தினசரி செய்திகள்

Monday, November 4, 2013

சென்னையிலும் ரெட் லைட் ஏரியா வேண்டும்! பாலியல் தொழிலாளர்கள் கோரிக்கை! Need red light area in chennai

Need red light area in chennai

சென்னையிலும் ரெட் லைட் ஏரியா வேண்டும்! பாலியல் தொழிலாளர்கள் கோரிக்கை!

மும்பையில் இருப்பது போலவே சென்னையிலும் விபச்சாரத் தொழிலாளர்களுக்காக ஒரு பகுதியை ஒதுக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு செக்ஸ் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக முதல்வருக்கு அவர்கள் கடிதமும் எழுதியுள்ளனர்.

போலீஸ் தொல்லை அதிகரிப்பதாலும், பாதுகாப்பற்ற செக்ஸ் உறவுகளைத் தடுக்க சிவப்பு விளக்குப் பகுதி உதவும் என்பதாலும், தங்களுக்கு எதிரான வன்முறைகளிலிருந்து தப்புவதற்கு வசதியாகவும், மும்பையைப் போல சென்னையிலும் விபச்சாரத்திற்காக பிரத்யேகமாக ஒரு பகுதியை ஒதுக்க வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.

இதுகுறித்து இந்திரா மகளிர் கூட்டுறவு அமைப்பு என்ற பெயரிலான செக்ஸ் தொழிலாளர் சங்கத்தின் தலைவரான கலைவாணி கூறுகையில், சென்னையில் மட்டும் 3000 செக்ஸ் தொழிலாளர்கள் உள்ளனர்.

இந்தியாவின் பெருநகரங்களில் சென்னை, பெங்களூரில் மட்டும்தான் தனியாக சிவப்பு விளக்குப் பகுதி இல்லை.

இதன் காரணமாக சென்னையில் செக்ஸ் தொழிலில் ஈடுபடும் பெண்கள் போலீஸ் தொல்லை, வன்முறைக் கூட்டங்களிடம் சிக்கிக் கொள்வது, மோசடிக்குள்ளாவது என அதிக பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

இந்தியாவில் விபச்சாரம் சட்டத்துக்குட்பட்டதுதான். இருப்பினும் பொது இடங்களில் நின்று கொண்டு ஆண்களை அழைப்பது, விபச்சார விடுதி நடத்துவது, புரோக்கர்களை வைத்துக் கொண்டு ஆட்களைப் பிடிப்பது ஆகியவை குற்றச் செயல்களாக பார்க்கப்படுகின்றன.

விபச்சாரப் பெண்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்காக அமைதியான முறையில் பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட இடங்களில் காத்திருந்தால் கூட கைது செய்கிறார்கள்.

எனவே இதுபோன்ற சிக்கல்களை விளக்கி முதல்வருக்குக் கடிதம் எழுதியுள்ளோம். அதில், மும்பையில் உள்ளது போல சென்னையிலும் விபச்சாரத் தொழிலில் ஈடுபடும் பெண்கள், பாதுகாப்பான முறையில் தங்களது தொழிலை செய்து கொள்ள வசதியாக தனியாக இடம் ஒதுக்கித் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம்.

தனியாக பகுதியை ஒதுக்கினால் பல நன்மைகள் உண்டாகும். பாதுகாப்பான செக்ஸ் உறவுக்கு வழி பிறக்கிறது. எய்ட்ஸ், எச்ஐவி போன்றவற்றை அடியோடு குறைக்கலாம். விஷமிகளின் சேஷ்டைகள் குறையும். உடல் ரீதியான, தொழில் ரீதியான பாதுகாப்பு உறுதி செய்யப்படும். சமூகத்தில் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றார் அவர்.

