்கு போயிருக்காரு…," என்று முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைத்தார் தயாரிப்பாளர் எஸ்.கதிரேசன்.

ஆனால் நஸ்ரியாவுடன் தயாரிப்பாளர் சமாதானமாகி விட்டாரே தவிர டைரக்டர் சற்குணம் இதுவரை நஸ்ரியாவிடம் சமாதானம் ஆகவில்லை என்பதே உண்மை. அந்தக்கோபத்தில் தான் அவர் இந்த பிரஸ்மீட்டை தவிர்த்தார் என்று அவர் தரப்பிலிருந்து நமக்கு உறுதியா பதில் கிடைத்தது.

உண்மை நிலைமை இப்படி இருக்க "மறுபடியும் சற்குணம் படத்துல நடிப்பீங்களா?" என்று ஒரு நிருபர் முத்தாய்ப்பாக கேட்டு வைக்க " "அவர் கூப்பிட்டார்னா கண்டிப்பா நடிப்பேன்" என்றாரே பார்க்கலாம் நஸ்ரியா.

அவரின் இந்தப்பதிலைக் கேட்டு "இன்னுமா கைப்புள்ள இந்த உலகம் நம்மளை நம்பிக்கிட்டிருக்கு" என்று தான் சொல்லத்தோன்றியது.

பிரஸ்மீட்டில் நடந்த சில சுவாரஷ்யங்கள் :

+ நான் மீடியாக்கள் முன்னால் பேசுகிறோம் என்ற எந்தவித பய உணர்வும் இல்லாமல் வார்த்தைக்கு வார்த்தை பொய்களை மட்டுமே பேசினார் நஸ்ரியா.

+ மிகவும் சிம்பிளாக எந்தவித மேக்கப்பும் இல்லாமல் தான் பிரஸ்மீட்டுக்கு வந்திருந்தார் நஸ்ரியா.

+ இத்தனை அடுக்கடுக்கான கேள்விகள் வரும் என்று நஸ்ரியா எதிர்பார்த்திருக்க மாட்டார் போலிருக்கிறது. அதனால் தான் பல கேள்விகளுக்கு அவரால் சரியான பதிலைச் சொல்லமுடியவில்லை.

+ பல கேள்விகள் நஸ்ரியாவை ஆத்திரமூட்டும் விதமாக இருந்தாலும் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகள் நியாயமாக இருந்தது என்பது தான் உண்மை.

+ இதே மாதிரி திருமணம் என்னும் நிஹ்ஹா படத்துக்கும் பிரச்சனை பண்ணுவீங்களா? என்று கேட்டபோது இல்ல அந்தப்படத்தோட கதை எனக்கு தெரியும் என்று சொல்லி சமாளித்தார்.

+ இப்படி சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் பிரச்சனை பன்றீங்களே? தயாரிப்பாளரை நெனைச்சி பார்த்தீங்களா? என்று கேட்டபோது அதான் நான் அவரோட சமாதானமாயிட்டேன் என்றார்.

+ பிரஸ்மீட்டில் கேள்விகள் கேட்ட ஆரம்பித்த உடனே தயாரிப்பாளர் நஸ்ரியாவின் மேனேஜரிடம் பிரஸ்மீட்டை நிறுத்தும்படி சைகையால் கேட்டுக்கொண்டே இருந்தார்.

Show commentsOpen link

‘கெளதம் எனக்கு ஈஸியா செட் ஆவாரு!’ – லட்சுமி மேனன் gowtham karthik with lakshmi menon

'கெளதம் எனக்கு ஈஸியா செட் ஆவாரு!' – லட்சுமி மேனன்

by Admin

'கும்கி' படம் மூலம் தமிழில் தடம் பதித்தவர், லட்சுமி மேனன். இவர் நடித்த 'சுந்தர பாண்டியன்', 'குட்டிப்புலி' படங்களும் ஹிட்டாக, அம்மணி அடுத்தடுத்த படங்களில் பிஸியாகி விட்டார். தற்போது, விமலுடன் 'மஞ்சப்பை', கெளதம் கார்த்திக்குடன் 'சிப்பாய்', விஷாலுடன் 'பாண்டிய நாடு', சித்தார்த்துடன் 'ஜிகர்தண்டா', விஜய் சேதுபதியுடன் 'வசந்தகுமாரன்' என 5 படங்கள் இவர் கைவசம் உள்ளன. மலையாளத்தில் அறிமுகமானாலும், தமிழில் வாய்ப்பு குவிவதால்… தற்போதைக்கு தமிழைத் தவிர வேறு மொழிகளில் நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். 'பாண்டிய […]
Show commentsOpen link

இன்னும் 7 ஆண்டுகளுக்கு பிறகு சாக்லேட் யாருக்கும் கிட்டாத அரிபொருள் ஆகிவிடும்: நிபுணர்கள் தகவல் World might run out of chocolate by 2020

இன்னும் 7 ஆண்டுகளுக்கு பிறகு சாக்லேட் யாருக்கும் கிட்டாத அரிபொருள் ஆகிவிடும்: நிபுணர்கள் தகவல் World might run out of chocolate by 2020

Tamil NewsToday,

புதுடெல்லி, அக்.10-

குழந்தைகள் முதல் முதியவர் வரை சாக்லேட் என்ற மந்திர வார்த்தையை கேட்டவுடன் இளமுறுகலான அந்த பொன்னிறமும், மனதை சுண்டி இழுக்கும் அதன் மணமும், சுவையும் நாக்கில் நீரை சுரக்கச் செய்து விடும்.

