தினசரி செய்திகள்

Monday, October 21, 2013

ராகுல் காந்தி மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் இன்று வழக்கு தொடுக்கப்படும்: பா.ஜ.க. அறிவிப்பு BJP to file case against Rahul under prevention of atrocities act

ராகுல் காந்தி மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் இன்று வழக்கு தொடுக்கப்படும்: பா.ஜ.க. அறிவிப்பு BJP to file case against Rahul under prevention of atrocities act

போபால், அக்.22-

மத்திய பிரதேச மாநிலம் ஷாடோலில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி பொதுக் கூட்டத்தில் கடந்த 17ம் தேதி ராகுல் காந்தி பேசினார்.

பெருகிவரும் கற்பழிப்பு சம்பவங்கள் தொடர்பாக விளக்கம் அளித்த அவர், மேடையின் எதிரே அமர்ந்திருந்த பழங்குடியின பெண்களை நோக்கி, மத்தியபிரதேசத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நடந்த பா.ஜ.க. ஆட்சியின் போது உங்களில் யாரும் கற்பழிக்கப்பட்டதே கிடையாதா? என்று பகிரங்கமாக கேட்டார்.

பொது இடத்தில் பெண்களை பார்த்து இதைப்போன்ற கேள்வியை கேட்பது விஷமத்தனமானது - ஆட்சேபனைக்குரியது என்பதால் ராகுல் காந்தி மீது இன்று போபால் கோர்ட்டில் 2 வழக்குகள் தொடுக்கப்படும் என பா.ஜ.க. துணை தலைவர் பிரபாத் ஜா கூறியுள்ளார்.

பழங்குடியின பெண்களின் கற்பழிப்பு தொடர்பாக ராகுர் காந்தி வேண்டுமென்றே மரியாதை குறைவாக பேசியுள்ளார். இதற்காக அவர் மீது மானநஷ்ட வழக்கும், வன்கொடுமை(தடுப்பு) சட்டத்தின் கீழ் இன்னொரு வழக்கும் இன்று போபால் கோர்ட்டில் பா.ஜ.க. சார்பில் தொடரப்படும்.

இதேபோல், நர்மதா நதியை மத்திய பிரதேச மாநிலம் கற்பழித்து விட்டதாக சமீபத்தில் மத்திய மந்திரி ஜோதிராதித்யா சிந்தியா கூறியுள்ளார்.

அவரது பேச்சு நர்மதா நதியை தங்களின் தாயாக நினைத்து வழிபடும் மத்திய பிரதேச மாநில மக்களின் உணர்வுகளை புண்படுத்தி விட்டது. அவர் மீதும் பா.ஜ.க. சார்பில் தனி வழக்கு தொடுக்கப்படும் என பிரபாத் ஜா கூறினார்.

...

shared via

No comments:

Post a Comment

My Blog List

Popular Posts

Popular Posts