தினசரி செய்திகள்

Monday, October 7, 2013

சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம்: வாலிபர் இளம்பெண் தீக்குளித்து சாவு chennai man young girl fire bath death

சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம்: வாலிபர் இளம்பெண் தீக்குளித்து சாவு chennai man young girl fire bath death

Tamil NewsYesterday,

சென்னை, அக். 7-

சென்னை அண்ணா நகரில் இன்று பட்டப்பகலில் ஒரு வாலிபர், நடுத்தெருவில் வாலிபர் ஒருவரும், அவருடன் வந்த இளம்பெண் ஒருவரும் தீக்குளித்து இறந்தனர்.

அமைந்தகரையைச் சேர்ந்த டால்டா குமார், இன்று சரஸ்வதி என்ற பெண்ணுடன் பைக்கில் வந்துகொண்டிருந்தார். அண்ணாநகரில் மக்கள் நடமாட்டம் உள்ள தெருவில் வண்டியை நிறுத்தினர். கண்ணிமைக்கும் நேரத்தில் டால்டா குமார் திடீரென அந்த பெண் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். பின்னர் தன் உடலிலும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

இருவரும் தீப்பிடித்து எரிவதைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுபற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் இருவரும் தீயில் கருகி இறந்தனர். அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.

நடுத்தெருவில் தற்கொலை செய்துகொண்ட அவர்கள் காதல் ஜோடியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எதற்காக தற்கொலை செய்துகொண்டார்கள்? என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
...
Show commentsOpen link

No comments:

Post a Comment

My Blog List

Popular Posts

Popular Posts