கோக்கோ என்னும் மூலப்பொருளால் தயாரிக்கப்படும் அசல் சாக்லேட்களுக்கு உலகளாவிய அளவில் கடும் கிராக்கி உள்ளது. ஒருபுறம் சாக்லேட் பிரியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. மற்றொரு புறம், கோக்கோவை பயிரிடும் விளை நிலங்கள் நாளடைவில் குறுகிக்கெண்டே போகின்றன.

கோக்கோவை பணப் பயிராக விளைவித்து வந்த விவசாயிகள் பலர் தற்போது அதிக லாபம் தரக்கூடிய ரப்பர் மரத்தின் மீது கவனத்தை செலுத்த தொடங்கி விட்டனர்.

தரமான கோக்கோ விளைச்சலுக்கு பெயர் போன தென்னாப்பிரிக்க நாடுகளும் இனி கோக்கோவை பயிரிடுவதால் பெரிய லாபத்தை பார்க்க முடியாது என்று முடிவெடுத்து விட்டது.

இந்நிலையில், தேர்வில் பாஸ் ஆகிய செய்தியை சொல்ல, காதலை வெளிப்படுத்த என ஆண்-பெண் இருபாலருக்கும் அருமையான தூதுவனாக இருந்து வந்த சாக்லேட்டின் விலை தாறுமாறாக எகிறும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அதுவும், முழுக்க முகுக்க பதப்படுத்திய கிரீமி சாக்லேட்களுக்கு பதிலாக, சிறிதளவு சாக்லேட் கலக்கப்பட்ட மொறுமொறுப்பான வேஃபர் வகைகள் தான் சந்தையில் கிடைக்கும்.

2020-க்கு பிறகு தூய சாக்லேட் என்பது சாமான்ய மக்களின் கைகளுக்கு எட்டாத அரிபொருளாகி விடும் என நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
...
Show commentsOpen link

நய்யாண்டி படத்துக்கு ஆப்பா? Nyaandi movie advertisement trick

நய்யாண்டி படத்துக்கு ஆப்பா?

by abtamil
Tamil newsToday,

நய்யாண்டி படத்தை ரிலீசுக்கு முன் எனக்கு போட்டுக் காட்ட வேண்டும். இல்லாவிட்டால் அந்தப் படத்தை நிறுத்த வேண்டும், என படத்தின் நாயகி நஸ்ரியா நஸீம் கமிஷனரிடம் வற்புறுத்தியுள்ளார். நஸ்ரியா இன்று பிற்பகல் சென்னை போலீஸ் கமிஷனரிடம் இயக்குநர் சற்குணம் மற்றும் தயாரிப்பாளர் கதிரேசனுக்கு எதிராக புகார் கொடுத்தார். அப்போது நய்யாண்டி படம் வெளியாகாமல் நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அவரது குற்றச்சாட்டின் முக்கியமான பகுதி இது: நான் நடித்த நய்யாண்டி படத்தில் என் அனுமதி இல்லாமல், நான் நடிக்காத பகுதியை நடித்தது போல காட்டியுள்ளனர். இது எனக்கும் என் குடும்பத்துக்கும் நான் சார்ந்த மதத்துக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது. இயக்குநர் சற்குணம் இதன் மூலம் மோசடியானவர் என்பது அம்பலமாகியுள்ளது. இதுபோல மேலும் எத்தனை காட்சிகளை படத்தில் வைத்துள்ளாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்தப் படம் வரும் அக்டோபர் 11-ம் திகதி வெளியாகிறது. அதற்கு முன் அந்தப் படத்தை எனக்கு முழுவதுமாகப் போட்டுக் காட்டி,நான் ஆட்சேபிக்கிற காட்சிகளை தூக்க வேண்டும். இல்லாவிட்டால் படம் வெளியாவதையே தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் என் குடும்பமும் மதமும் ரசிகர்களும் கடுமையாக எதிர்ப்பார்கள்.-இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார் நஸ்ரியா.

Show commentsOpen link

Tuesday, October 8, 2013

மீடியா நண்பர்களுடன் படம் பார்த்து நானில்லை டூப் என்று சொல்ல தயாரா? நஸ்ரியாவுக்கு சற்குணம் சவால்? Director sarkunam to nasriya

மீடியா நண்பர்களுடன் படம் பார்த்து நானில்லை டூப் என்று சொல்ல தயாரா? நஸ்ரியாவுக்கு சற்குணம் சவால்?

by admin
TamilSpyToday,

நய்யாண்டி படத்தில் என் சம்பந்தப்பட்ட பாடல் காட்சியில், நான் கவர்ச்சியாக நடிக்க மறுத்தேன். எனக்குப்பதில் ஒரு டூப் நடிகையை பயன்படுத்தி, அந்த பாடல் காட்சியை படுகவர்ச்சியாக டைரக்டர் சற்குணம் படமாக்கியிருக்கிறார் என்று தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நடிகை நஸ்ரியா நசீம் புகார் கொடுத்திருக்கிறார்.

