தினசரி செய்திகள்

Tuesday, September 10, 2013

‘ஆன்லைன்’ வர்த்தகத்தில் இருந்து மஞ்சளை நீக்க வேண்டும்: பிரதமரிடம் விவசாயிகள் வலியுறுத்தல் online trade remove manjal Manmohan singh farmers request

'ஆன்லைன்' வர்த்தகத்தில்
இருந்து மஞ்சளை நீக்க வேண்டும்:
பிரதமரிடம் விவசாயிகள்
வலியுறுத்தல் online trade remove manjal
Manmohan singh farmers request

ஈரோடு, செப். 10–
ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர்
கணேசமூர்த்தி தலைமையில் இந்திய
மஞ்சள் விவசாயிகள் சங்க தலைவர்
தெய்வசிகாமணி, தெலுங்கு தேசம்
கட்சி எம்.பி.க்கள் நாகேஸ்வரராவ், ரமேஷ்
ரத்தோர், ஆந்திர மஞ்சள் விவசாயிகள் சங்க
தலைவர் நரசிம்மநாயுடு ஆகியோர்
டெல்லி சென்றனர்.
பின்னர் பிரதமர் அலுவலகத்தில் பிரதமர்
மன்மோகன்சிங், நுகர்வோர் நல மத்திய
மந்திரி தாமஸ்
ஆகியோரை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர்.
அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:–
மஞ்சள்
விலை தொடர்ந்து இறங்குமுகமாக
இருப்பதற்கு ஆன்லைன் வர்த்தகத்தில்
நடைபெறம் சூதாட்டமே காரணம்
ஆகும். எனவே ஆன்லைன் வர்த்தகத்தில்
இருந்து மஞ்சளை நீக்க வேண்டும்.
ஆன்லைன் வர்த்தகத்தில் நடைபெறும்
முறைகேடுகள் பற்றி சி.பி.ஐ.
விசாரணை நடத்த வேண்டும். மஞ்சள்
வளர்ச்சி வாரியம் அமைக்க வேண்டும்.
நடப்பு சந்தையில் மஞ்சள்
விற்பனை விலையைவிட
கமாடிட்டி முன்பேர வர்த்தகத்தில்
விற்கப்படும் மஞ்சளின் விலை 20 முதல்
25 சதவீதம் வரை குறைவாகவே உள்ளது.
இதனை கருத்தில்
கொண்டு விவசாயிகளின்
உரிமைகளை பாதுகாக்க
நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில்
கூறப்பட்டிருந்தது.
பிரதமரை சந்தித்தது தொடர்பாக
கணேமூர்த்தி எம்.பி. நிருபர்களிடம்
கூறும்போது,
"மனுவை பெற்றுக்கொண்ட பிரதமர்
ஆன்லைன் வர்த்தகத்தில்
இருந்து மஞ்சளை நீக்குவது சம்பந்தமாக
ஒரு குழு அமைப்பதாக தெரிவித்தார்.
2 மாத காலத்திற்குள் ஆன்லைன்
வர்த்தகத்தில்
இருந்து மஞ்சளை நீக்காவிட்டால்
ம.தி.மு.க. விவசாயிகளுடன்
இணைந்து போராட்டம் நடத்தும்" என்றார்.

No comments:

Post a Comment

My Blog List

Popular Posts

Popular Posts