தினசரி செய்திகள்

Monday, October 21, 2013

சென்னையில் காற்றுடன் பலத்த மழை: 5 ஆயிரம் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை Chennai heavy rain fishermen do not go to sea

சென்னையில் காற்றுடன் பலத்த மழை: 5 ஆயிரம் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை Chennai heavy rain fishermen do not go to sea

ராயபுரம், அக். 21–

வங்க கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

சென்னையில் நேற்று இரவு தொடங்கிய மழை தொடர்ந்து நீடித்து வருகிறது. கடல் பகுதியில் காற்றும் பலமாக வீசுகின்றன.

இதனால் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குள் இன்று காலை மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. 3 ஆயிரம் பைபர் படகுகள், 2 ஆயிரம் விசை படகுகள் கரை ஓரத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

பெரிய விசை படகுகளில் மட்டும் மீனவர்கள் கடலுக்குள் சென்று உள்ளனர். பலத்த காற்றுடன் மழையும் பெய்து வருவதால் மீனவர்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். அவர்கள் வலைகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவொற்றியூர், எண்ணூர் கடல் பகுதியிலும் வேகமாக காற்று வீசி வருவதால் கட்டுமரம், பைபர் படகில் செல்லும் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை. சுமார் 500–க்கும் மேற்பட்ட படகுகள் கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

...

shared via

No comments:

Post a Comment

My Blog List

Popular Posts

Popular Posts