இந்த நிலையில் சற்குணம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நய்யாண்டி திரைப்பட நாயகி நஸ்ரியா பத்திரிகை மற்றம் ஊடங்களுக்கு அளித்து வரும் பேட்டிகளில், நய்யாண்டி படத்தில் வரும் இனிக்க இனிக்க பாடல் காட்சியில் நஸ்ரியாவிற்கு பதில் வேறு பெண்ணை வைத்து முழுப்பாடலையும் எடுத்திருப்பதாகவும், டிரைலரில் ஒரு க்ளோஸ் அப் ஷாட்டில் டூப்பை பயன்படுத்தி இருப்பதாகவும் கூறியுள்ளார்.

நான் ஏற்கனவே களவாணி, வாகை சூடவா ஆகிய நல்ல தரமான படங்களை இயக்கி தேசிய விருது பெற்றுள்ளேன்.

இனிக்க இனிக்க பாடலில் ஒரு இடத்தில் கூட நான் டூப்பை பயன்படுத்தவில்லை. அதில் நடித்திருப்பது நஸ்ரியாவை தவிர வேறு யாரும் இல்லை.

படத்தை எடிட்டிங் பண்ணும்போது ஒரு காட்சியில் அக்காட்சியின் CONTENT பார்வையாளர்களை சென்றடைய ஒரு க்ளோஸ் அப் ஷாட் அவசியப்பட்டது.

நஸ்ரியாவிடம் நான் ஒரு க்ளோஸ் அப் மட்டும் வந்து நடித்துக்கொடுத்துவிட்டு போ என்று சொன்னேன்.

இதற்காக நான் கேரளாவில் இருந்து வர முடியாது. வேறு யாரையாவது வைத்து எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொன் நஸ்ரியாவிற்கு இப்ப என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. ஒரு வேளை தன்னுடைய Marketing publicityகாக கூட செய்திருக்கலாம்.

ஒரு வேளை நஸ்ரியாவிற்கு டிரைலரில் வரும் அந்த ஒரு க்ளோஸ் அப் ஷாட் உறுத்தலாக இருந்தால் அதை நான் நீக்கவும் தயார். ஆனால் இனிக்க இனிக்க பாடல் காட்சியில் நான் நடிக்கவில்லை என்று சொன்ன நஸ்ரியா மீடியா நண்பர்களோடு அமர்ந்து படம் பார்த்து நானில்லை டூப் என்று சொல்ல தயாரா?

இந்த படத்திற்கு U CERTIFICATE கிடைத்திருக்கிறது என்பதை இந்த நேரத்தில் தெரியப்படுத்த விரும்புகிறேன். இது குடும்பத்துடன் அமர்ந்து பார்க்க கூடிய FAMILY ENTERTAINING FILM

இவ்வாறு சற்குணம் கூறியுள்ளார்.

Show commentsOpen link

மருமகன் இப்படிப் பண்றாரே, ரஜினி கவலை? Danush and rajini

மருமகன் இப்படிப் பண்றாரே, ரஜினி கவலை?

by admin
TamilSpyYesterday,

இன்று மளமளவென சொந்தப்படம் எடுக்க கிளம்பி விடுகிறார்கள் ஹீரோக்கள். இளங்கன்று பயமறியாது என்பதைப் போல களத்தில் குதிக்கும் இவர்களுக்கு இது எவ்வளவு பெரிய ஆபத்து என்பது போகப் போகத்தான் புரியும்.

சினிமாவில் வீடு வாசலை இழந்து நிற்கும் பலரும் தங்களுக்குள் புலம்பி வரும் அட்வைஸ்தான் இது. சமீபத்தில் விஷால் மதகஜராஜாவை ரிலீஸ் செய்யப் போவதாக களமிரங்கி, அந்த மன உளைச்சலில் மருத்துவமனையில் சேர்க்கிற அளவுக்கு ஆளானார்.

விஜய் சேதுபதி சங்கு தேவன் என்ற படத்தை தயாரிக்க ஆரம்பித்து, சில நாட்களிலேயே ஆளை விடுங்கப்பா என்று ஓடிப் போனார். அப்புறம் எப்படியோ? இவரை சமாதானப்படுத்தி மீண்டும் தயாரிப்பு வேலையை தொடர வைத்திருக்கிறார்கள். இவர்களில் தனுஷ் எப்படி? எதிர்நீச்சல் என்கிற இவரது முதல் தயாரிப்பே தாறுமாறான ஹிட். இதற்கப்புறம் இன்னும் சந்தோஷமாக இந்த பணியை செய்ய இறங்கிவிட்டார் இவர். ஆனால், சினிமாவில் கரை கண்ட இவரது மாமனாரான சூப்பர் ஸ்டார் ரஜினிக்குதான் தனுஷின் புலிவேக பாய்ச்சல் கவலையளிக்கிறதாம். அவரை அழைத்து சற்று நிதானமாக நடைபோடும்படி கூறியிருப்பதாகத் தகவல் பரவிக்கிடக்கிறது.

Show commentsOpen link

பள்ளியில் வாய் பேசமுடியாத இளம்பெண் கற்பழிப்பு: ஆசிரியர் கைது school girl rape news

பள்ளியில் வாய் பேசமுடியாத இளம்பெண் கற்பழிப்பு: ஆசிரியர் கைது

by veni
Tamil news, Tamil culture, செய்திகள் ...Today,

மேட்டுப்பாளையத்தை அடுத்த காரமடை அருகே உள்ளது குட்டையூர். இங்கு நேயம் ஊனமுற்றோர் பள்ளி உள்ளது. இங்கு கை, கல் மற்றும் வாய் பேசிமுடியாத, மூளை வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகள் படித்து வருகிறார்கள். மேலும் இது காப்பகமாகவும் செயல்பட்டு வருகிறது.

