தினசரி செய்திகள்

Wednesday, October 2, 2013

மொட்டை அடித்து, பிறப்புறுப்பை தைத்து மனைவியை துன்புறுத்திய கணவன் கைது tamil sex news rr

மொட்டை அடித்து, பிறப்புறுப்பை தைத்து மனைவியை துன்புறுத்திய கணவன் கைது

by Marikumar

ஒடிசாவில் சம்பவம்; பாதிக்கப்பட்ட பெண் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

வரதட்சணை போதாமை, கள்ளத் தொடர்பு இருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம்..!

புவ­னேஸ்வர்: வர­தட்­சணை போதாமை, கள்­ளத்­தொ­டர்பு சந்­தே­கம் மற்றும் பழிவாங்கும் எண்ணத்தில் தன் மனை­விக்கு மொட்டை அடித்து, பிறப்­பு­றுப்பை தைத்து கொடு­மைப்­ப­டுத்­திய கொடூர கண­வ­ரொ­ருவர் ஒடி­சாவில் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

இந்த கொடு­மைக்கு உள்­ளான பெண், மருத்­து­வ­ம­னையில் தீவிர சிகிச்சை பெற்று வரு­கிறார்.

பெரும் பர­ப­ரப்­பையும் அதிர்ச்­சி­யையும் ஏற்­ப­டுத்­தி­யுள்ள இச்­சம்­பவம் தொடர்பில் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

ஒடிசா மாநிலம், புவ­னேஸ்­வரை சேர்ந்­தவர் ரஞ்சன் பாண்டா (வயது 32). இவரின் மனை­விக்கு 28 வயதாகிறது. ஏழு வயதில் மகன் ஒருவரும் இருக்­கிறார்.

கடந்த 2005 ஆம் ஆண்டில் ரஞ்சன் பாண்­டா­வுக்கு திரு­மணம் இடம்­பெற்­றது. இதன்­போது, தனக்கு போது­மான வர­தட்­சணை கொடுக்­கா­த­தாலும், வேறு ஒரு­வ­ருடன் கள்ளத் தொடர்பு இருப்­ப­தாக எழுந்த சந்­தே­கத்­தாலும் மனை­வியை அடிக்­கடி கொடு­மைப்­ப­டுத்தி வந்தார். இதனால் பெருந்­த­விப்­பிற்­குள்­ளான அவர் மனைவி, ஒருநாள் மகளிர் பொலிஸ் நிலை­யத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பில் பொலிஸார் விசா­ரித்த போது, 'இனிமேல் கொடு­மைப்­ப­டுத்த மாட்டேன்' என வாக்­கு­றுதி அளித்து, மனை­வியை தன்­னுடன் அழைத்து வந்தார் பாண்டா. ஆனால், அதன்­பின்னர் அவ ரின் கொடுமை அதி­க­ரித்­தது.

கடந்த 24 ஆம் திகதி இரவு மனை­வி க்கு மயக்க மருந்து கொடுத்த பாண்டா, சுய­நி­னைவை இழந்­ததும் அவரின் தலையை மொட்டை அடித்தார்.

அதன்­பின்னர், பழுக்கக் காய்ச்­சிய ஆணி யால் மனை­வியின் கன்­னத்தில் இருந்த மச்­சத்தையும் அகற்றி, உடைந்த மின்­குமிழ் ஒன்­றினால் அவரின் வயிற்றை குத்­தி­ய­தோடு, பிறப்­பு­றுப்­பையும் நூல் மூலம் தைத்தார். இதன்­பின்னர், அப்­ப­டியே இறக்கட்டும் என விட்டு விட்டார்.

இந்தத் தக­வலை எப்­ப­டியோ அறிந்த பாண்­டாவின் குடும்­பத்­தினர், அந்தப் பெண்ணை மீட்டு மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு சென்­றனர். அங்கு சிகிச்­சைக்கு அப்பெண்ணை சேர்த்­த­வுடன் பொலி­ஸு க்கு பயந்து அனைவரும் அங்கிருந்து ஓடி­விட்­டனர்.

இந்­நி­லையில், மருத்­து­வ­மனை நிர்­வா­கத்­தினர், பாதிக்­கப்­பட்ட பெண்ணின் சகோ­த­ர­ருக்கு தகவல் கொடுத்­த­தைத்­தொ­டர்ந்து அவர் பொலிஸில் புகார் கொடு த்தார். இதனையடுத்து, பாண்டா கைது செய்யப்பட்டார்.

இதனிடையே, கொடுமைக்கு ஆளான பெண், மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
Share |

Show commentsOpen link

No comments:

Post a Comment

My Blog List

Popular Posts

Popular Posts