தினசரி செய்திகள்

Sunday, January 5, 2014

கர்நாடகாவில் மந்திரிபதவி வேண்டி மூத்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி Unhappy Cong MLAs put pressure for ministerial berths

Img கர்நாடகாவில் மந்திரிபதவி வேண்டி மூத்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி Unhappy Cong MLAs put pressure for ministerial berths

பெங்களூர், ஜன. 6-

கர்நாடகாவில் கடந்த மே மாதம் முதல் முதல் மந்திரி சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செலுத்திவருகிறது. இந்த அரசின் மந்திரி சபை சமீபத்தில் விரிவுபடுத்தப்பட்டது. இதில் கரைபடிந்த எம்.எல்.ஏ.க்களான டி.கே. சிவக்குமார் மற்றும் ரோஷன் பெய்க் ஆகியோரை சித்தராமையா தனது கேபினட் மந்திரிசபையில் சேர்த்துகொண்டார்.

இதையடுத்து ஆளும் காங்கிரஸ் கட்சியின் மூத்த எம்.எல்.ஏ.க்கள் ராணிபென்னூர் கே.பி. கோலிவாட் மற்றும் அப்சல்பூர் மல்லிகையா குட்டேதார் ஆகியோர் தங்களுக்கும் மந்திரி பதவி வேண்டும் என்று முதல் அமைச்சர் சித்தராமையாவிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று பெங்களூரில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் கலந்துகொள்ள வந்துள்ள காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளரும், கர்நாடக காங்கிரஸ் பொறுப்பாளருமான திக்விஜய் சிங்கை அந்த எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து தங்களது வருத்தங்களை பகிர்ந்துகொண்டனர். திக்விஜய் சிங்கும் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் உறுதியளித்துள்ளார். 
...

Tuesday, December 31, 2013

நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்யும் சீனாவின் யூடு ரோவரை படம்பிடித்த நாசா செயற்கைக்கோள் China Yutu Moon rover pictured from orbit by Nasa satellite

China Yutu Moon rover pictured from orbit by Nasa satellite நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்யும் சீனாவின் யூடு ரோவரை படம்பிடித்த நாசா செயற்கைக்கோள் China Yutu Moon rover pictured from orbit by Nasa satellite

வாஷிங்டன், டிச. 31-

சீனா தனது விண்வெளித் திட்டங்களில் ஒரு முக்கிய மைல்கல்லாக ஜேட் ராபிட் என்ற புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய விண்கலத்தை நிலவுக்கு முதல் முறையாக அனுப்பியது. 150 சென்டி மீட்டர் அகலமுடைய சக்கரங்களை கொண்ட இந்த ஜேட் ராபிட் கருவியானது, நிலவில் இறங்கி மேற்பரப்பு மற்றும் மண்ணின் தன்மை பற்றி ஆராய்ந்து வருகிறது.

இந்நிலையில், கடந்த 14-ம் தேதி நிலவின் மேற்பரப்பபில் மழைக்கடல் என்றழைக்கப்படும் மெரெ இம்ப்ரியம் பகுதி அருகே இந்த ரோவர் கருவியும் அதன் துணை கருவியும் ஆராய்ந்துக்கொண்டிருக்கும் காட்சிகளை நிலவை பற்றி ஆராயும் நாசாவின் செயற்கைக்கோள் (எல்.ஆர்.ஓ.) படம்பிடித்து வெளியிட்டுள்ளது.

சுமார் 150 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து எடுக்கப்பட்ட இந்த இரண்டு கலன்களும், நிலவின் இருண்ட மேற்பரப்பில் வெள்ளையாக தெரிவதையும், அதன் நிழல் மிக நீளமாக தெரியும் காட்சிகளையும் நாசாவின் புகைப்படம் காட்டுகிறது. 

இந்த ஜேட் ராபிட் திட்டத்தையடுத்து, ரோபாவை நிலவில் இறக்கி ஆராய சீனா திட்டமிட்டுள்ளது. 
...

Tuesday, December 24, 2013

அமெரிக்காவுக்கான புதிய இந்திய தூதர் ஜெய்சங்கர் வாஷிங்டன் சென்றடைந்தார் New Indian envoy arrives in US amid diplomatic row

Img அமெரிக்காவுக்கான புதிய இந்திய தூதர் ஜெய்சங்கர் வாஷிங்டன் சென்றடைந்தார் New Indian envoy arrives in US amid diplomatic row

வாஷிங்டன், டிச. 24-

தேவயானி கோப்ரகடே கைது விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்குமிடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், அந்நாட்டிற்கான புதிய இந்திய தூதராக அறிவிக்கப்பட்ட ஜெய்சங்கர் இன்று வாஷிங்டன் சென்றடைந்தார்.

விசா மோசடி குற்றச்சாட்டில் கோப்ரகடே கைது செய்யப்பட்ட விவகாரத்தில், இரு நாடுகளுக்கிடையே ஏற்பட்ட விரிசலை முடிவுக்கு கொண்டு வந்து இணக்கமான சூழ்நிலை ஏற்படவேண்டிய நிலையில், அவர் தூதராக பதவியேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுவரை சீனாவுக்கான இந்திய தூதராக பணியாற்றி வந்த அவர் நேற்று அமெரிக்கா சென்றடைந்தார். புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பின் அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்து, தூதராக நியமிக்கப்பட்டதற்கான சான்றுகளை வழங்க அவர் திட்டமிட்டுள்ளார்.

இந்திய-அமெரிக்க அணு ஆயுத ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையில் மிகப்பெரிய பங்காற்றிய அவருக்கு, தற்போது தேவயானி மீது போடப்பட்ட வழக்கால் இரு நாட்டு உறவுகளிலும் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாப்பதே முக்கிய கடமையாக இருக்கும் என கருதப்படுகிறது.

முன்னதாக அவர் கடந்த 1985 ஆம் ஆண்டு முதல் 1988 ஆம் ஆண்டு வரை அமெரிக்காவிலுள்ள இந்திய தூதரகத்தில் முதல் இந்திய செயலாளராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

...

My Blog List

Popular Posts

Popular Posts