இங்கு பெண்கள் உள்பட 50–க்கும் மேற்பட்டோர் உள்ளனர். கடந்த 6 மாதத்துக்கு முன் வணங்காமுடி (வயது57) என்ற தொழிற்கல்வி ஆசிரியர் இந்த பள்ளிக்கு நியமிக்கப்பட்டார். கடந்த 1 வாரத்துக்கு முன் தொழில்கல்வி ஆசிரியர் அங்கு தங்கியிருந்த பார்வதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 20 வயது பெண்ணை கற்பழித்தார்.

இந்த சம்பவத்தை நிர்வாகம் மறைத்து விட்டதாக தெரிகிறது. கோவையில் இருந்து சேவா சங்கம் மூலம் மளிகை பொருட்கள் இந்த பள்ளிக்கு வழங்குவது வழக்கம். இதுதான் தக்க தருணம் என்று நினைத்த பார்வதி மளிகை பொருட்கள் கொண்டு வந்தவர்களிடம் சைகையாலும் அங்க அசைவுகளாலும் தனக்கு நடந்த கொடுமைகளை கண்ணீருடன் தெரிவித்தார்.

அதிர்ச்சியடைந்த சேவா சங்கத்தினர் இது குறித்து கோவை மக்கள் நல சேவா சங்கத்தலைவர் குருமூர்த்தியிடம் கூறினார். அவர் காரமடை போலீசில் புகார் செய்தார்.

வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் தொழிற்கல்வி ஆசிரியர் வணங்காமுடியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post பள்ளியில் வாய் பேசமுடியாத இளம்பெண் கற்பழிப்பு: ஆசிரியர் கைது appeared first on ekuruvi is a tamil news Portal offering online tamil news.

Show commentsOpen link

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா – விமர்சனம்! Itharku thane aasaipattai balakumara movie review

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா – விமர்சனம்!

by admin
TamilSpyYesterday,

விஜய்சேதுபதி நடிச்சிருக்காப்ல… அப்ப படம் நல்லாத்தான் இருக்கும் என்று டிக்கெட் வாங்கியவர்களின் நம்பிக்கையில் மண்ணை அள்ளிப்போடுகிறார் படத்தின் இயக்குனர். ட்ரெய்லரே பட்டையக்கிளப்புதுன்னா… படம் சும்மா அதிரப்போகுதுன்னு நினைத்தவர்கள் நினைப்பில் ஒரு பெரிய பாராங்கல்லே விழுகிறது!

ஓப்பன் பண்ணா ஒரு ஒயின் ஷாப். அந்த ஒயின் ஷாப்பில் ஒரு பஞ்சாயத்து (குமாரின் அறிமுகம் – விஜய் சேதுபதி). அதே ஒயின் ஷாப்பில் ஒரு கொலை நடக்கிறது. கொலை செய்தவர்கள் அடுத்த ஒயின் ஷாப்பில் குடித்துகொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் நண்பர்களோடு குடித்துக்கொண்டிருப்பவர் பாலா. குமுதாவை ரூட் விடும் குமாரை அதே ஒயின் ஷாப்பில் ரவுண்டு கட்டி அடிக்கிறார்கள் அண்ணாச்சி ஆட்கள். அடிவாங்கிய குமாரும் (சுமார் மூஞ்சி குமாரு) அவன் நண்பன் குமாரும் (ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு) விடிய விடிய ராத்திரி முழுக்க சரக்கிற்காக ஒயின்ஷாப் ஒயின்ஷாப்பாக அலைகிறார்கள்.

நண்பர்களோடு குடித்துவிட்டு செல்லும் பாலா குடிபோதையில் எதிரில் வந்த வண்டியில் மோதிவிட, உயிருக்கு போராடுகிறார் ஒரு பெண்மணி. அந்த பெண்மணியின் கணவரும் அதே நேரத்தில் ஒரு ஒயின் ஷாப்பில் குடித்துக்கொண்டிருக்கிறார்.

அந்தப் பெண்மணிக்கு தேவைப்படும் ரேர் பிளட் குரூப் நம்ம சுமார் மூச்சி குமாரிடம் தான் இருக்கிறது. பாலாவும் அவர் நண்பர்களும் குமாரை வலைவீசி தேடுகிறார்கள்… குடியால் பல பிரச்சனைகள் வரும் என்பதும் குடிக்காமல் இருப்பதே நல்லது என்பதும் படத்தின் மெசேஜ். (ஒருவேளை இந்த விஷயத்தை இயக்குனர் ஒயின் ஷாப்பில் யோசித்திருப்பாரோ!)

இதற்கிடையில் குமுதாவை குமார் காதலிப்பதும், பாலாவை ரேணு காதலிப்பதும் என கலாட்டாவான காட்சிகள் வந்து போகிறது. தனக்கான ஓவர்களில் விடாமல் சிக்ஸ் அடிக்கிறார் சுமார் மூச்சி குமாராக வரும் விஜய் சேதுபதி. காலை ஐந்து மணிக்கே குமுதா வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்து காத்திருப்பதும், குமுதா கோலம் போடும் போது, ஒவ்வொரு புள்ளிக்கும் 'அய்யோ… அய்யயோ… சூப்பரு…' என பாராட்டுவது, ஒவ்வொரு முறை பல்பு வாங்கும் போதும், 'ஆனா,
குமுதா ஹேப்பி அண்ணாச்சி' என்று அண்ணாச்சியிடம் கெத்து காட்டுவது என அரட்டைக் கச்சேரி நடத்துகிறார் விஜய் சேதுபது.

