தினசரி செய்திகள்

Monday, August 12, 2013

கோமாவில் இருந்த ஹாலந்து இளவரசர் ஜோகன் பிரிசோ மரணம் Dutch Prince Friso dies after year in coma

கோமாவில் இருந்த ஹாலந்து இளவரசர்
ஜோகன் பிரிசோ மரணம் Dutch Prince Friso
dies after year in coma

ஹாலந்து இளவரசர் ஜோகன் பிரிசோ(44)
கடந்த 2012ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்
ஆஸ்திரியா சென்றிருந்தார். அங்கு லெச் என்ற
இடத்தில் அவர் பனிச்சறுக்கு விளையாட்டில்
ஈடுபட்டிருந்தபோது திடீரெனத் தோன்றிய
பனிச்சரிவினுள் புதைந்துள்ளார்.
அதிலிருந்து அவரை மீட்பதற்கு 15
நிமிடங்களுக்கு மேல் ஆகியுள்ளது.
அதன்பின்னர், அவர் லண்டனில் உள்ள ராயல்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
சென்ற மாதம்தான் இளவரசரை ஹாலந்திற்குத்
திரும்ப அழைத்து வந்துள்ளனர். ஆயினும்,
அவர் உடல் நலக் குறைவோடுதான்
இருந்துள்ளார். ஓராண்டுக்கும் மேலாக
சுயநினைவிழந்து கோமாவில் இருந்த அவர்,
தி ஹேக்கில் உள்ள அரண்மனையில்
இன்று மரணம் அடைந்தார்.
பனிச்சறுக்கு விளையாட்டின் போது ஏற்பட்ட
விபத்தில் அவரது மூளைக்குச் செல்லும்
ஆக்சிஜன் தடைப்பட்டது. இதனால் ஏற்பட்ட
உடல்நலக்குறைவால் இளவரசர் ஜோகன்
பிரிசோ இறந்துவிட்டார் என்று அரண்மனைத்
தகவல்கள் தெரிவிக்கின்றன.
விடுமுறைக்காக கிரீஸ் நாட்டிற்கு சென்றிருந்த
ஹாலந்து அரசர் வில்லியம் அலெக்சாண்டரும்
அரசி மக்சிமாவும், இளவரசர் இறந்த
செய்தி அறிந்து உடனடியாக
ஹாலந்திற்கு திரும்புகின்றனர்.

No comments:

Post a Comment

My Blog List

Popular Posts

Popular Posts