டெல்லியைப் பொறுத்தவரை கிராண்ட் பேஸன் சாலை, மும்பையில் காமத்திபுரா, கொல்கத்தாவில் சோனாகச்சி ஆகியவை சிவப்பு விளக்குப் பகுதிகளாகும். ஆனால் சென்னையில் அப்படி ஒரு பகுதி இதுவரை இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் கிட்டத்தட்ட 90,000 செக்ஸ் தொழிலாளர்கள் இருப்பதாக ஒரு புள்ளிவிவரக் கணக்கு கூறுகிறது. சென்னையில் மட்டும் 14,000 பேர் இருக்கிறார்களாம். ஆனால் இந்த எண்ணிக்கையை விட பல மடங்கு அதிகமான செக்ஸ் தொழிலாளர்கள் சென்னையில் இருக்கலாம் என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

 

shared via

Sunday, November 3, 2013

இந்தோனேசியாவில் களைப்பை போக்கி களிப்பை ஏற்படுத்தும் மலைக்க வைக்கும் மலைப்பாம்பு மசாஜ் Indonesian SPA treats with Python massage

இந்தோனேசியாவில் களைப்பை போக்கி களிப்பை ஏற்படுத்தும் மலைக்க வைக்கும் மலைப்பாம்பு மசாஜ் Indonesian SPA treats with Python massage

ஜகர்தா, நவ.4-

மனச் சோர்வா? உடல் களைப்பா? உடனடி நிவாரணம் பெற இளம் பெண்களிடம் மசாஜ் செய்து புத்துணர்வு பெறுங்கள் என்ற கவர்ச்சி வாசகங்களுடன் ஒரு கைபேசி எண்ணும் செய்தி தாள்களில் விளம்பரப் படுத்துவதுண்டு.

இத்தகைய விளம்பரங்களை காணும் சில சபலிஸ்ட் களின் லப்-டப் ஏக்கத்துக்கு எகிறி எகத்தாளம் போட தொடங்கிவிடும்.

மைதா மாவு நிறத்தில் தங்கச் சிலை போன்ற உடல்வாகு கொண்ட இளம் பெண்கள், வாழைத் தண்டு கால்களால் தங்களது முதுகில் ஊர்ந்து செல்வதை போலவும், வெண்டை விரல்களால் பிடரி பகுதியை நீவி விடுவதை போலவும் உட்கார்ந்த இடத்தில் இருந்தே கற்பனை செய்ய தொடங்கும் அவர்கள் உமிழ்நீர் சொட்டுவதை கூட மறந்துபோய் பகல் கனவில் மிதக்க தொங்கி விடுவார்கள்.

ஆனால், இந்தோனேசியா நாட்டின் தலைநகர் ஜகர்தாவில் ஒரு புதிய மசாஜ் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பான விளம்பரங்களை பார்ப்பவர்கள் செய்தி தாளை தூக்கி எறிந்து விட்டு தலை தெறிக்க ஓட வேண்டிய நிலை ஏற்படலாம். வாடிக்கையாளர்களின் முதுகில் மலைப்பாம்புகளை ஊர்ந்து செல்ல வைத்து சிலிர்ப்பூட்டும் புதிய வகை மசாஜை இந்த ஸ்பா அறிமுகப்படுத்தியுள்ளது.

பாம்புகள் தங்களின் உடலின் மீது நெளிவதால் உண்டாகும் பயத்தின் விளைவாக மசாஜ் செய்து கொள்பவரின் உடலில் அட்ரனலைன் எனப்படும் ஒருவித ஹார்மோன் சுரக்கிறது.

மேலும், பாம்பின் கதகதப்பான தோல் மனித சருமத்தில் படுவதன் மூலமாக ஏற்படும் புதிய உணர்வின் பயனாக நமது ரத்த சுழற்சியில் புதிய வேகம் பிறக்கிறது.

மேற்கண்ட பலன்களுக்காக இந்த மலைப்பாம்பு மசாஜ் பிரபலமடைய தொடங்கியுள்ளது. இதற்காக சுமார் 3 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கும் இந்த மசாஜ் பார்லரில் விஷத் தன்மையற்ற மலைப்பாம்புகளே பயன்படுத்தப்படுகின்றன.