பசுபதி! ஒரு சிங்கத்தைக் கூட்டி வந்து புல்லை தீணியாக போட்டிருக்கிறார்கள். சுகர் இருக்குன்னு சொல்வதும், அவர் கைநீட்டி பேசும்போது கை ஆடுவதும் சமீபத்திய காமெடி படங்களில் வரும் அதே ரக காமெடி!

பாலாவாக வரும் அஷ்வினைவிட அவர் பாஸாக வரும் எம்.எஸ்.பாஸ்கர் கலக்குகிறார். மலையாளி என்ன தமிழன் என்ன… எல்லாம் மனுஷங்க தானே என அவர் சொல்வது டச்சிங்! அஷ்வின் – ஸ்வாதி காதல் காட்சிகள் போர் என்றாலும், அஷ்வின் ஸ்வாதியிடம் பொய் சொல்லி மாட்டிக்கொள்ளும் காட்சிகள் சுவாரஸ்யம்.

என் வீட்டுல நா இருந்தேனே என கானா பாலாவின் பாடலும், ப்ரே பண்ணுவேன் என்ற பாடலும் மெட்ராஸ் வாலிபர்களுக்கு நல்ல விருந்து, தியேட்டர் அதிரும் என்பதில் சந்தேகம் இல்லை. அதிலும் விஜய் சேதுபதியின் டான்ஸ் தூள். கானா பாடலுக்கு ராஜுசுந்தரம் வரும்போது, தேவாவின் கானா பாடல்களுக்கு அவர் டான்ஸ் ஆடி நடித்த ஞாபகம் வருகிறது. ஏனென்றால் உன் பிறந்தநாள்… என்ற பாடல் ஜப்பானில் படமாக்கப்பட்டதாம் – உண்மையாவா?

நீங்க ஸ்க்ரீன்ல வந்தாலே சிரிப்பு வருதுன்னு யாரோ சூரியிடம் பொய் சொல்லிட்டாங்க போல, மனிஷன் பாடாய் படுத்துகிறார். அவரும் என்னென்னவோ ட்ரை பண்றார். ஆனா, நமக்கு சிரிப்பு மட்டும் வரவே மாட்டேங்குது. கொலைசெய்து சைக்கிளில் சுற்றிக்கொண்டிருக்கும் இரண்டு பேரும் செய்கிற டார்ச்சர் சொஞ்ச நஞ்சம் இல்லை. அந்த சூரியகாந்தி பூவோடு வலம் வரும் மதுமிதா கும்முன்னு இருந்தாலும், காமெடியக் காணோம்.

படத்தின் முடிவில் நமக்குக் கிடைகிற ஒரே ஒரு ஆறுதல் பரிசு க்ளைமாக்ஸ் – சிரிக்கவும் வைத்து சிந்திக்கவும் வைத்திருக்கிறார் இயக்குனர் கோகுல் (க்ளைமாக்சில் மட்டும்)

இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா? என்று ரசிகர் நொந்துபோய் சொல்லப்போவது நிச்சயம்…

Show commentsOpen link

லஷ்கர் இ தொய்பாவின் புதிய தளமாக உருவெடுக்கும் இலங்கை! Srilanka vs lakshar terrorist

லஷ்கர் இ தொய்பாவின் புதிய தளமாக உருவெடுக்கும் இலங்கை!

by Marikumar

கொழும்பு: தீவிரவாத இயக்கமான லஷ்கர் இ தொய்பாவின் புதிய தளமாக இலங்கை உருவெடுத்து வருகிறது என்று தி சண்டே கார்டியன் ஏடு தெரிவித்துள்ளது.

இலங்கையில் இருந்து கடல்வழியே இந்தியாவுக்குள் ஊடுருவி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்று தொடர்ந்து எச்சரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தி சண்டே கார்டியன் ஏடு, நேபாளத்தைப் போல இலங்கையை லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கம் தமது புதிய தளமாக மாற்றி வருகிறது என்று தெரிவித்துள்ளது.

அந்த ஏட்டின் கட்டுரையில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷபாஸ் ஷெரீப்பின் ஆதரவுடன் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் புதிய தளமாக இலங்கை வேகமாக மாறிவருகிறது. இத்தகவலை சர்வதேச தீவிரவாத அமைப்புகளின் வளர்ச்சியைக் கண்காணித்து வரும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் கிழக்குக் கரையோரப் பகுதிகளில் லஷ்கர் இ தொய்பா முகாம் அமைத்திருக்கிறது.

பாகிஸ்தான் நாட்டின் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐயுடன் தொடர்புடைய பாகிஸ்தான் இராணுவத்தினர் இந்த இடங்களுக்கு சுற்றுலா என்ற போர்வையில் அடிக்கடி பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.

இலங்கையிலும் ஒரு பாதுகாப்பு பிரதேசத்தை உருவாக்கும் லஷ்கர் இ தொய்வின் முயற்சிகளுக்கு பாகிஸ்தான் இராணுவம் உதவி வருகிறது என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை என்றும் கூறப்படுகிறது.

