தினசரி செய்திகள்

Sunday, August 11, 2013

கிரிக்கெட் என்னை ஒரு சிறந்த மனிதனாக உருவாக்கியிருக்கிறது: டிராவிட் Dravid Cricket made me a better man

கோவாவில் உள்ள பிர்லா (பிலானி)
கல்வி நிறுவனத்தில் நடந்த
பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில்
கலந்து கொண்டு முன்னாள் கிரிக்கெட் கேப்டன்
ராகுல் டிராவிட் பேசினார்.
அப்போது மாணவர்களிடையே ராகுல் டிராவிட்
பேசியதாவது:-
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற
ஒன்றரை வருடங்களுக்கு பிறகு, கிரிக்கெட்
என்னை ஒரு சிறந்த மனிதனாக
உருவாக்கியிருக்கிறது என்பதை நான்
உணர்ந்து இருக்கிறேன். நான் கிரிக்கெட்
விளையாடியபோது பல
வெற்றிகளையும், தோல்விகளையும்
சந்தித்தேன். இது வாழ்க்கையை பற்றி நிறைய
கற்றுக்கொடுத்தது.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு பிறகு,
இனி கிரிக்கெட் அடுத்த தலைமுறைக்கான
விளையாட்டு என்பதை உணர்ந்தேன்.
இப்பொழுது, நான் எனது தந்தையின்
ஸ்டூடியோவில்
அமர்ந்து கொண்டு ஒரு குழந்தையைப்போல்
கிரிக்கெட்
அறிவிப்புகளை கவனித்து வருகிறேன்.
வாழ்க்கையில் வெற்றிபெற பல
லட்சக்கணக்கான வழிகள் இருக்கின்றன.
உலகத்தில் முதல் நபராக நீங்கள்,
இருக்கவேண்டியதில்லை. ஆனால், உங்கள்
குறிக்கோளை அடைய, நீங்கள் கடுமையாக
உழைக்க வேண்டும்.
இவ்வாறு ராகுல் டிராவிட் பேசினார்.
ராகுல் டிராவிட்டின் பேச்சை கேட்ட
மாணவர்கள், அப்போது உற்சாகமாக
கைதட்டி வரவேற்பு தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

My Blog List

Popular Posts

Popular Posts