வாடிக்கையாளர்களிடம் பாம்புகள் எல்லை மீறாமல் இருக்க தேர்ச்சி பெற்ற உதவியாளர்கள் உடன் இருந்து கண்காணிப்பார்கள்.

சாதாராண மசாஜ் பார்லரில் செய்வது போல் மசாஜ் செய்யும் நபரிடம் வாடிக்கையாளர்கள் சில்மிஷம் செய்ய நினைத்தால்... மலைப்பாம்புக்கு குர்குர்ரே ஆகி மண்டையைப் போட வேண்டியது தான்.

...

shared via

சார்ஜா: பழுது பார்க்கும் போது லிப்ட் மேலே விழுந்து இந்தியர் பரிதாப பலி Indian killed in Sharjah lift accident

சார்ஜா: பழுது பார்க்கும் போது லிப்ட் மேலே விழுந்து இந்தியர் பரிதாப பலி Indian killed in Sharjah lift accident

சார்ஜா, நவ.4-

இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஷைஜோ. சார்ஜாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் லிப்ட் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகலில் மூன்றாவது மாடியில் லிப்ட்டை பழுது பார்த்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக வேகமாக இறங்கி வந்த லிப்ட் அவர் மீது மோதியது.

உடல் நசுங்கிய நிலையில் லிப்ட்டின் அடியில் சிக்கிக்கொண்ட ஷைஜோவை காப்பாற்ற சக ஊழியர்கள் செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. இதனையடுத்து, அவர்கள் போலீஸ் மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த மீட்பு படையினர் ஷைஜோவை வெளியே எடுத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் உயிர் பிரிந்து சில நிமிடங்கள் ஆகிவிட்டதாக தெரிவித்தனர்.

விபத்து நடந்த உடனேயே தகவல் அளிக்காமல் சகபணியாளர்கள் தாமதம் செய்ததால் அவரை காப்பாற்ற முடியாமல் போனது என அல்ஹீரா போலீஸ் நிலைய மேஜர் அல் நக்பி என்பவர் கூறினார்.

...

shared via

திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா இன்று தொடக்கம் today kanda sasti festival start in tiruchendur

திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா இன்று தொடக்கம் today kanda sasti festival start in tiruchendur

திருச்செந்தூர், நவ. 3–

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா இன்று காலை தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலை 6 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலையில் எழுந்தருளினார். அங்கு யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது.

இன்று முதல் 5–ம் திருநாள் வரை மாலை 4.30 மணியளவில் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது. பின்னர் சுவாமி தங்க ரதத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

6–ம் திருநாளான 8–ந்தேதி அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. மதியம் 12 மணி அளவில் யாகசாலையில் தீபாராதனை நடக்கிறது.

பின்னர் வேள்விசாலையில் இருந்து சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் சண்முக விலாச மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். மாலை 4.30 மணி அளவில் கடற்கரையில் சூரசம்ஹாரம் நடக்கிறது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

சூரசம்ஹாரத்திற்கு பின் சந்தோஷ மண்டபத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் அலங்கார தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து சுவாமி, அம்பாள் வீதி உலா நடக்கிறது.

7–ம் திருநாளான 9–ந்தேதி அதிகாலை 3 மணிக்கு நடைதிறப்பு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. 5 மணி அளவில் அம்பாள் சேர்க்கையில் இருந்து தபசு காட்சிக்கு புறப்படுகிறார்.

மாலை 5 மணிக்கு அம்பாளுக்கு சுவாமி காட்சியருளி, தோள்மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை, கோவில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் (பொறுப்பு) ஞானசேகர், அலுவலக கண்காணிப்பாளர் ராமசாமி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

...

shared via

My Blog List

Popular Posts

Popular Posts