இந்தியாவிலும், ஐரோப்பாவிலும் தாக்குதலைகளை நடத்துவதற்கான ஒன்று கூடும் இடமாக இலங்கையை லஷ்கர் இ தொய்பா மாற்றியுள்ளது.

அன்று நேபாளம், இன்று இலங்கை

கந்தகார் விமானக் கடத்தலின் போதுதான் நேபாளத்தை தீவிரவாதிகள் எப்படி தளமாக பயன்படுத்துகின்றனர் என்பதே இந்தியாவுக்கு தெரியவந்தது. அண்மைக்காலமாக நேபாளத்தில் தீவிரவாதிகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு கொண்டுவருவதால் அவர்கள் இலங்கையை புகலிடமாக்கிக் கொண்டிருக்கின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.


After Nepal, Lanka is LeT's new base


MADHAV NALAPAT Colombo | 5th Oct 2013


Sri Lanka is fast becoming a "safe area" for the Lashkar-e-Taiba, the terror organisation patronised by Shahbaz Sharif, the brother of Pakistan Prime Minister Nawaz Sharif, according to experts tracking the growth of international terror organisations. Speaking on the condition of anonymity, three of them gave details of the way in which the LeT has been "building a base of operations in Sri Lanka, especially in remote inland towns and parts of the east coast". Pakistan army personnel linked to the Inter Services Intelligence (ISI) have been making frequent visits to both locations, "often in the guise of tourism". According to these analysts, "there is no doubt that the Pakistan army is assisting the LeT in its efforts at creating a safe zone" in parts of Sri Lanka. According to them, "at present these cells are not planning operations within the island. Rather, they are using Sri Lankan territory to rendezvous and to plan attacks against targets in India and Europe." Although the Sri Lankan diet contains pork, and alcohol is freely available in a country with liberal and westernised standards of dress, "there have recently been a flow of visitors who are clearly Wahhabi, both male and female". The suspicion is that such visitors are coming "not to holiday but to meet with others so as to plan attacks in other countries".

The LeT funds much of its operations in India through counterfeit currency and by cash given by terror gangs active in cities such as Mumbai and Lucknow. Hence it comes as no surprise that Sri Lanka has joined Nepal to become a location from where efforts are being made to smuggle counterfeit currency into India. A senior official at the Indian mission confirmed that "deliveries of counterfeit currency from places in Sri Lanka have been intercepted". According to those tracking terror groups, especially the LeT, that organisation is seeking to "create a local support base on the lines of existing logistics hubs in India" and that "about two dozen Sri Lankan citizens seem to have been recruited by the LeT from countries within the GCC". There is a large Sri Lankan diaspora in the Gulf Cooperation Council (GCC) and Arabic has become ubiquitous along the east coast, from Sittanikudi to Komari. Wahhabi preachers have proliferated, especially since the 2008 26/11 terror attack on Mumbai led to an intensification of intelligence and counter-terrorism activities in Nepal, the primary zone of LeT activities in the periphery of India. "There is a steady radicalising of elements of the local population, and the worry is that Wahhabi-Buddhist riots may erupt in Sri Lanka, as they have in Myanmar", a senior local official admitted, who added that the terror attack by Rohingya groups at Bodh Gaya "profoundly affected Sri Lanka", a nation where Theravada Buddhism is the dominant faith.

Both Indian as well as Sri Lankan counter-terror operatives "are still focused on the last war against the LTTE and against remnants of that organisation, and are yet to register the new front that is opening up", which is Wahhabi terror in the form of the Lashkar-e-Taiba and its offshoots, a senior official pointed out. He, however, said that Lankan Defence Secretary Gotebaya Rajapaksa "is aware of the developing threat and has ordered countermeasures". Another official said that "Sri Lanka is watching the efforts of Wahhabis to target not only moderate Muslims and Hindus but also Buddhists". Interestingly, Tamil leaders active in Sri Lankan politics have also flagged this problem, worried that "there may be attacks on temples and churches by fanatic elements if the ongoing radicalisation remains unchecked". However, as yet the LeT and its local logistics hubs are concentrating on future operations in India and Europe. "The LeT has established links with some of the armed groups in Syria, and is helping them in training and in sabotage activities", an analyst claimed, adding that "the Libyan and Syrian rebellions have led to terror groups getting access to a flood of sophisticated weapons". He and a colleague were surprised that "the US and the UK appear to be in denial about the way in which weapons given via allies of the two countries to groups fighting the regime in Damascus end up in the inventories of terror groups including the LeT.

It took the Kandahar hijack of an Indian Airlines aircraft 13 years ago to alert Indian authorities to the menace posed by extremist groups using Nepal as a base. Hopefully, Government of India will awaken to this latest extremist base in the Indian Ocean before an attack planned within LeT safe-houses in Sri Lanka occurs.

source: sunday guardian
Share |

Show commentsOpen link

Monday, October 7, 2013

சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம்: வாலிபர் இளம்பெண் தீக்குளித்து சாவு chennai man young girl fire bath death

சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம்: வாலிபர் இளம்பெண் தீக்குளித்து சாவு chennai man young girl fire bath death

Tamil NewsYesterday,

சென்னை, அக். 7-

சென்னை அண்ணா நகரில் இன்று பட்டப்பகலில் ஒரு வாலிபர், நடுத்தெருவில் வாலிபர் ஒருவரும், அவருடன் வந்த இளம்பெண் ஒருவரும் தீக்குளித்து இறந்தனர்.

