தினசரி செய்திகள்

Tuesday, October 22, 2013

இணையதளங்களின் மூலமாக விற்கப்படும் தாய்ப்பாலில் நோய் கிருமிகள் கண்டுபிடிப்பு Bacteria found in breast milk sold through Internet

இணையதளங்களின் மூலமாக விற்கப்படும் தாய்ப்பாலில் நோய் கிருமிகள் கண்டுபிடிப்பு Bacteria found in breast milk sold through Internet

நியூயார்க், அக்.23-

அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் தங்களின் முன்னழகை பாதுகாக்க விரும்பும் பணக்கார பெண்கள் பல ஆண்டுகளுக்கு முன்னர் அடிமைப் பெண்களை வேலைக்கு அமர்த்தி தங்களது குழந்தைகளுக்கு தாய்ப்பாலை ஊட்டி வளர்க்க வைத்தனர்.

நாகரிக மாற்றத்திற்கேற்ப அனைத்தும் மாறிப்போன தற்காலத்தில் தாய்ப்பால் வங்கிகளும், மார்பகங்களில் இருந்து பாலை கறந்து பாட்டில்களில் அடைத்து பதப்படுத்தி விற்பனை செய்யும் ஆன்லைன் தாய்ப்பால் வியாபாரமும் பெருகிவிட்டன.

இவ்வகையில், இணைய தளங்களின் மூலம் வாங்கப்பட்ட தாய்ப்பால் புகட்டப்பட்ட பல குழந்தைகளை நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

அமெரிக்காவில் தாய்ப்பாலுக்கு நல்ல விலை கிடைப்பதால் பல பெண்கள் இதை தொழிலாகவே செய்து வருகின்றனர். அதிலும் தலைப்பிரசவமான குழந்தைக்கு தாயாக உள்ள பெண்களுக்கு அங்கு கடும் கிராக்கி உள்ளது. உதாரணத்துக்கு தலைப்பிரசவமாகி தனது 7 மாத குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டி வரும் ஒரு பெண், உபரியாக சுரக்கும் தாய்ப்பாலை ஃப்ரீசரில் சேமித்து வைத்து வாரம் ஒரு லிட்டர் பாலை விலையாக்கி விடுகிறார்.

இவ்வகையில் தாய்ப்பாலை விற்பவர்களை முறையான வகையில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தாத ஆன்லைன் தரகர்கள் கொடிய நோய்களின் தாக்கம் மற்றும் போதைப் பொருள் பழக்கத்திற்கு உள்ளான பெண்களிடம் இருந்தும் தாய்ப்பாலை வாங்கி அதிக விலைக்கு விற்று விடுகின்றனர்.

அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள ரஷ் மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆன்லைன் தாய்ப்பால் வங்கியில் இருந்து 101 பெண்களிடம் இருந்து பாலை வாங்கி பரிசோதனை செய்ததில் அதில் 75 மாதிரிகளில் குழந்தைகளுக்கு தீவிர நோய்களை ஏற்படுத்தும் பாக்டிரியாக்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.

...

shared via

No comments:

Post a Comment

My Blog List

Popular Posts

Popular Posts