தினசரி செய்திகள்

Sunday, August 11, 2013

காங்கிரஸ் இல்லா ஆட்சி அமைய ஜெயலலிதா, சந்திரபாபு நாயுடுக்கு மோடி அழைப்பு Congress non power Jayalalitha Chandrababu nayudu calls Modi

பாரதீய ஜனதா தேர்தல்
பிரச்சாரக்குழு தலைவராக
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குஜராத் முதல்
மந்திரி நரேந்திர மோடி ஆந்திர மாநிலத்
தலைநகர் ஐதராபாத் லால்பகதூர்
மைதானத்தில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்
கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில் பேசினார்.
அப்போது நாட்டின்
பொருளாதாரத்தை சுட்டிக்காட்டி அவர்
பேசியதாவது:-
நான் ஆந்திர பிரதேச காங்கிரஸ்
தலைவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள
விரும்புகிறேன். குஜராத்தின்
வளர்ச்சியை உங்களால் ஏற்றுக்கொள்ள
முடியவில்லையானால், எங்களை கருத்தில்
கொள்ள வேண்டாம். பக்கத்து மாநிலமான தமிழ்
நாட்டின் முதல் அமைச்சர் ஜெயலலிதா,
அம்மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக
எடுத்துவரும் திறமையான
நடவடிக்கைகளை கவனியுங்கள் என
கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
வாஜ்பாய் அரசில் முன்பு அங்கம் வகித்த
அ.இ.அ.தி.மு.க. கட்சியின்
பொதுச்செயலாளரும் தமிழக முதல்
அமைச்சருமான ஜெ.ஜெயலலிதா,
மோடி ஒரு சிறந்த நண்பர்
என்று கூறியிருக்கிறார். தற்போதைய பாரதீய
ஜனதாவின் நடவடிக்கைகள் வரும் பாராளுமன்ற
தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. கட்சியுடன்
கூட்டணி வைக்கும் என்றே தெரிகிறது.
காங்கிரஸ் அரசை வெளியேற்றிய மறைந்த
முன்னாள் முதல்வர்
என்.டி.ராமாராவை நினைவுகூர்ந்த மோடி,
அவரது கனவு நிறைவேற தேவையான
நடவடிக்கைகளை எடுக்க தெலுங்கு தேச
கட்சியின் தலைவரும் என்.டி.ராமாராவின்
மருமகனுமான
சந்திரபாபு நாயுடுவை கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், நரேந்திர
மோடி ஜெயலலிதா மற்றும்
சந்திரபாபு நாயுடு குறித்து பேசியுள்ளது வரும்
தேர்தலுக்கு மறைமுகமாக
அழைப்பு விடுத்துள்ளதையே காட்டுகிறது.

No comments:

Post a Comment

My Blog List

Popular Posts

Popular Posts