அமைந்தகரையைச் சேர்ந்த டால்டா குமார், இன்று சரஸ்வதி என்ற பெண்ணுடன் பைக்கில் வந்துகொண்டிருந்தார். அண்ணாநகரில் மக்கள் நடமாட்டம் உள்ள தெருவில் வண்டியை நிறுத்தினர். கண்ணிமைக்கும் நேரத்தில் டால்டா குமார் திடீரென அந்த பெண் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். பின்னர் தன் உடலிலும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

இருவரும் தீப்பிடித்து எரிவதைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுபற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் இருவரும் தீயில் கருகி இறந்தனர். அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.

நடுத்தெருவில் தற்கொலை செய்துகொண்ட அவர்கள் காதல் ஜோடியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எதற்காக தற்கொலை செய்துகொண்டார்கள்? என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
...
Show commentsOpen link

கூடங்குளம் விவகாரம் தொடர்பாக முதல்வரை சந்திக்கும் முடிவு ஒத்திவைப்பு: உதயகுமார் பேட்டி kudankulam issue decided to meet CM adjourned

கூடங்குளம் விவகாரம் தொடர்பாக முதல்வரை சந்திக்கும் முடிவு ஒத்திவைப்பு: உதயகுமார் பேட்டி kudankulam issue decided to meet CM adjourned

Tamil NewsYesterday,

ராதாபுரம், அக்.7–

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:–

சில சமூக விரோத சக்திகள் தொடர்ந்து இரவு நேரங்களிலே இடிந்தகரை ஊருக்குள் உள்ளேயும், வெளியேயும் நாட்டு வெடி குண்டுகளை வீசி வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் அணுஉலை போராட்டக்குழு தமிழக முதல்வரை சந்தித்து பயங்கரமான சதி திட்டங்கள் பற்றியும், மக்களை அச்சுறுத்துவது, மக்களை பிளவுபடுத்துவது, சாதி–மத நச்சு விதைகளை பரப்புவது போன்ற செயல்பாடுகள் பற்றி முறையிடுவது சம்பந்தமாகவும், கூடங்குளம் அணுஉலை குறித்தும், கனிம மண் கொள்ளை குறித்தும் முதலமைச்சரிடம் முறையீடு செய்வதாக திட்டமிட்டிருந்தோம்.

ஆனால் முதலமைச்சரை சந்திப்பதற்கான நேரம் இன்னும் கனியாத காரணத்தால் சமுதாய தலைவர்கள், ஊர் மக்கள் போராட்டக்குழுவிடம் முதல்வரை சந்திக்க சென்னை செல்கின்ற திட்டத்தை மற்றொரு நாளுக்கு வைத்துக்கொள்ளலாம் என்று கூறினர். இதனால் மக்களுடைய வேண்டுகோளை ஏற்று சென்னை செல்லக்கூடிய பயணத்திட்டம் மற்றொரு நாளைக்கு ஒத்தி வைத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

...
Show commentsOpen link

சிறையில் உள்ள காதலனுக்கு புறாமூலம் செல்போன் அனுப்பிய காதலி ! Dove cell phone love story

சிறையில் உள்ள காதலனுக்கு புறாமூலம் செல்போன் அனுப்பிய காதலி !

by கதிர்
சிரிப்பு Archives |

இளம்பெண் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது காதலருக்கு புறா மூலம் செல்போனை அனுப்ப முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது:

பிரேசிலை சேர்ந்த பெண் கிறிஸ்டெலி மாம்சா (வயது 21). இவருடைய காதலன் வாம்பினேர்(வயது 19) போதைப்பொருள் வழக்கில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இதனால் காதலனை இழந்து தவித்த கிறிஸ்டெலி, புறாவின் மூலும் செல்போனை கட்டி சிறை வளாகத்திற்குள் அனுப்பினார்.

ஆனால் புறாவினால் சிறை மதில் சுவரை தாண்ட முடியாததால், சோர்வடைந்த அது ரோந்துப்படை அதிகாரியின் முன் போய் விழுந்து விட்டது. புறாவையும், செல்போனையும் கைப்பற்றிய அதிகாரி அதை ஏவியவர்கள் யார்" என்பதை கண்டுபிடிக்க வெளியே ஓடி வந்தார். அங்கு கிறிஸ்டெலி ஒரு ஆணுடன் மற்றொரு புறாவையும் கையில் வைத்தபடி நின்றார்.

அந்த புறாவிலும் ஒரு பாட்டிலை கட்டி அதனுள் செல்போன் பேட்டரி, ஜிப் மற்றும் ரொக்கப்பணம் 120 பவுண்ட் வைத்து அதையும் சிறைக்குள் ஏவ தயாராக நிற்பது தெரியவந்தது. இதனை அடுத்து இளம்பெண்ணையும், அவளுடன் நின்ற சில்வா(35) என்பவரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.

இரண்டு பேர் மீதும் சிறைக் கைதிக்கு சட்டத்தை மீறி பொருட்களை அனுப்ப முயற்சி, விலங்குக்கு கொடுமை செய்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

The post சிறையில் உள்ள காதலனுக்கு புறாமூலம் செல்போன் அனுப்பிய காதலி ! appeared first on Tamilsway.

Show commentsOpen link

இறுதி கட்டத்தில் பிரம்மன்! – சசிகுமார் actor sasikumar film in tamil

இறுதி கட்டத்தில் பிரம்மன்! – சசிகுமார்

by admin
TamilSpyToday,

குட்டிப்புலிக்கு பிறகு சசிகுமார் நடித்து வரும் படம் பிரம்மன். சசிக்கு ஜோடியாக லாவண்யா என்ற நியூபேஸ் நடிக்கிறார். முதன் முறையாக சந்தானம் சசிகுமார் இணையும் படம்.

புதுமுக இயக்குனர் சாக்ரடீஸ் டைரக்ட் செய்கிறார். தெலுங்கு இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் மியூசிக் பண்ணுகிறார்.

மலையாள ஒளிப்பதிவாளர் ஜோமோன் டி.ஜான் ஒளிப்பதிவு செய்கிறார். நா.முத்துகுமார், யுகபாரதி, தாமரை பாடல்களை எழுதுகிறார்.

இப்படி ஒரு பக்கா கமர்ஷியல் படத்துக்கான அத்தனை விஷயங்களோடும் படம் ரெடியாகுது. சசிகுமார் நடிக்கும் முதல் சிட்டி படம். ஜீன்ஸ் பேண்ட், டி.சர்ட் என்று அடுத்த கட்டத்துக்கு ரெடியாகிக் கொண்டிருக்கிறார்.

சசிகுமாருக்கு இணையான கேரக்டர் சந்தானத்திற்கு. "இந்த தாடிய வச்சிக்கிட்டு எம்புட்டு சேட்டை பண்ற", "நானெல்லாம் கிளைமாக்சுல உன்னை கத்தியால முதுலுல குத்தமாட்டேன் பயப்படாத" என்பது மாதிரியான சந்தானத்தின் பன்ஞ் நக்கல்கள் இருக்கிறதாம்.

இதன் முதல் கட்ட படப்பிடிப்புகள் பொள்ளாச்சி பகுதியில் நடந்தது.

இப்போது சென்னையில் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் நடந்து வருகிறது.

தீபாவளிக்கு பிறகு டிசம்பர் மாதத்திலோ அல்லது பொங்கல் பண்டிகையிலோ படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள்.

இந்தப் படத்திற்கு பிறகு சசிகுமார் மலையாள படம் ஒன்றிலும், தமிழில் பாலா படத்திலும் நடிக்க இருக்கிறார்.

Show commentsOpen link

Sunday, October 6, 2013

கமலின் பேய் படத்தை எடுப்பது யார்? – கமல் பதில்! Kamal new movie direction

கமலின் பேய் படத்தை எடுப்பது யார்? – கமல் பதில்!

by abtamil
Tamil newsToday,

ஃபிக்கி அமைப்பின் தலைவராக பொறுப்பு வகிக்கும் கமல்ஹாசன் அது தொடர்பான விழா பற்றிய அறிவிப்பிற்காக பெங்களூர் சென்றிருந்தார். அவரிடம் பல்வேறு கேள்விகளை மீடியாக்கள் கேட்க, எல்லாவற்றுக்கும் ஆணியடித்தாற் போல பதில் சொல்லியிருக்கிறார் அவர். அதில் முக்கியமான சில கேள்விகளும் அதற்கு அவர் சொன்ன பதில்களும் 'ரொம்ம்ம்ம்ம்ப' யோசிக்க வைக்கிற ரகம்.

'விஸ்வரூபம்' படத்திற்கு சிக்கல் வந்த போது நாட்டை விட்டு வெளியேறுவேன் என்று நான் கோபத்தில் கூறிய வார்த்தைகளை திரும்ப பெற்றுக் கொள்ள மாட்டேன். அது ஒரு பிள்ளை தன் தாய் மீது வைத்திருக்கும் அதீத அன்பின் வெளிப்பாடு. எனவே அந்த வார்த்தைகளை வேறு அர்த்தங்களில் புரிந்து கொள்வது அபத்தம். ஆனால் சிலர் வேண்டுமென்றே சர்ச்சையை கிளப்பி படத்தை வெளியிட்டு வருகிறார்கள். நான் ஒருபோதும் சந்தைக்கு மத்தியில் உட்கார்ந்து கொண்டு ஒப்பாரி வைப்பதில்லை. 'விஸ்வரூபம்' படத்திற்கு ஏற்பட்ட சிக்கல் போல 'தலைவா' படத்திற்கும் ஏற்பட்டது. அது பற்றிய கேள்விகள் எல்லாம் துரத்துகிறது. அவற்றிற்கு நான் ஏன் கருத்து சொல்ல வேண்டும்?

அரசியல் என்பது சிறந்த சமூகத்தை கட்டமைக்கும் உன்னதமான கருவி. என்னுடைய சினிமா வாழ்க்கையில் இதுவரை பேய் படங்கள் மட்டும்தான் எடுத்ததில்லை. மற்ற எல்லா வகையான படங்களும் எடுத்திருக்கிறேன். இனிமேலும் பேய் படம் எடுக்க மாட்டேன். அதைதானே அரசியலில் சிலர் செய்து கொண்டிருக்கிறார்கள்?

Show commentsOpen link

My Blog List

Popular Posts

Popular Posts